வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு உதவி செய்யுங்கள்

முஸ்லிம் சமூகத்திடம் ஜம்இய்யதுல் உலமா, பள்ளிவாசல்கள் சம்மேளனம் கோரிக்கை

0 236

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பாகிஸ்­தானில் வெள்ள அனர்த்­தத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மில்­லியன் கணக்­கான மக்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்­டு­மாறு அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உலமா, கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ளனம் என்பன முஸ்லிம் சமூ­கத்­திடம் கோரிக்கை விடுத்­துள்­ளன.

பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள பாகிஸ்தான் மக்­க­ளுக்கு உதவும் வகையில் நாளை 9 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும், எதிர்­வரும் 16 ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழ­மையும், ஜும்ஆ தொழு­கையின் பின்பு பள்­ளி­வா­சல்­களில் நிதி சேக­ரிக்கும் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன.

கொழும்பு மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் அஸ்லம் ஒத்மான் மற்றும் கண்டி மாவட்ட பள்­ளி­வா­சல்கள் சம்­மே­ள­னத்தின் தலைவர் கே.ஆர்.ஏ.சித்திக் முஸ்­லிம்கள் நிர்க்­க­தி­யா­கி­யுள்ள பாகிஸ்தான் மக்­க­ளுக்­காக தங்­களால் இயன்ற நிதி­யு­த­வி­களை வழங்­கு­மாறு வேண்­டுகோள் விடுத்­துள்­ளனர்.

இலங்­கை­யி­லுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் உத­விகள் நிவா­ர­ணப்­பொ­ருட்­க­ளாக இல்­லாது, நிதி­யு­த­வி­யாக வழங்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளதால் நிதி உதவி மாத்திரமே வழங்கப்படவேண்டும் என கோரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.