குலெனை நாடு கடத்துவதாக ட்ரம்ப் ஒருபோதும் அர்துகானிடம் தெரிவிக்கவில்லை

வெள்ளை மாளிகை மறுப்பு

0 527

இரண்டு வாரங்­க­ளுக்கு முன்னர் நடை­பெற்ற ஜீ 20 மாநாட்டில் துருக்­கிய ஜனா­தி­பதி தைய்யிப் அர்து­கானை சந்­தித்த அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் அமெ­ரிக்­காவில் வசித்­து­வரும் முஸ்லிம் மதத் தலை­வரை நாடு கடத்­து­வ­தாக எவ்­வித வாக்­கு­று­தியும் அளிக்­க­வில்லை என சிரேஷ்ட வெள்ளை மாளிகை அதி­காரி ஒருவர் கடந்த திங்­கட்­கி­ழமை தெரி­வித்தார்.

ஜீ 20 மாநாட்டில் ஜனா­தி­பதி அர்து­கானை சந்­தித்த ட்ரம்ப் பெதுல்லாஹ் குலெனை நாடு கடத்­து­வது தொடர்பில் எவ்­வித வாக்­கு­று­தியும் அளிக்­க­வில்லை என தன்னை அடை­யா­ளப்­ப­டுத்திக் கொள்ள விரும்­பாத அந்த அதி­காரி தெரி­வித்தார்.

குலென் நாடு­க­டத்­தப்­பட வேண்டும் என துருக்கி நீண்ட கால­மாக கோரி வரு­கின்­றது. குலெ­னையும் மற்றும் ஏனை­யோ­ரையும் நாடு­க­டத்­து­வது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஆர்­ஜென்­டீ­னாவில் நடை­பெற்ற ஜீ 20 மாநாட்டில் ஜனா­தி­பதி தைய்யிப் அர்­துகா­னிடம் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால் ட்ரம்ப் தெரி­வித்­த­தாக துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொ­லுகு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தி­ருந்தார்.

ஸ்தான்­பூலில் வைத்து கொலை செய்­யப்­பட்ட சவூதி அரே­பிய ஊட­க­வி­ய­லா­ள­ரான ஜமால் கஷோக்­ஜியின் விவ­காரம் தொடர்பில் சவூதி அரே­பியா மீதான துருக்­கியின் அழுத்­தங்­களைத் தணிப்­ப­தற்கு மதத் தலை­வ­ரான பெதுல்லாஹ் குலெனை  நாடு கடத்­து­வது தொடர்பில் சிந்­திக்­க­வில்லை என கடந்த மாதம் ட்ரம்ப் தெரி­வித்­தி­ருந்தார்.

குலென் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு நிதி­ய­ளிப்­போரை இலக்கு வைத்து வெளி­நா­டு­களில் புதிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொள்­ளப்­போ­வ­தாக கடந்த வாரம் அர்துகான் அறி­வித்­தி­ருந்தார்.   அர்­துகானின் நெருக்­க­மான நண்­ப­ராக இருந்து பின்னர் எதி­ரி­யாக மாறிய  எதிர்க்­கட்சி மத­கு­ரு­வான பெதுல்லாஹ் குலென்  2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் அங்­காரா அர­சாங்­கத்­திற்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட தோல்­வியில் முடி­வ­டைந்த சதிப்­பு­ரட்­சியின் சூத்­தி­ர­தா­ரி­யாக குற்­றம்­சாட்­டப்­பட்­டுள்ளார்.

சுமார் 300 பேரின் உயிர்­களைக் காவு கொண்ட 2016 ஜுலை  15ஆம் திகதி சதிப்­பு­ரட்­சிக்கு குலெனே கார­ண­மாக இருந்த­தாக குற்றம் சுமத்­தப்­படும் அதே­வேளை பென்­சில்­வே­னி­யாவில் வசித்­து­வரும் நிலையில் அவ­ரது குழுக்கள் நாட்டின் ஆட்­சியை சீர்­கு­லைப்­ப­தற்கு நீண்ட கால அடிப்­ப­டையில் துருக்­கிய நிறு­வ­னங்கள் குறிப்­பாக இரா­ணுவம்,பொலிஸ் மற்றும் நீதித்­து­றை­யினுள் ஊடு­ரு­வு­வ­தற்கு முயற்­சித்து வரு­வ­தா­கவும் துருக்கி குற்றம் சுமத்­தி­யுள்­ளது.

குலெ­னுடன் தொடர்பு வைத்­தி­ருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும் சதிப்­பு­ரட்­சி­யோடு தொடர்பு பட்­டி­ருந்­தார்கள் என்ற சந்­தே­கத்தின் பேரிலும் துருக்­கியில் ஆயி­ரக்­க­ணக்­கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராணுவ அதிகாரிகள், அரசாங்க உத்தியோத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 110,000 இற்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது இடை நிறுத்தப்பட்டுள்ளனர்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.