புத்தர் சிலை தகர்ப்பு விவகாரம்: விசாரணைகள் ஜூலை 7 வரையில் ஒத்திவைப்பு

0 265

(எம்.எப்.எம்.பஸீர்)

மாவ­னெல்லை பகு­தியில் புத்தர் சிலை தகர்ப்பு விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்டு, வழக்குத் தொட­ரப்­பட்­டுள்ள பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணைகள் எதிர்­வரும்  ஜூலை 7 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன.

இந்த விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று முன் தினம் (28) கேகாலை மேல் நீதி­மன்றில் நீதி­பதி ஜகத் கஹந்­த­க­மகே தலை­மை­யி­லான ஜயகி டி அல்விஸ் மற்றும் இந்­திகா காலிங்­க­வங்ச ஆகிய நீதி­ப­திகள் அடங்­கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதி­மன்றம் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தது.

இதன்­போது, இந்த விவ­கா­ரத்தில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள குற்றப் பகிர்வுப் பத்­தி­ரி­கையை திருத்­து­வது தொடர்பில் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வி­ருந்­தன. எனினும் இவ்­வ­ழக்கில் ஆஜ­ராகும் அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா, எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக மன்றில் ஆஜ­ரா­க­வில்லை.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே வழக்கு விசா­ர­ணைகள் 7 ஆம் ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டன.

உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்­க­ளுக்கு முன்னர், கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக் காலப்­ப­கு­தியில் மாவ­னெல்லை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­களில் மாவ­னெல்லை திதுல்­வத்­தை­யிலும் ஏனைய இடங்­க­ளிலும் ஐந்து புத்தர் சிலை­களை சேதப்­ப­டுத்­தி­யமை தொடர்பில் 16 பேருக்கு எதி­ராக, கேகாலை மேல் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் வழக்குத் தொடர்ந்­துள்ளார்.

இவ்­வ­ழக்கில் வழக்குத் தொடுநர் சார்பில் இந்த வழக்கில், அரசின் சிரேஷ்ட சட்­ட­வாதி வசந்த பெரேரா தலை­மையில், சட்­ட­வா­தி­க­ளான ஹரீந்ர ஜய­சிங்க, உதார கரு­ணா­தி­லக, சஜின் பண்­டார ஆகியோர் ஆஜ­ரா­கின்­றனர்.

1,2,5,12,13,16 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி எம்.எம். சுஹைர் தலை­மையில் சட்­டத்­த­ர­ணி­க­ளான எம்.சி.எம். முனீர், எம்.ஐ.எம். நளீம், ரிஸ்வான் உவைஸ் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கின்­றனர்.

3,4,14 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி முபீ­னுடன் சட்­டத்­த­ரணி சஷிக பெரேரா ஆஜ­ரா­கின்­றனர்.

15 ஆம் பிர­தி­வா­திக்­காக சட்­டத்­த­ரணி சம்பத் ஹேவா­பத்­தி­ர­ணவும் சட்­டத்­த­ரணி அவ்­தானும் ஆஜ­ரா­கினர். 9 ஆம் பிர­தி­வா­திக்கு சட்­டத்­த­ரணி துஷாரி வரா­பிட்­டி­ய­வுடன் சட்­டத்­த­ரணி கஸ்­ஸாலி ஹுசைன் ஆஜ­ரா­கிறார். 6,7,8,10 மற்றும் 11 ஆம் பிர­தி­வா­தி­க­ளுக்­காக சட்­டத்­த­ரணி ருஷ்தி ஹபீப் ஆஜ­ரா­கின்றார்.

இந் நிலை­யி­லேயே வழக்கின் சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 ஜூலை மாதம் 7 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி அளித்­தலை தடுப்­பது தொடர்­பி­லான சர்­வ­தேச இணக்­காப்­பாட்டு சட்­டத்தின் கீழும் 21 குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இவ்­வ­ழக்கு தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இரு சமூ­கங்­க­ளி­டையே மோதலை உரு­வாக்க சதித் திட்டம் தீட்­டி­யமை, 5 புத்தர் சிலை­களை தகர்த்­தமை, சமூ­கங்­களிடையே வெறுப்­பு­ணர்­வு­களை தூண்­டி­யமை, தோப்பூர் மாவ­னெல்லை, ஹம்­பாந்­தோட்டை மற்றும் நுவ­ரெ­லியா பகு­தியில் அதற்­கான வதி­விட கருத்தரங்­குகள் மற்றும் ஆயுதப் பயிற்­சி­யினைப் பெற்­றமை தொடர்பில் பய­ங­ர­வாத தடை சட்­டத்தின் கீழும், ஆயுதப் பயிற்சி மற்றும் கருத்­த­ரங்­கு­க­ளுக்கு தேவை­யா­ன­வற்றை நேர­டி­யா­கவும் மறை­மு­க­மாகவும் வழங்­கி­யமை தொடர்பில் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு நிதி­ய­ளிப்­பதை தடுக்கும் சர்­வ­தேச இணக்­கப்­பாட்டு சட்­டத்தின் கீழும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன.

2019 ஏப்ரல் 21 தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களை நடாத்­திய பயங்­க­ர­வாதி சஹ்ரான் மற்றும் முறைப்­பாட்­டாளர் அறி­யா­த­வர்­க­ளுடன் இணைந்து பிர­தி­வா­திகள் இக்­குற்­றத்தை புரிந்­துள்­ள­தாக சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பிட்­டுள்ளார்.
இக்­குற்­றச்­சாட்­டுக்­களை உறுதி செய்ய 49 தடயப் பொருட்­க­ளையும், 92 சாட்­சி­யா­ளர்­களின் பட்­டி­ய­லையும் சட்ட மா அதிபர் குற்றப் பத்­தி­ரி­கையில் இணைத்­துள்ளார்.

மொஹம்மட் அல்பர் மொஹம்மட் அஸ்பாக், மொஹம்மட் பைசர் மொஹம்மட் முப்தி, மொஹம்மட் அக்பர் மொஹம்மட் முனீப், மொஹம்மட் சுபியான் மொஹம்மட் இர்ஷாத், மொஹம்மட் அஸ்ஹர் அதீக் அஹமட், நஜி­முதீன் மொஹம்மட் பெளசான், ரஷீத் மொஹம்மட் இப்­ராஹீம் அல்­லது இப்­ராஹீம் மெள­லவி அல்­லது இப்­ராஹீம் சேர், அபூ செய்த் எனும் மொஹம்மட் இப்­ராஹீம் நெளபர் மெள­லவி, அபூ நஜா என­ப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்­லது சாஜித் மெளலவி, அபூ பலாஹ் எனபப்டும் மொஹம்மட் இம்ராஹீம் சாஹித் அப்துல் ஹக், அபூ உமர் எனபப்டும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ ஹினா அல்லது சிவப்பு தாடி என அறியப்படும் மொஹம்மட் ஹனீபா சைனுல் ஆப்தீன், ஹிஸ்புல்லாஹ் கான் ஹாமித், அபூ சியா எனபப்டும் ஹயாத்து மொஹம்மது அஹமது மில்ஹான், ஹாஜா மொஹிதீன், ஹனன் ஹம்சுதீன் எனும் ஹனன் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.