ஓமான் முதலீட்டாளர் மீதான தாக்குதல் குறித்து பூரண விசாரணை நடத்தப்படும்

பாராளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிப்பேன் என்கிறார் நீதியமைச்சர்

0 134

(எம்.ஆர்.எம்.வசீம், இ.ஹஷான்)
ஓமான் முத­லீட்­டாளர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் முறை­யான விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதனால் இது­தொ­டர்­பாக பூரண விசா­ரணை மேற்­கொண்டு, அதன் அறிக்­கையை பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்க நட­வ­டிக்கை எடுப்பேன் என நீதி அமைச்சர் விஜே­தாச ராஜபக்ச தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றம் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை கூடி­ய­போது, பிர­தான நட­வ­டிக்­கை­களைத் தொடர்ந்து கம்­பஹா மாவட்­டத்தில் கட்­டான பிர­தே­சத்தில் ஓமான் நாட்டு முத­லீட்­டாளர் மீது கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்த தாக்­குதல் தொடர்பில் நீதி நிலை நாட்­டப்­ப­டாமல் இருப்­பதால் குறித்த முத­லீட்­டாளர் நாட்டை விட்டு வெளி­யேற நட­வ­டிக்கை எடுத்து வரு­வது தொடர்­பாக எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்கள் சபையில் தெரி­வித்த கருத்­துக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார்.

இதன்­போது எதிர்க்­கட்சி உறுப்­பினர் காவிந்த ஜய­வர்த்­தன தெரி­விக்­கையில், ஓமான் நாட்டு முத­லீட்­டா­ள­ருக்கு சொந்­த­மான ஆடைத்­தொ­ழிற்­சாலை கட்­டான பிர­தே­சத்தில் இயங்கி வரு­கி­றது. இதில் அந்த பிர­தே­சத்­தைச் ­சேர்ந்த 500 க்கும் மேற்­பட்ட குடும்­பங்கள் தொழில் செய்து வரு­கின்­றன. ஆனால் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்னர் குறித்த தொழிற்­சாலை வெளி­நாட்டு முத­லீ­ட்­டாளர் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்­பாக அவ­ருக்கு இது­வரை நீதி கிடைக்­க­வில்லை.

அதனால் குறித்த முத­லீட்­டாளர் நாட்டை விட்டு வெளி­யேற நட­வ­டிக்கை எடுத்து வரு­கிறார். முத­லீட்­டாளர் நாட்­டை­விட்டு சென்றால், அந்த பிர­தே­சத்தில் தொழில் செய்­து­வரும் குடும்­பங்கள் நடுத்­தெ­ருவில் விடப்­படும் அபாயம் இருக்­கி­றது. அதனால் அவ­ருக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து எழுந்த சுதர்­ஷனி பெர்­ணான்டோ புள்ளே தெரி­விக்­கையில், முத­லீட்­டா­ளர்­களை நாட்­டுக்கு கொண்­டு­வர முயற்­சித்­து­வரும் நிலையில், இருக்கும் முத­லீட்­டா­ளர்­களை அச்­சு­றுத்தி நாட்­டை­விட்டு வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கி­றது. அதனால் கட்­டான பிர­தே­சத்தில் தொழிற்­சாலை அமைத்­தி­ருக்கும் ஓமான் முத­லீட்­டா­ள­ருக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுத்து, நாடு தொடர்­பான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க­ வேண்டும் என்றார்.

அத­னைத்­தொ­டர்ந்து எழுந்த நளின் பண்­டார எம்.பி. தெரி­விக்­கையில், இந்த சம்­பவம் தொடர்­பாக இரா­ஜாங்க அமைச்சர் இந்­திக்க அநு­ருத்­த­வுக்கு எதி­ரா­கவே குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இலஞ்சம் தொடர்­பான சம்­ப­வமே இந்த தாக்­கு­த­லுக்கு கார­ண­மாகும். கடந்த வருடம் மே 9ஆம் திகதி இடம்­பெற்ற சம்­ப­வமும் இலஞ்ச கலா­சா­ரமே கார­ண­மாகும். அதனால் மீண்டும் அந்த கலா­சா­ரத்தை ஏற்­ப­டுத்தப்­போ­கி­றோமா? இவ்­வா­றான இரா­ஜாங்க அமைச்­சரின் செயற்­பா­டுகள் கார­ண­மாக முத­லீட்­டா­ளர்கள் நாட்­டுக்கு வரு­வ­தில்லை. அதனால் இரா­ஜாங்க அமைச்­சரை அந்த பத­வியில் இருந்து நீக்­கு­மாறு ஜனா­தி­ப­தியை கேட்­டுக்­கொள்­கிறோம் என்றார்.

இதன்­போது சபையில் இருந்த நீதி அமைச்சர் விஜே­தாச ராஜபக்ஷ் இதற்கு பதி­ல­ளிக்­கையில், ஓமான் முத­லீட்­டாளர் மீதான தாக்­குதல் தொடர்பில் முறை­யான விசா­ரணை இடம்­பெ­ற­வில்லை என்றே அனை­வரும் தெரி­வித்­தி­ருந்­தனர். பொலிஸாரினால் முன்வைக்கப்படும் அறிக்கையின் அடிப்படையிலேயே நீதிமன்றம் செயற்படுகிறது. அதனால் இதுதொடர்பாக பொலிஸுக்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடி இது தொடர்பாக பூரண விசாரணை ஒன்றை நடத்தி, அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்பேன் என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.