பள்ளிகளில் கொவிட் விதிமுறைகளை மீள பேணுவது சிறந்தது:திணைக்களம்

0 355

(ஏ.ஆர்.ஏ. பரீல்)
நாட்டில் மீண்டும் கொவிட் 19 தொற்­றா­ளர்கள் அதி­க­ரித்து வரும் நிலையில் பள்­ளி­வா­சல்­களில் தொழு­கை­களை நிறை­வேற்­று­ப­வர்கள் தாம் விரும்­பினால் மாஸ்க் அணிந்து செல்­வ­துடன் தங்­க­ளுடன் தொழுகை விரிப்­பினை (முசல்லா) எடுத்துச் செல்­வது பாது­காப்­பா­னது என முஸ்‌லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­களம் தெரி­வித்­துள்­ளது.

கொவிட் தொற்று தொடர்பில் சுகா­தார அமைச்சு இது­வரை பள்­ளி­வா­சல்­க­ளுக்கு புதிய வழி­காட்­டல்­களை வழங்­க­வில்லை. புதிய வழி­காட்‌­டல்கள் கிடைக்­கப்­பெற்றால் அது தொடர்பில் பள்­ளி­வாசல் நிர்­வா­கங்­க­ளுக்கு அறி­விக்­கப்­படும் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்சார் தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை நாட்டில் 5 கொவிட் மர­ணங்கள் பதி­வா­கி­யுள்ள நிலையில் முஸ்­லிம்கள் கொவிட் தொற்­றி­லி­ருந்தும் பாது­காப்பு பெற்றுக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.