அசரிகம பள்ளி நிர்வாகி படுகொலை: சம்பவம் தொடர்பிலான அறிக்கை இதுவரை வக்பு சபைக்கு கிடைக்கப்பெறவில்லை

நீதிமன்றம் ஊடாக நடவடிக்கை என்கிறார் சப்ரி ஹலீம்தீன்

0 231

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
அனு­ரா­த­புரம் அச­ரி­கம ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வா­கி­யொ­ருவர் அண்­மையில் சக நிர்­வா­கி­யொ­ரு­வரால் தாக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­ட­தாகக் கூறப்­படும் சம்­பவம் தொடர்­பான அறிக்­கைகள் இது­வரை வக்பு சபைக்கு கிடைக்க பெற­வில்லை. அறிக்­கைகள் சம்­ப­வத்தை உறு­திப்­ப­டுத்­தினால் உட­ன­டி­யாக சம்­பந்­தப்­பட்ட பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பதவி நீக்கம் செய்­யப்­ப­டு­வார்கள். மேல­திக நட­வ­டிக்­கைகள் நீதி­மன்றம் மூலம் முன்­னெ­டுக்­கப்­படும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி சப்ரி ஹலீம்தீன் தெரி­வித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரி­விக்­கையில் இச்­சம்­பவம் தொடர்பில் சம்­பவம் இடம்­பெற்ற பிராந்­தி­யத்­துக்குப் பொறுப்­பான திணைக்­க­ளத்தின் கள உத்­தி­யோ­கத்தர் மற்றும் அனு­ரா­த­புரம் பர­சன்­கஸ்­வெவ பொலிஸ் நிலை­யத்­தி­லி­ருந்து அறிக்கை கோரப்­பட்­டுள்­ளது. அறிக்­கைகள் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு கிடைக்­கப்­பெற்­றதும் திணைக்­களம் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கும்.

வக்பு சபை தனது அமர்வில் இது தொடர்­பாக ஆராய்ந்து தீர்­மானம் எடுக்கும் என்றார்.
ஹஜ்ஜுப் பெருநாள் உழ்­ஹிய்­யா­வுடன் தொடர்­பு­பட்ட முரண்­பாட்­டை­ய­டுத்து பள்ளி நிர்­வா­கி­களில் ஒரு­வ­ரான கட்­டுத்­தம்பி ஷரீப் எனும் 67 வய­தான நபர் தாக்கி கொலை செய்­யப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இச்சம்பவத்தில் பள்ளிவாசல் நிர்வாகியாக புதிதாக தெரிவு செய்யப்பட்ட ஒருவரே பிரதான சந்தேக நபராக இனங்காணப்பட்டுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.