‘அரகலயவை’ இயக்கிய அமெரிக்காவின் மறை கரம்: விமல் வீரவன்சவின் நூல் அம்பலப்படுத்தும் ‘இரகசியம்’!

0 262

எம்.எல்.எம். மன்சூர்

”ஒன்­பது: ஒளிந்­தி­ருக்கும் இர­க­சியம்” என்ற பெயரில் விமல் வீர­வன்ச (சிங்­க­ளத்தில்) ஒரு நூலை எழு­தி­யி­ருக்­கிறார். அதன் வெளி­யீடு அண்­மையில் கொழும்பில் வைப­வ­ரீ­தி­யாக இடம்­பெற்­றது. சீனத் தூது­வ­ரா­ல­யத்தின் உயர் அதி­காரி ஒருவர் அந்த சபையின் முன் வரி­சையில் அமர்ந்­தி­ருந்தார் என்­பது ஒரு கூடுதல் செய்தி.

2022 மே 09, ஜூன் 09 மற்றும் ஜூலை 09 ஆகிய திக­தி­களில் இலங்­கையில் இடம்­பெற்ற நிகழ்­வுகள் இலங்கை அரசை நிர்­மூ­ல­மாக்கும் நோக்­கத்­துடன் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஒரு மேலைத்­தேச சதியின் விளை­வுகள் என்­பது அவர் அந்­நூலில் முன்­வைக்கும் முக்­கிய வாதம்.

இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் திரு­மதி ஜூலி ஷங்க், பீல்ட் மார்ஷல் சரத் பொன்­சேகா, இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா, உள­வுத்­துறை தலைவர் சுரேஷ் ஷலே மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ டி விக்­ர­ம­ரத்ன ஆகியோர் இந்த சதியில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்த முக்­கிய புள்­ளிகள் என்­கிறார் அவர். இந்­திய உளவு நிறு­வ­ன­மான ரோ இதில் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­த­தாக இப்­போ­தைக்கு கூற முடி­யாது என்ற விட­யத்­தையும் வலி­யு­றுத்­து­கிறார்.

”இரா­ணுவத் தள­பதி சவேந்­திர சில்வா, இலங்­கைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் ஷங்க் மற்றும் சரத் பொன்­சேகா ஆகி­யோரின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருந்து வந்தார்” என்­பது அவ­ரது முக்­கி­ய­மான குற்­றச்­சாட்டு.

இதற்கு ஒரு டுவிட்டர் செய்­தியின் மூலம் எதிர்­வி­னை­யாற்­றி­யி­ருக்கும் ஜூலி ஷங்க்:
”புனை­கதை என வகைப்­ப­டுத்தக் கூடிய ஒரு நூலில் எம் பி ஒருவர் ஆதா­ர­மற்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து, பச்சைப் பொய்­களைப் பரப்­பி­யி­ருப்­பது குறித்து நான் கவ­லை­ய­டைந்­துள்ளேன்” என்­கிறார்.

ஒரு விதத்தில் இந்த நூலில் அவர் வெளிப்­ப­டுத்­து­வ­தாகச் சொல்லும் ’இர­க­சியம்‘ ஒன்றும் புதி­ய­தல்ல. சில மாதங்­க­ளுக்கு முன்னர் ”ஹிரு” தொலைக்­காட்சி ‘சலக்­குண’ நிகழ்ச்­சியில் பங்­கேற்ற எல்லே குண­வங்ச தேரர் சொன்ன அதே விட­யங்கள் தான். அவர் அதில் மேல­தி­க­மாக ரோ அமைப்பின் மீதும் குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

சஜித் உள்­ளிட்ட எதிர்க்­கட்சி அர­சி­யல்­வா­திகள் அர­கல பூமி­யி­லி­ருந்து துரத்­தி­ய­டிக்­கப்­பட்ட பின்­ன­ணியில், சரத் பொன்­சேகா எவ்­வித இடை­யூ­று­க­ளு­மில்­லாத விதத்தில் ஜூலை 09 ஆம் திகதி அங்கு சமூ­க­ம­ளித்து, உரை நிகழ்த்­திய சம்­ப­வத்தை அமெ­ரிக்க சதிக்­கான நிரூ­ப­ண­மாக முன்­வைக்­கின்றார் வீர­வன்ச.

கோல்பேஸ் திட­லுக்­க­ருகில் காலி வீதி நெடு­கிலும் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ டிரக் வண்­டிகள் அமெ­ரிக்கத் தூதுவர் ஜூலியின் வேண்­டு­கோளின் பேரில் அகற்றிக் கொள்­ளப்­பட்­ட­தா­கவும் குறிப்­பி­டு­கிறார்.

மாலை­தீவில் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த கோட்­டா­பய ராஜ­பக்­ச­வுடன் தொடர்பு கொண்ட ஜூலி ஷங்க் தனது ராஜி­னாமா கடி­தத்­தையும், ரணில் விக்­ர­ம­சிங்­கவை பிர­தமர் பத­வி­யி­லி­ருந்து பதவி நீக்கம் செய்யும் கடி­தத்­தையும் உட­ன­டி­யாக அனுப்பி வைக்க வேண்­டு­மென கேட்டுக் கொண்­டி­ருந்­த­தா­கவும், அந்த இரு கடி­தங்­க­ளையும் காமினி செனரத் தயா­ரித்து, மாலை­தீ­வுக்கு அனுப்பி வைத்­த­தா­கவும் கூறும் வீர­வன்ச, அத­னை­ய­டுத்து சொல்லும் விடயம் மிக முக்­கி­ய­மா­னது:

”உங்கள் ராஜி­னாமா கடி­தத்தை மட்டும் கையொப்­ப­மிட்டு அனுப்­புங்கள். ரணில் விக்­ர­ம­சிங்­கவை பதவி நீக்கம் செய்யும் கடித்­தத்தில் கையொப்­ப­மிட வேண்டாம். இச்­சந்­த­ரப்­பத்தில் ரணில் வில­கினால் அது எமது குடும்­பத்தின் பாது­காப்­புக்கு ஒரு பெரும் அச்­சு­றுத்­த­லாக அமை­யலாம்” என்ற வேண்­டு­கோ­ளுடன் கொழும்­பி­லி­ருந்து சென்ற ஒரு தொலை­பேசி அழைப்­பை­ய­டுத்து ரணில் விக்­ர­ம­சிங்­கவை பதவி நீக்கம் செய்யும் கடி­தத்தில் கோட்­டா­பய கையொப்­ப­மி­ட­வில்லை என்­பது வீர­வன்­சவின் வாதம். ரணில் பதவி நீக்­கப்­பட வேண்டும் என்ற விட­யத்தை இந்­தி­யாவே அதிகம் வலி­யு­றுத்­தி­ய­தாக கூறப்­ப­டு­கி­றது.

அந்த நிர்­ண­ய­க­ர­மான தொலை­பேசி அழைப்பில் கொழும்­பி­லி­ருந்து பேசி­யவர் பசில் ராஜ­பக்ச என்­கிறார் நூலா­சி­ரியர்.

சபா­நா­யகர் மஹிந்த யாபா அபே­வர்­தன தலை­மையில் ஓர் இடைக்­கால அர­சாங்­கத்தை அமைக்கச் செய்­வதே அமெ­ரிக்­காவின் ‘Plan A’ ஆக இருந்­தது என்றும், ஜேவிபி யும் கூட (இந்த அமெ­ரிக்கச் சதியை சரி­வர புரிந்து கொள்­ளாமல்) அத்­திட்­டத்­திற்கு உடன்­பட்­டி­ருந்­தது என்று குறிப்­பி­டு­கி­றது இந்நூல். (கடா­பியின் மர­ணத்தின் பின்னர் லிபி­யா­விலும் இதே விதத்தில் பாரா­ளு­மன்ற சபா­நா­யகர் தலை­மையில் ஓர் இடைக்­கால அரசு அமைக்­கப்­பட்­டி­ருந்­தது).

சுதந்­தி­ரத்தின் பின்னர் இலங்­கையில் முதல் தட­வை­யாக இடம்­பெற்ற மாபெரும் மக்கள் எழுச்­சியை எந்த அள­வுக்கு கொச்­சைப்­ப­டுத்த முடி­யுமோ அந்த அள­வுக்கு கொச்­சைப்­ப­டுத்தும் வீர­வன்ச, அந்த அவ­ச­ரத்தில் சரத் பொன்­சேகா மற்றும் சவேந்­திர சில்வா போன்­ற­வர்­களை – ‘சிங்­கள இனத்தை எதி­ரி­க­ளி­ட­மி­ருந்து மீட்டுத் தந்த மாபெரும் வெற்றி வீரர்­க­ளாக‘ யாருக்கு அவர் புக­ழாரம் சூட்­டி­னாரோ அவர்­களை – ‘அமெ­ரிக்­காவின் கையாட்கள்‘ எனக் குறிப்­பி­டு­கிறார்.

அரக­ல­யவில் பங்­கேற்ற நடுத்­தர வர்க்கம் (தாம் என்ன செய்­கின்றோம் என்­பதை அறி­யா­ம­லேயே) ‘தோசைக் கல்லை நன்கு சூடாக்கிக் கொடுத்­தது’ என்­பதும், அதில் ஜூலி ஷங்க் ‘அநா­யா­ச­மாக தோசையை வார்த்­தெ­டுத்தார்‘ என்­பதும் இந்நூல் முன்­வைக்கும் முதன்­மை­யான வாதம்.

பசில் ராஜ­பக்­ச­வுடன் தனக்­கி­ருக்கும் வன்­மத்தை தீர்த்துக் கொள்ளும் ஒரு வடி­கா­லாகத் தான் இந்த நூலைப் பயன்­ப­டுத்திக் கொண்­டி­ருக்­கிறார் வீர­வன்ச. 2022 இல் நாட்டில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­கடி, பசில் ராஜ­பக்ச வேண்­டு­மென்றே திட்­ட­மிட்டு, உரு­வாக்­கிய ஒரு நெருக்­கடி என்ற விசித்­தி­ர­மான வாதத்­தையும் அவர் முன்­வைக்­கிறார்.
அதன் மூலம் ஏனைய ராஜ­பக்­ச­க­ளையும், அவர்­க­ளு­டைய சிங்­கள – பௌத்த பேரி­ன­வாத பெருந்­திட்­டத்­துக்கு ஆத­ர­வையும், அனு­ச­ர­ணை­யையும் வழங்­கிய பிக்­குகள், ஊடக முத­லா­ளிகள், பெரு வணி­கர்கள் மற்றும் (தன்­னையும் உள்­ளிட்ட) சிங்­கள தேசி­ய­வா­திகள் ஆகிய தரப்­புக்­களை நிர­ப­ரா­தி­க­ளாக்­கு­வ­தற்கு அவர் முயற்­சிக்­கிறார்.
‘அரக­லய’ முடி­வ­டைந்து கிட்­டத்­தட்ட ஒரு வரு­டத்தின் பின்னர் வீர­வன்ச போன்ற ஒருவர் இவ்­விதம் சதித் திட்­டங்கள் (Conspiracy Theories) குறித்து பேச முற்­பட்­டி­ருப்­பது ஏன்? அதற்­கான நிர்ப்­பந்தம் என்ன?

அடுத்து வரும் தேர்­தல்­க­ளுக்­கான ஒரு வியூகம் என்­பதைத் தவிர இதற்கு வேறு கார­ணங்கள் இருக்க முடி­யாது என்றே தோன்­று­கி­றது. சுமார் 20 – 25% அள­வி­லி­ருக்கும் சிங்­கள பௌத்த வாக்­கா­ளர்­களை – ‘சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு ஆபத்து’ என்ற தேர்தல் சலோ­கத்தை கேட்டு, உட­ன­டி­யாக உணர்ச்­சி­வ­சப்­படும் அப்­பாவி சிங்­கள வாக்­கா­ளர்­களை – இலக்கு வைத்து மேற்­கொள்­ளப்­படும் ஒரு காய் நகர்த்தல் இது.

இந்த வாக்கு வங்கி இன்­னமும் மஹிந்த ராஜ­பக்­சவின் கைகளில் தான் இருந்து வரு­கி­றது. வீர­வன்­சவோ அல்­லது சம்­பிக ரண­வக்­கவோ அதனை இல­குவில் அப­க­ரித்துக் கொள்ள முடி­யாது. அடுத்த தேர்­தல்­க­ளிலும் அந்த வாக்­குகள் ராஜ­பக்­ச­க­ளுக்கோ அல்­லது அவர்கள் கைகாட்டும் ஒரு­வ­ருக்கோ தான் செல்ல முடியும். ராஜ­பக்­சவின் சிங்­கள பௌத்த செயல்­திட்­டத்தின் முக்­கிய கோட்­பாட்­டா­ளர்கள்/ பரப்­பு­ரை­யா­ளர்கள் அதி­க­மா­ன­வர்கள் இப்­பொ­ழுது வீர­வன்­ச­வுடன் கைகோர்த்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு (பசிலைத் தவிர) ராஜ­பக்ச சகோ­த­ரர்­க­ளுடன் பெரி­தாக பிரச்­சி­னைகள் எது­வு­மில்லை (இந்த நூல் அதற்­கான தெளி­வான ஓர் அத்­தாட்சி).

பொது வெளியில் மஹிந்த ராஜ­பக்­சவை இலக்கு வைத்து போலி விமர்­சனக் கணை­களை முன்­வைத்­தாலும் கூட, மறை­மு­க­மாக அவரை நோக்கி – அதற்­கூ­டாக அவ­ரது ஆத­ரவுத் தளத்தை நோக்கி – நீட்­டப்­படும் ஒரு நேசக் கர­மா­கவே இந்­நூலைப் பார்க்க வேண்­டி­யி­ருக்­கி­றது. ஜேவிபி/ என்­பிபி கூட்­ட­ணியைத் தவிர, ஏனைய அர­சியல் கட்­சிகள் அனைத்தும் இப்­பொ­ழுது எதிர்­கொண்டு வரும் தடு­மாற்ற நிலை அடுத்து வரும் தேர்­தல்­களை எதிர்­கொள்­வது எப்­படி, அவற்றின் போது முன்­வைக்க வேண்­டிய சுலோ­கங்கள் எவை என்­பது.

SLMC/ACMC போன்ற கட்­சிகள் கொழும்பு அர­சி­யலில் யாருடன், எதற்­காக கூட்டுச் சேர்­வது, அவ்­விதம் உரு­வாக்கிக் கொள்ளப் போகும் கூட்­ட­ணி­களை தமது வாக்­கா­ளர்­க­ளிடம் நியா­யப்­ப­டுத்­து­வது எப்­படி என்ற தடு­மாற்ற நிலையில் இப்­பொ­ழுது இருந்து வரு­கின்­றன. TNA யையும் உள்­ளிட்ட தமிழ்க் கட்­சி­களைப் பொறுத்­த­வ­ரை­யிலும் கூட அதே தடு­மாற்ற நிலை நில­வு­வதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

இந்தச் சூழ்­நி­லையில், சிங்­களத் தேசி­ய­வா­தத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தரப்பில் தாம் இருந்து வர வேண்டும் என்ற நிலைப்­பாட்டைக் கொண்­டி­ருக்கும் விமல் வீர­வன்ச போன்­ற­வர்கள் ‘அர­க­லய ஒரு மேலைத்­தேச சதி’ என்ற சுலோ­கத்தை இல­குவில் அந்த வாக்கு வங்­கி­யிடம் சந்­தைப்­ப­டுத்த முடி­யு­மென்­பதை தெரிந்து வைத்­தி­ருக்­கி­றார்கள்.
ஏற்­க­னவே, நளின் டி சில்வா மற்றும் சேன தோர­தெ­னிய போன்­ற­வர்கள் ‘அர­க­லய சிங்­கள பௌத்­தர்­க­ளுக்கு எதி­ரான ஒரு முன்­னெ­டுப்பு’ என்ற கருத்­தாக்­கத்தை முன்­வைத்­துள்­ளார்கள். அரகல பூமியில் காணப்­பட்ட ‘மித­மிஞ்­சிய அள­வி­லான கிறிஸ்­தவ – முஸ்லிம் பிர­சன்­னத்­தையும்’ அவர்கள் விமர்­சித்­துள்­ளார்கள்.

“Culture of Galle Face Protestors” என்ற தலைப்­பி­லான நீண்ட கட்­டு­ரையில் சேன தோர­தெ­னிய முன்­வைத்­தி­ருக்கும் அவ­தா­னிப்­புக்கள் சுவா­ர­சி­ய­மா­னவை:

”ஜனா­தி­பதி செய­ல­கத்தின் முன்­புறச் சுவர்­களில் ஏப்ரல் 17 ஆம் திகதி லேசர் தொழில்­நுட்­பத்தின் மூலம் சமஷ்டி மற்றும் ஈழ ஆத­ர­வா­ளர்­களின் ‘ஒரு­மித்த தேசம்’ என்ற சுலோகம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டது. பிரி­வி­னை­வா­தி­க­ளி­னதும், TNA இனதும் அபி­லா­ஷை­களைப் பூர்த்தி செய்து வைக்கும் விதத்தில் அங்கு தமிழில் தேசிய கீதம் இசைக்­கப்­பட்­டது….. விடு­தலைப் புலிகள் இயக்­கத்தின் தோல்­வியில் துவண்டு போயி­ருந்த குழுக்கள் கோல்பேஸ் திடலில் தஞ்சம் புகுந்­தி­ருந்­தன. புலி­களின் இறுதிக் கோட்­டை­யான முள்­ளி­வாய்க்கால் வீழ்ச்சி அங்கு நிறைவு கூரப்­பட்­டது….. இலங்கை அர­சுக்கு சவால் விடுக்கும் விதத்தில் பிர­பா­க­ரனின் புகைப்­படம், புலிச் சின்னம் மற்றும் ஈழத்தின் வரை­படம் என்­பன அங்கு காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன…..”

”புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் தமது சமய, கலா­சார தளை­களை முற்­றாகக் களைந்து விட்டு, ஏனைய இனங்­களைச் சேர்ந்த ஆண்­க­ளுடன் நெருங்கிப் பழ­கு­வதை எமது வாழ்வில் முதல் தட­வை­யாக நாங்கள் பார்த்தோம். பிக்கு ஒரு­வரை மழை­யி­லி­ருந்து பாது­காத்துக் கொள்­வ­தற்­கென ஒரு முஸ்லிம் யுவதி குடை பிடித்துக் கொண்­டி­ருப்­பதை எமது வாழ்வில் முதல் தட­வை­யாக நாங்கள் பார்த்தோம். கத்­தோ­லிக்க கன்­னி­யாஸ்­தி­ரிகள் பௌத்த பிக்­கு­க­ளுக்கு அன்­ன­தானம் வழங்­கு­வதை எமது வாழ்வில் முதல் தட­வை­யாக நாங்கள் பார்த்தோம். பிறப்பால் பௌத்தரான ஒரு பல்கலைக்கழக மாணவி அங்கு கன்னியாஸ்திரிகளின் உடையிலிருந்தார். குடை பிடித்த முஸ்லிம் பெண்ணும் கூட அவ்விதம் களமிறக்கப்பட்ட வேறொருவராக இருந்திருக்க முடியும்….. கத்தோலிக்க அருட் தந்தையர், கன்னியாஸ்திரிகள், முஸ்லிம் மௌலவிமார் மற்றும் ஏனைய முஸ்லிம் சகோதரர்கள் அங்கு பெரும் எண்ணிக்கையில் திரண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். அதற்கான விளக்கம் என்ன?”

”கோல்பேஸ் திடலில் ஒன்று கூடியிருந்த பல்வேறு இனத்துவ மற்றும் சமயக் குழுக்கள் தமது சொந்த நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுப்பவர்களாக இருந்து வந்தார்கள் என்பதே எமது அனுமானம்….. அந்த எதிர்ப்புக் கலாசாரம் தேச விரோத இயல்பைக் கொண்டது; சிங்களவர்களுக்கு எதிரானது; அது சமஷ்டி ஆதரவு, ஈழ ஆதரவு கலாசாரம்…..”
வீரவன்சவின் நூலின் உள்ளடக்கமும் இந்தப் புள்ளியையே தொட்டுச் செல்கிறது. ஏனென்றால் இவ்விதமான பிரசாரங்களை நம்புவதற்கு இலங்கையில் இன்னமும் நிறையப் பேர் இருந்து வருகிறார்கள் என்ற விடயத்தை மஹிந்த ராஜபக்சவை போலவே அவருடைய முதன்மைச் சீடரான வீரவன்சவும் நன்கு அறிந்து வைத்துள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.