உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள்: ஸாதிக் பிரதான சூத்திரதாரியா? சி.ரி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணை

கொழும்பு நீதிவானின் உத்தரவை பெற்று மீண்டும் தடுப்புக் காவலில் எடுத்து நடவடிக்கை

0 225

(எம்.எப்.அய்னா)
கைது செய்­யப்­பட்டு வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள மொஹம்மட் இப்­ராஹீம் ஸாதிக் அப்­துல்லாஹ், 2019 ஏப்ரல் 21 தாக்­கு­தல்­களின் பிர­தான சூத்­தி­ர­தா­ரியா என்ற கோணத்தில் சிறப்பு விசா­ரணை ஒன்று ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லி­ருந்து கிடைக்கப் பெற்­ற­தாக கூறப்­படும் தகவல் ஒன்­றினை மையப்­ப­டுத்தி பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவின் (சி.ரி.ஐ.டி.) பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்­விஸின் நேரடி கட்­டுப்­பாட்டில் இந்த விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­நி­லையில், விசா­ர­ணை­களின் நிமித்தம் விளக்­க­ம­றி­யலில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த ஸாதிக் அப்­துல்லாஹ், பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் விசா­ர­ணை­யா­ளர்­களின் தடுப்புக் காவலின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளார்.

இதற்­காக 3 நாள் விஷேட தடுப்புக் காவல் அனு­மதி, சி.ரி.ஐ.டி.யினரால் கொழும்பு நீதிவான் நீதி­மன்­றிடம் இருந்து, எம்.சி.44231/8/20 எனும் வழக்குக் கோவையின் ஊடாக இடை­யீட்டு மனு தாக்கல் செய்­யப்­பட்டு பெற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.

அதன்­படி நேற்று முன் தினம் (25) முதல் ஸாதிக் அப்­துல்­லாஹ்­விடம் நார­ஹேன்­பிட்டி பகு­தியில் உள்ள சி.ரி.ஐ.டி. தலை­மை­ய­கத்தில் தடுத்து வைத்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளன.

ஸாதிக் அப்­துல்­லாஹ்­வுக்கு எதி­ராக கொழும்பு மேல் நீதி­மன்றில் எச்.சி. 2272/21 மற்றும் புத்­தளம் மேல் நீதி­மன்றில் 10721/2021 ஆகிய இலக்­கங்­களின் கீழ் இரு குற்றப் பகிர்வுப் பத்­தி­ரங்கள் தொடர்பில் விசா­ரணை நடாத்­தப்­படும் நிலையில், கம்­பளை நீதிவான் நீதி­மன்றில் 432/18 ஆம் இலக்­கத்தின் கீழும் வழக்­கொன்று நிலு­வையில் உள்­ளது.

முன்­ன­தாக ஏப்ரல் 21 தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­தி­ய­வர்­க­ளுக்கு உதவி ஒத்­தா­சை­களை வழங்­கி­யமை குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்கை வம்­சா­வ­ளி­யினர் எனக் கூறப்­படும் அஹமட் தாலிப் லுக்மன் தாலிப் அவ­ரது மக­னான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்­துல்லாஹ் ஆகி­யோரைக் கைது செய்ய ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.

குறித்த இருவர் உள்­ளிட்ட 5 பேர் குறித்து சிறப்பு விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்து , ஏப்ரல் 21 தாக்­கு­தல்­க­ளுடன் அவர்­க­ளுக்கு உள்ள தொடர்­பு­களை வெளி­ப்ப­டுத்­து­மாறு கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி அப்­போ­தைய சட்ட மா அதிபர் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி தப்­புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபர் சந்­தன விக்­ர­ம­ரத்­ன­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார். அபு ஹிந், அஹமட் தாலிப் லுக்மான் தாலிப் அவ­ரது மக­னான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்­துல்லாஹ், ரிம்சான், புலஸ்­தினி மகேந்ரன் எனும் சாரா ஜஸ்மின் ஆகியோர் தொடர்­பி­லேயே இந்த சிறப்பு விசா­ர­ணை­களை நடத்­து­மாறு சட்­டமா அதி­பரால் இவ்­வாறு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே, பயங்­க­ர­வாத தடுப்பு மற்றும் புல­னாய்வுப் பிரி­வினர் லுக்மான் தாலிப், அபூ அப்­துல்லாஹ் ஆகி­யோரைக் கைது செய்ய சிவப்பு அறி­வித்தல் கோரி­யி­ருந்­தனர்.

ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் குறித்து விசா­ரணை செய்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு, தனது இறுதி அறிக்­கையில், 17 ஆம் அத்­தி­யா­யத்தில் வெளி­நாட்டு தலை­யீ­டுகள் எனும் தலைப்பின் கீழ் சிறப்பு விட­யங்­களை முன்­வைத்­துள்­ளனர். ஆணைக் குழு அறிக்­கையின் 244 ஆம் பக்கம் முதல் ஆரம்­ப­மாகும் குறித்த விட­யங்­களில், 251 ஆம், 252 ஆம் பக்­கங்­களில் லுக்மான் தாலிப், அபூ அப்­துல்லாஹ் தொடர்பில் சில விட­யங்கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­துடன், அது தொடர்பில் விஷேட அவ­தானம் செலுத்த பரிந்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது.

அஹமட் தாலிப் லுக்மான் தாலிப் அவ­ரது மக­னான லுக்மான் தாலிப் அஹமட் எனும் அபூ அப்­துல்லாஹ் ஆகியோர் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்­கை­யர்­க­ளாவர். இவர்கள் மீது பயங்­க­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டைய குற்­றச்­சாட்­டுக்கள் உள்ள நிலையில், மாவ­னெல்லை புத்தர் சிலை உடைப்பு விவ­கார பிர­தான சூத்­தி­ர­தா­ரி­யான சாதிக் உள்­ளிட்­டோ­ருடன் இலங்­கையில் மேலும் 4 மாலைதீவு பிர­ஜை­க­ளுடன் இணைந்து அடிப்­ப­டை­வாத கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­பட்­டமை தொடர்­பிலும் ஆணைக் குழு அறிக்­கையில் விப­ரிக்­கப்­பட்­டுள்­ளன.

எனினும் மேற்படி குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் லுக்மான் தாலிப்பும் அவரது குடும்பத்தினரும் மறுத்துள்ளதுடன் இது தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமது சட்டத்தரணிகள் ஊடாக அறிவித்திருந்தனர்.

இத­னை­விட 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி, சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொ­லை­தா­ரிகள் தற்­கொலை செய்­து­கொண்ட பின்னர் முன்­னெ­டுக்­கப்­பட்ட பரி­சோ­த­னையின் போது அங்­கி­ருந்து ஒரு தொகை அவுஸ்­தி­ரே­லிய சிம் அட்­டைகள் மீட்­கப்­பட்­டி­ருந்­த­தாக குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தின் முன்னாள் பணிப்­பாளர் ஷானி அபேசேகர ஆணைக் குழுவுக்கு வழங்கியுள்ள சாட்சியத்தையும் ஆணைக் குழு விஷேடமாக கவனித்திருந்தது.
இவ்வாறான நிலையிலேயே தற்போது பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் அவுஸ்திரேலிய தகவல் ஒன்றினையும் மையப்படுத்திய விசாரணைகளுக்காக ஸாதிக் அப்துல்லாஹ்வை மீள தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளப்படுத்தும் விசாரணையாக இது பரவலாக பார்க்கப்படுகின்றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.