புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம் : சஹ்ரானின் மைத்துனர் உட்பட மூவருக்கு பிணை

0 209

(எம்.எப்.எம்.பஸீர்)
மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­ப­டாத மேலும் மூவர் பிணையில் விடு­விக்­கப்­பட்­டுள்­ளனர்.

சஹ்­ரானின் மனைவி பாத்­திமா ஹாதி­யாவின் சகோ­த­ர­ரான மொஹம்மட் அன்சார் உள்­ளிட்ட மூவரே இவ்­வாறு சட்ட மா அதி­பரின் ஒப்­பு­த­லுடன் பிணையில் செல்ல மாவ­னெல்லை நீதிவான் நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­துள்­ளது.

ஏற்­க­னவே இவ்­வி­வ­கா­ரத்தில் இரண்டு, மூன்று வரு­டங்­க­ளாக விளக்­க­ம­றி­யலில் இருந்­து­வந்த வழக்குத் தொட­ரப்­ப­டாத 13 பேர், கடந்த 2022 மே 4 ஆம் திகதி மாவ­னெல்லை நீதிவான் தம்­மிக ஹேம­பா­ல­வினால் விடு­விக்­கப்­பட்­டனர். அத்­துடன் அப்­போது மேலும் 7 பேரை பிணையில் விடு­விக்க நீதிவான் உத்­த­ர­விட்­டி­ருந்தார். சட்­டமா அதி­பரின் ஆலோ­ச­னைக்கு அமைய இந்த உத்­த­ர­வு­களைப் பிறப்­பித்த நீதிவான், விசா­ர­ணைகள் நிறை­வ­டை­யாத 10 பேரின் விளக்­க­ம­றியல் காலத்தை மட்டும் நீடித்து உத்­த­ர­விட்டார்.

இவ்­வா­றான நிலை­யி­லேயே கடந்த திங்­க­ளன்று (2) இந்த விவ­கா­ரத்தில் விளக்­க­மறி­யலில் இருந்து வந்த சஹ்­ரானின் மைத்­து­ன­ரான அன்சார், பெண்­ணொருவர் உள்­ளிட்ட மூவரை பிணையில் செல்ல நீதி­மன்றம் அனு­ம­தி­ய­ளித்­தது.
மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் 46 பேர் சந்­தே­கத்தில் கைது செய்­யப்­பட்­டனர்.

அவர்­களில் 16 பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக மட்டும் கேகாலை மேல் நீதி­மன்றில் வழக்கு தொட­ரப்­பட்­டுள்ள நிலையில், தற்­போது அவ்­வ­ழக்கு நெளபர் மெள­லவி மற்றும் சாஜித் மெள­லவி ஆகி­யோ­ருக்கு எதி­ராக மட்டும் நடக்­கி­றது. அவ்­வி­சா­ர­ணைகள் எதிர்­வரும் ஜன­வரி 10 ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது. குறித்த வழக்கு சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றில் ( கேகாலை) நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்ற அமர்வு முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ள­ப்­படு­கின்­றது.

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்ட 16 பிர­தி­வா­தி­களில் மூவரை வழக்­கி­லி­ருந்து விடு­வித்த சப்­ர­க­முவ மாகாண மேல் நீதி­மன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதி­ப­திகள் அமர்வு (ட்ரயல் அட் பார் ) மேலும் 11 பேருக்கு 7 வரு­டங்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட 3 மாத கால சிறைத் தண்­ட­னையை அளித்து கடந்த 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி தீர்ப்­ப­ளித்­தது. குறித்த வழக்கில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழான குற்­றச்­சாட்­டுக்­களை விலக்­கிக்­கொள்ள சட்ட மா அதிபர் இணங்­கிய நிலையில், தண்­டனை சட்டக் கோவையின் கீழ் முன்­வைக்­கப்­பட்ட குற்­றச்­சாட்­டினை, விரை­வான விடு­தலை கருதி 11 பிர­தி­வா­திகள் ஏற்­றுக்­கொண்ட நிலை­யி­லேயே அவர்­க­ளுக்கு ஒத்தி வைக்­கப்­பட்ட சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

குற்­றச்­சாட்­டுக்­களை 8 ஆவது பிர­தி­வா­தி­யாக பெய­ரி­டப்­பட்­டுள்ள அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, 9 ஆவது பிரதிவாதியான அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகியோர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அவ்விருவருக்கு எதிராக மட்டும் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தகக்து.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.