வக்பு சொத்துக்கு உரிமை கோரும் தனிநபர்; காப்பாற்றப்படுமா கபூரியா?

0 450

ஏ.ஆர்.ஏ.பரீல்

பல தசாப்த வர­லாற்­றினைக் கொண்ட மஹ­ர­க­மயில் அமைந்­துள்ள கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரியும், கல்­லூ­ரியின் பொரு­ளா­தார நன்மை கருதி வக்பு செய்­யப்­பட்ட மத்­திய கொழும்பு கிரேண்ட்பாஸில் சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த சுமார் இரண்டரை ஏக்கர் காணியும் இன்று சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளன.
வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்ள கபூ­ரி­யா­வையும் அதன் சொத்­துக்­க­ளையும் கையா­டு­வ­தற்கு வக்பு செய்த குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவரே முனைவது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். வக்பு சொத்­துக்கள், அல்­லாஹ்வின் சொத்­துகள் அதில் கைவைப்­ப­வர்கள் நிச்­சயம் அல்­லாஹ்­வினால் தண்­டிக்­கப்­ப­டு­வார்கள்.

கபூ­ரி­யாவும், சுலைமான்
வைத்­தி­ய­சாலை காணியும்
மர்ஹும் எம்.டீ.எச்.அப்துல் கபூரின் சிந்­த­னையில் 1931 இல் உரு­வா­னதே ‘மஹ­ர­கம கபூ­ரியா கல்­லூ­ரி’­. இக்­கல்­லூரிக்கென 17.5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.
இதே வேளை இக்­கல்­லூ­ரியின் செயற்­பா­டு­க­ளுக்­கா­க மர்ஹூம் அப்துல் கபூர் மத்­திய கொழும்பு கிரேண்ட்­பாஸில் 2.5 ஏக்கர் (சுலைமான் வைத்­தி­ய­சாலை அமைந்­தி­ருந்த) காணியை வக்பு செய்­தி­ருந்தார்.

1931 முதல் 1938 வரை கபூ­ரி­யாவின் ஸ்தாபக அதி­ப­ராக இந்­தி­யாவைச் சேர்ந்த அலியார் மரிக்கார் கட­மை­யாற்­றினார். 1936 முதல் மெள­லானா உமர் ஹஸ­ரத்தும், 1963 முதல் சம்­சுதீன் ஹஸ­ரத்தும், 1982 முதல் 2010 வரை அஷ்ஷெய்க் முபாரக் ஹஸ­ரத்தும் இவர்­களைத் தொடர்ந்து ஏ.ஆர்.எம்.மஹ்ரூப், எம்.எம்.எம்.லாபீர், எம்.எப்.எம். ஹஸன் பாரிஸ் ஆகியோர் அதி­பர்­க­ளாக பணி­யாற்­றி­யுள்­ளனர். தற்­போது எஸ்.எம்.நபார் அதி­ப­ராக பணி­யாற்­று­கின்றார்.

1995க்குப் பிற்­பட்ட காலத்தில் அதிபர் முபாரக் ஹஸ­ரத்­திற்கும் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உறவில் விரிசல் ஏற்­பட்­டது. இதன் கார­ண­மாக நம்­பிக்­கை­யா­ளர்­களால் கொழும்பு, கிரேண்ட்பாஸ் சுலைமான் வைத்­தி­ய­சாலை மூலம் பெறப்­பட்டு வந்த உத­வித்­தொகை எவ்­வித முன்­ன­றி­வித்­த­லு­மின்றி 1994-–2013 வரை இடை நிறுத்­தப்­பட்­டது.
1980 இல் இக்­கல்­லூரி காணி மற்றும் உட­மைகள் அர­சாங்­கத்தால் சுவீ­க­ரிக்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதற்கு எதி­ரான போராட்­டத்தில் கல்­லூ­ரியின் பழைய மாணவர் சங்கம் முக்­கிய பங்­கினை வகித்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கல்­லூ­ரியை மேலும் தர­மு­யர்த்தும் நோக்கில் நம்­பிக்­கை­யா­ளர்­க­ளுக்கும், முகா­மைத்­துவ சபைக்­கு­மி­டையில் 2018.05.09 ஆம் திகதி புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை ஒன்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. என்­றாலும் பின்பு நம்­பிக்­கை­யாளர் சபை எது­வித கார­ண­மு­மின்றி அவ் ஒப்­பந்­தத்தை ரத்துச் செய்­தது.

இந்­நி­லையிலேயே நம்­பிக்­கை­யா­ளர்­களில் ஒரு­வர் கபூ­ரி­யா­வையும் சொத்­துக்­க­ளையும் குடும்பச் சொத்­தாக கருதி செயற்­பட்டு வரு­கிறார்.
”கபூ­ரி­யா­வுக்கு சொந்­த­மான காணிகள் வக்பு செய்­யப்­ப­ட­வில்லை. அது எமது தனியார் உடமை. பழைய மாண­வர்கள் இதனை அத்­து­மீறி கைய­கப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்” என அவர் தெரி­வித்து வருவதுடன் பல சட்ட நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளார். நம்­பிக்­கை­யா­ளர்­களால் பழைய மாண­வர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸில் முறைப்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

வக்பு நியாய சபையில் வழக்கு
கபூ­ரியா அர­புக்­கல்­லூரி அதன் நம்­பிக்­கை­யா­ளர்­களால் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைக்கு தீர்வு பெற்­றுக்­கொள்­வ­தற்­காக பழைய மாணவர் சங்கம் (முகா­மைத்­துவ சபை) வக்பு நியாய சபையில் வழக்கு தாக்கல் செய்­தது. கபூ­ரியா அர­புக்­கல்­லூ­ரிக்கு கிடைக்க வேண்­டிய வரு­மா­னங்கள் கிடைக்­காமை, வக்பு சொத்து தனியார் நிறு­வ­னத்­துக்கு (கிரேணட்பாஸ் காணி) குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளமை என்­ப­ன­வற்­றுக்கு எதி­ரா­கவே இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. தற்­போது வழக்கு விசா­ர­ணையில் உள்­ளது.

இந்­நி­லையில் வக்பு நியாய சபை கல்­லூ­ரியை நிர்­வ­கிப்­ப­தற்கு 11 பேர் கொண்ட முகா­மைத்துவக் குழு­வொன்றை நிய­மித்­தது. இத­னை­ய­டுத்து கல்­லூ­ரியின் நம்­பிக்­கை­யா­ளர் சபை பழைய மாணவர் சங்கம் தாக்கல் செய்­துள்ள வழக்­கு­க­ளுக்கு எதி­ராக மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் (Appeal Court) மனு­தாக்கல் செய்­தது.

மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றில் கல்­லூரி நம்­பிக்­கை­யா­ளர்­க­ளினால் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள மனுவில் கபூ­ரியா கல்­லூ­ரியும், சொத்­துக்­களும் தர்ம நம்­பிக்கை நிதி­யத்தின் கீழ் உள்­ள­டங்­காது. இது குடும்ப நம்­பிக்கை நிதி­ய­மாகும் என மனுவில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் வக்பு நியாய சபை­யினால் நிய­மிக்­கப்­பட்ட பழைய மாண­வர்­களை உள்­ள­டக்­கிய முகா­மைத்­துவ குழு­வுக்கு மேன்­மு­றை­யீட்டு நீதி­மன்றம் இடைக்­கால தடை­யுத்­த­ர­வினை விதித்­துள்­ளது. அவர்­கள் கல்­லூரி வளா­கத்­துக்குள் பிர­வே­சிப்­பது தடை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ் ஏற்­பா­டுகள் கல்­லூரி நம்­பிக்­கை­யா­ளர்­களின் இலக்கு என்ன என்­பதை தெளி­வு­ப­டுத்­து­கி­றது. இத்­த­டை­யுத்­த­ர­வுக்கு எதி­ராக முகா­மைத்­து­வக்­குழு உயர்­நீ­தி­மன்றில் மனுத்­தாக்கல் செய்­துள்­ளது.

கபூ­ரி­யா­வையும் அதன் வக்பு சொத்­துக்­க­ளையும்
பாது­காக்க போராட்டம்

கபூ­ரியா அர­புக்­ கல்­லூ­ரி­யையும், அதன் வக்பு சொத்­துக்­க­ளான கிரேண்ட்­பா­ஸி­லுள்ள 2.5 ஏக்கர் காணி உட்­பட ஏனை­ய­வற்­றையும் பாது­காத்­துக் ­கொள்­வ­தற்­காக கொழும்பு பகு­தியில் பல்­வேறு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கபூ­ரி­யாவின் நட­வ­டிக்­கைக்­குழு (Action Committee) என குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கு­ழுவின் தலை­வ­ராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் தலைவர் என்.எம். அமீன் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இக்­குழு கடந்த வியா­ழக்­கி­ழமை கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் ஊடக மாநா­டொன்­றினை நடாத்­தி­யது. இதில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டு விடயங்களை தெளிவுபடுத்தினர்.

குழு தலைவர் என்.எம்.அமீன்
மர்ஹூம் அப்துல் கபூரின் பரம்­ப­ரையைச் சேர்ந்த ஒருவர் கபூ­ரியா அர­புக்­கல்­லூரி சொத்து தனக்குச் சொந்­த­மா­னது எனக்­கூறி வழக்­குத்­தாக்கல் செய்து வாதாடி வரு­கிறார். வக்பு செய்­யப்­பட்ட சொத்­தினை அவரால் ஒரு­போதும் அப­க­ரிக்க முடி­யாது.
வக்பு செய்­யப்­பட்­டுள்ள சுலைமான் வைத்­தி­ய­சாலை இருந்த காணியை தனது குடும்ப சொத்­தெ­னக்­ கூ­று­கிறார். அத்­தோடு அதன் வரு­மா­னத்­தையும் அனு­ப­விக்­கிறார். சுலைமான் வைத்­தி­ய­சாலை இருந்த காணி தற்­போது தனியார் நிறு­வ­ன­மொன்­றுக்கு குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. இந்த வக்பு சொத்தைப் பாது­காக்க நாம­னை­வரும் அணி­தி­ரள வேண்டும் என்றார்.

முன்னாள் ஆளுநர்
அசாத் ­சாலி
அப்துல் கபூரின் குடும்­பத்தைச் சேர்ந்த ஒருவர் வக்பு சொத்தை உரிமை கொண்­டா­டு­கிறார். கிரேணட்பா­ஸி­லுள்ள காணியில் இருந்த சுலைமான் வைத்­தி­ய­சாலை கட்­டிடம் இடிக்­கப்­பட்டு அக்­காணி கபூ­ரியா நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­க­ளினால் ஆசியன் ஜெம்ஸ் என்ற நிறு­வ­னத்தின் பெயரில் சொப்ட் லொஜிக் நிறு­வ­னத்­துக்கு 20 வருட ஒப்­பந்­தத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தற்­போது அங்கு புதிய கட்­டிடம் ஒன்று நிர்­மா­ணிக்­கப்­ப­டு­கி­றது.

கபூ­ரியா நாட்டின் சொத்து. இதனை ஒரு தனி­நபர் உரிமை கொண்­டாட முடி­யாது. நீதி­மன்றின் மூலமே அவர்கள் இதற்கு தீர்வு பெற்­றுக்­கொள்ள வேண்டும். நீதி­மன்ற உத்­தி­ர­வினைப் பெற்றுக் கொண்­டதன் பின்பே கிரேணட்பாஸில் கட்­டிட நிர்­மா­ணப்­ப­ணி­களை மேற்­கொள்­ளுங்கள் என நாம் குறிப்­பிட்ட நிறு­வ­னத்­திற்கு கூறு­கிறோம்.

மஹ­ர­கம கபூ­ரியா அர­புக்­கல்­லூரி வளா­கத்தில் உள்ள பள்­ளி­வா­சலில் கடந்த 2022.08.12 ஆம் திகதி ஜும்ஆ தொழு­கையை நடத்துவதற்கு கூட சம்பந்தப்பட்ட நபர் தடைகளை ஏற்படுத்தியுள்ளார். என்­றாலும் ஊர் மக்­களின் அழுத்­தத்தின் கார­ண­மாக நம்­பிக்கைப் பொறுப்­பா­ளர்­களால் ஜும்­ஆ­வுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டது. பள்­ளிக்குள் மாண­வர்கள் தவிர எவரும் செல்­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது. இது மக்­களின் சொத்­தாகும். எனவே கபூ­ரியா வக்பு சொத்து விட­யத்தில் நாட்டு மக்கள் அனை­வரும் ஒன்­று­ப­டு­மாறு வேண்­டு­கிறோம். வக்பு சொத்தை கையாடி குடும்­பப்­பெ­யரை கெடுத்­துக்­கொள்ள வேண்­டா­மென கூறு­கிறோம் என்றார்.

முஜிபுர் ரஜ்மான் எம்.பி.
மர்ஹூம் அப்துல் கபூர் வக்பு செய்த கிரேண்ட்பாஸ் காணியில் இயங்­கிய சுலைமான் வைத்­தி­ய­சாலை சட்டவிரோ­த­மாக இடித்து அகற்­றப்­பட்­டுள்­ளது. தற்­போது புதிய கட்­டிடம் நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கி­றது. இந்த இடத்­தி­லி­ருந்து வெளி­யே­றுங்கள், இதில் செயற்­ப­ட­ வேண்டாம், இது முஸ்­லிம்­களின் சொத்து.

‘4 ஆவது பரம்­ப­ரையில் வந்­தவர். வக்பு சொத்தை பலாத்­கா­ர­மாக தனது வர்த்­த­கத்­துக்கு பயன்­ப­டுத்திக் கொள்ள முயற்­சிக்­கிறார். நீங்கள் செய்­துள்ள சட்­ட­வி­ரோத ஒப்­பந்­தத்தை நிறுத்­திக்­கொள்­ளுங்கள். உங்­க­ளது செயற்­பா­டு­களை சிவில் சமூகம், புத்­தி­ஜீ­விகள், உல­மாக்கள், அர­சி­யல்­வா­திகள் எதிர்க்­கி­றார்கள். முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் இதில் தலை­யிட வேண்டும் என்றார்.

சட்­டத்­த­ரணி ருஷ்­தி­ ஹபீப்
கபூ­ரியா அர­புக்­கல்­லூரி காணி, கிரேண்ட்பாஸ் காணி என்­பன மர்ஹூம் அப்துல் கபூ­ரினால் வக்பு செய்­யப்­பட்­ட­போது இவற்­றி­லி­ருந்து பெறப்­படும் அனைத்து வரு­மா­னமும் கல்­லூ­ரிக்கே வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென உறு­தியில் எழு­தப்­பட்­டுள்­ளது. இதனை தனி­நபர் ஒரு­வ­ரினால் அப­க­ரிக்க முடி­யாது.

சம்­பந்­தப்­பட்ட நபர் இது தர்ம நிதியம் அல்ல, குடும்ப நிதியம் என்று கூறி­வ­ரு­கிறார். இவ்­வாறு தெரி­வித்தே கிரேண்ட்பாஸ் காணி குத்­த­கைக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது வக்பு சொத்­து­களைப் பாது­காப்­பது சமூ­கத்தின் கட­மை­யாகும். இது விட­யத்தில் அரசும் தலை­யி­ட­வேண்டும்.

இவ்­வா­றான வக்பு சொத்­துக்­களில் தனி­நபர் உரிமை கொண்­டாட வேண்­டா­மென நாம் சமூ­கத்­திடம் கோரிக்கை விடுக்­கிறோம் என்றார்.

வக்பு சபையின் முன்னாள்
பணிப்­பாளர் ஏ.பீ.எம். அஷ்ரப்
வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நூற்­றுக்­க­ணக்­கான வக்பு சொத்­துக்­கள் துஷ்­பி­ர­யோகம் செய்­யப்­பட்டு வரு­கின்­றன. கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலின் சொத்­துக்கள், காசி­மியா சொத்­துக்கள், புத்­தளம் கே.கே. பள்­ளி­வாசல் சொத்­துக்கள், மாத்­தளை காட்டுப் பள்ளி சொத்­துக்கள் என்று பட்­டியல் நீள்­கி­றது. இவற்­றுக்கு வக்பு சபையும், திணைக்­க­ளமும் சமூ­கமும் பொறுப்­புக்­கூற வேண்டும். அல்­லாஹ்­வி­டத்தில் தப்ப முடி­யாது. இதற்குக் காரணம் வக்பு சட்டம் சரி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் காட்­டப்­படும் அசி­ரத்­தையே. குறிப்­பாக அர­சியல்மயப்­ப­டுத்தல் இதற்கு பிர­தான கார­ண­மாகும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் மற்றும் வக்பு சபையின் முன்னாள் பணிப்­பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது, ‘கபூ­ரியா 1956 இல் வக்பு சட்டம் அமு­லுக்கு வர முன்பு ஆங்­கில சட்­டத்­தின்­படி நம்­பிக்கை சொத்­தாக (Trust) 1931இல் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. கபூ­ரியா நம்­பிக்­கை­யா­ளர்­களால் விண்­ணப்பம் சமர்ப்­பிக்­கப்­பட்டு கட்­ட­ணமும் செலுத்­தப்­பட்­டுள்­ளது. வக்பு நியா­யா­திக்க சபை கபூ­ரியா சொத்­துகள் வக்பு சொத்­துகள் எனத் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. காஸி­மியா வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­பட்­டி­ருப்­பதால் அதன் குடும்ப நம்­பிக்­கை­யா­ளர்கள் நீக்­கப்­பட்டு புதிய நம்­பிக்­கை­யா­ளர்­களை வக்பு நியா­யா­திக்க சபை நிய­மித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது. ஆகையால் காஸி­மியா சொத்­துகள் மீட்­டெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

குடும்ப சொத்­தாக, குடும்ப வக்பு ஆக பதிவு செய்­யப்­பட்­டி­ருப்பின் வக்பு சட்­டத்தின் படி அது வக்பு சொத்தே. தனிப்­பட்ட சொத்­தா­காது.

நழீ­மியா உட்­பட ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் பொதுச் சொத்­துகள் வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை என்­பதை கருத்திற் கொள்ள வேண்டும். சுமார் 500 அரபு/ ஹிப்ழ் மத்­ர­ஸாக்­களும் வக்பு சட்­டத்தின் கீழ் பதிவு செய்­யப்­ப­ட­வில்லை.

பள்­ளி­வா­சல்கள் மற்றும் முஸ்லிம் அறக்­கட்­ட­ளைகள் விட­யத்தில் வக்பு சபை எடுக்­கின்ற தீர்­மா­னங்­களை கேள்விக்குட்­ப­டுத்­து­வ­தற்கு மாவட்ட நீதி­மன்­றங்­க­ளுக்கோ, மஜிஸ்­திரேட் நீதி மன்­றங்­க­ளுக்கோ அதி­கா­ர­மில்லை. அவற்றை வக்பு சட்­டத்தின் 1982ஆம் ஆண்டின் திருத்­தங்­க­ளின்­படி உரு­வாக்­கப்­பட்­டுள்ள வக்பு நியா­யா­திக்க சபை­க­ளிலே கேள்­விக்­குட்­ப­டுத்த முடியும்.

வக்பு நியா­யா­திக்க சபை மாவட்ட நீதி­மன்­றுக்கு நிக­ரான அதி­கா­ரங்­களைக் கொண்­டுள்­ளது. வக்பு சபை உறுப்­பி­னர்கள் மத ­வி­வ­கார அமைச்­ச­ரினால் நிய­மிக்­கப்­பட்­டாலும் நியா­யா­திக்க சபை உறுப்­பி­னர்கள் நீதிச்­சேவை ஆணைக்­கு­ழு­வி­னாலே நிய­மிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

வக்பு சொத்­து­களை வாட­கைக்கு விடு­வ­தாயின் அல்­லது விற்­ப­தாயின் வக்பு சபையின் முன் அனு­மதி பெறப்­பட வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

கபூ­ரியா கல்­லூ­ரிக்கு ஆபத்து
தற்போது கபூ­ரியா அர­புக்­கல்­லூரி வளாகத்தினுள் சுமார் 500 மீற்றர்களுக்கும் மேலான நீளமான மதில் ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வரு­கி­றது. இச் சொத்துக்கு உரிமை கோரும் நம்பிக்கையாளர்களே இதனை முன்னெடுக்கின்றனர். இது கல்­லூரி கட்­டி­டங்­க­ளையும் ஏனைய வெற்றுக் காணி­யையும் பிரிக்கும் செயற்­பா­டாக அமைந்­துள்­ளது. அத்­தோடு இச்­செ­யற்­பாடானது கல்­லூரி கட்­டி­டங்கள் அமைந்­துள்ள பகு­தியைத் தவிர ஏனைய பகு­தியை விற்­ப­தற்கு அல்­லது குத்­த­கைக்கு விடு­வ­தற்­கான முயற்சி என்று தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

எனவே நூற்­றாண்டை அண்­மித்துக் கொண்­டி­ருக்கும் இக்­கல்­லூ­ரியைப் பாது­காப்­பது சமூ­கத்தின் பொறுப்­பாகும்.

கபூரியா அரபுக்கல்லூரி சொத்துகள் தர்ம நம்பிக்கை நிதியத்தின் கீழ் உள்ளடங்குகிறதா? இன்றேல் அவை குடும்ப நிதியமா? என்பதை மேன்முறையீட்டு நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும் என வக்பு சபையின் தலைவர் சப்ரி ஹலீம்தீன் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.

இச்­சூழ்­நி­லையில் வக்பு செய்­யப்­பட்­டுள்ள கபூ­ரி­யா­வுக்கே இந்­நி­லை­யென்றால் நாடெங்கும் ஆயி­ரக்­க­ணக்­கான முஸ்லிம் பொதுச் சொத்­துகள் வக்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்பதையும் அவற்றுக்கும் எதிர்காலத்தில் ஆபத்துகள் காத்திருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கபூரியாவைக் காப்பாற்றிக்கொள்ளவும் நாடெங்கும் பரந்துள்ள வக்பு சொத்துக்களை பாதுகாக்கவும் அனைத்து தரப்புகளும் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.