சவூதியும் அரபு அமீரகமும் இலங்கைக்கு உதவ மறுத்தனவா?

0 273

ஆஇஷ் உஸ்மான்

இலங்கை அர­சாங்கம் பொரு­ளா­தார நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ளது. நடுக்­க­டலில் தத்­த­ளித்­துக்­கொண்­டி­ருக்கும் இலங்கை தன்னைக் காப்­பாற்­றிக்­கொள்ள பிற நாடு­களின் உத­வியை எதிர்­பார்த்­துக்­கொண்­டி­ருக்­கி­றது.

இலங்­கைக்கு டொலர் இன்­மையால் இறக்­கு­மதி தடைப்­பட்­டுள்­ள­துடன் எரி­பொருள் பெற்­றுக்­கொள்­வ­திலும் பெரும் சிர­மத்தை எதிர்­கொள்­ள­வேண்­டி­யி­ருக்­கி­றது. எனவே, டொலரை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான முயற்­சிகள் பல்­வேறு மட்­டத்­திலும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது. இதன் ஒரு கட்­ட­மாக இலங்­கைக்கு டொலரை பெற்­றுக்­கொள்­வ­தற்கு மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ருமான மொஹமட் நஷீதின் உத­வியை அர­சாங்கம் நாடி­யி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கி­றது.

தற்­போ­தைய பொரு­ளா­தார நெருக்­க­டி­யி­லி­ருந்து நாட்டை மீட்­டெ­டுப்­ப­தற்கு அவ­சி­ய­மான வெளி­நாட்டு உத­வி­களை ஒருங்­கி­ணைக்கும் பணிக்குப் பொறுப்­பாக கடந்த மே மாதம் பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்­க­வினால் மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான மொஹமட் நஷீட் நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

முஸ்லிம் நாடு­க­ளுடன் தொடர்பை பேணும், அந்­நா­டு­களின் செல்­வாக்கை பெற்ற முஸ்லிம் தலை­வர்கள் இந்­நாட்டில் இருக்­கின்ற நிலையில் பிறி­தொரு நாட்டின் முன்னாள் தலை­வ­ரொ­ருவர் மத்­திய கிழக்கு நாடு­களின் உத­வியை இலங்­கைக்கு பெற்­றுக்­கொள்ள நிய­மிக்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­மை­யா­னது இரா­ஜ­தந்­திர ரீதியில் சரி­யா­ன­தாக இருந்­தாலும் பன்­மைத்­துவ நாடு என்ற வகையில் நாம் தோல்­வி­யையே கண்­டி­ருக்­கின்றோம். குறிப்­பாக கோத்­தா­பய அர­சாங்­கத்தின் கொள்கை கார­ண­மாக இந்­நாட்டு முஸ்­லிம்கள் அவர்­க­ளுடன் இணைந்து பய­ணிக்­க­வில்லை என்­பது தெளி­வா­கி­றது. அத்­தோடு, இந்த அர­சாங்­கத்­திற்கு முஸ்­லிம்­களின் ஆத­ரவு இல்லை என்­பது புல­னா­கி­றது. அது­மாத்­தி­ர­மன்றி முஸ்லிம் நாடு­க­ளுடன் தொடர்பைப் பேணக்­கூ­டிய தலை­மை­களை இந்த அர­சாங்கம் அணுகத் தவ­றி­யுள்­ளமை மற்றும் அவர்­களின் ஒத்­தா­சையை பெற்­றுக்­கொள்ள முயற்­சிக்­காமை வருத்­த­ம­ளிக்­கி­றது. இது அர­சாங்­கத்தின் பிற்­போக்குத் தனத்­தையே காட்­டு­கி­றது.

இனி விட­யத்­திற்கு வருவோம், மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி நஷீட் அஹமட் தன்­னிடம் கூறி­ய­தாக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா தெரி­வித்­தி­ருக்கும் கருத்­துகள் இன்று பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

அண்மையில் மக்கள் சந்­திப்­பொன்றில் கலந்­து­கொண்ட கலா­நிதி ஹர்ஷ, “கடந்த இரு வாரங்­க­ளுக்கு முன்னர் மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான மொஹம்மட் நஷீடை சந்­திக்கக் கிடைத்­தது. ‘அர­சாங்­கத்­தினால் எனக்­கொரு பொறுப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையில் தற்­போ­துள்ள நிலை­வ­ரத்தை அவ­சர நிலை­மை­யாகக் கருத்திற் கொண்டு டொல­ரையும் எரி­பொ­ரு­ளையும் பெற்றுத் தரு­மாறு கோரி­யுள்­ளனர்.’ அதற்­க­மைய சவூ­தியின் முடிக்­கு­ரிய இள­வ­ரசர் மொஹம்மட் பின் சல்­மா­னிடம் தான் தொலை­பே­சியில் உரை­யாடி இலங்­கைக்கு உத­வு­மாறு கோரி­ய­தாகத் தெரி­வித்தார். இதற்கு பதி­ல­ளித்த பின் சல்மான் , ‘குறைந்­த­பட்சம் அவர்­க­ளிடம் ஸ்திர­மா­ன­தொரு திட்டம் காணப்­ப­டு­கி­றதா?’ என்று தன்­னிடம் கேள்­வி­யெ­ழுப்­பி­ய­தா­கவும் மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி என்­னிடம் தெரி­வித்தார்” என்று பொது­வெளியில் கூறி­யுள்ளார்.

‘இலங்கை எனது நாடு அல்ல. நானும் ஒரு உத­வி­யா­கவே இதனை செய்­கின்றேன்.’ என்று சவூதி இள­வ­ர­ச­ருக்கு பதி­ல­ளித்­துள்ளார் அஹமட் நஷீட்.

மேலும், “அதே போன்று ஐக்­கிய அரபு இராச்­சி­யத்­துடன் பேசிய போது , ‘இலங்­கையில் விற்­ப­தற்கு ஏதே­னு­மி­ருந்தால் அந்த பட்­டி­யலை அனுப்­புங்கள். அதன் பின்னர் ஆரா­யலாம்’ என்று தெரி­விக்­கப்­பட்­ட­தா­கவும் அவர் என்­னிடம் கூறினார்”. என்றும் ஹர்ஷ டி சில்வா எம்.பி. குறிப்­பிட்­டுள்ளார்.

மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­பதி என்­னிடம் தெரி­வித்த விட­யங்­க­ளையே நான் இப்­போது குறிப்­பி­டு­கின்றேன். குறைந்­த­பட்சம் சவூதி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு எமது அர­சாங்­கத்தில் எவரும் இல்லை. வெளிநாடு­க­ளிடம் பேச்­சு­வார்த்­தை­களை முன்­னெ­டுக்கும் ஒப்­பந்­தத்தை வேறொரு நாட்டு தலை­வ­ரிடம் ஒப்­ப­டைக்க வேண்­டிய நிலைமை காணப்­ப­டு­கி­றது. உலகில் எந்த நாடு எமக்கு உதவத் தயா­ராக உள்­ளது? எதிர்­பா­ராத வித­மாக இந்­தி­யாவும் எமக்கு உதவ மறுத்தால் என்ன செய்­வது? என்று கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ளார் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ.

இது இவ்­வா­றி­ருக்க, சவூதி அரே­பியா, ஐக்­கிய அரபு இராச்­சியம் போன்ற நாடுகள் இலங்­கைக்கு உதவ முன்­வ­ர­வில்லை என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா வெளி­யிட்­டுள்ள கருத்தை மறுத்­தி­ருக்கும் மாலை­தீவின் முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய சபா­நா­ய­க­ரு­மான மொஹமட் நஷீட், பல நாடுகள் இலங்­கைக்கு உதவ முன்­வந்­தி­ருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

தனது உத்­தி­யோ­க­பூர்வ டுவிட்டர் பக்­கத்தில் செய்­தி­ருக்கும் பதி­வி­லேயே மொஹமட் நஷீட், ‘ஹர்ஷ டி சில்வா எனது நீண்­ட­கால நண்பர் என்­ப­துடன், நாங்கள் அடிக்­கடி சந்­திப்போம். நான் அவ­ருடன் இருப்­பதை எப்­போதும் விரும்­புவேன். இருப்­பினும் இந்தச் செய்தி சரி­யா­ன­தல்ல. குறிப்­பி­டத்­தக்க பல நாடுகள் இலங்­கைக்கு உதவ முன்­வந்­தி­ருப்­ப­துடன், அவற்றின் உத­விகள் விரைவில் வந்­து­ சே­ர­வி­ருக்­கின்­றது’ என்று தெரி­வித்­துள்ளார் நஷீட் அஹமட்.

‘என் நண்பர் மொஹம்மட் நஷீட்­டுடன் சில வாரங்­க­ளுக்கு முன்பு பேசிய விட­யகள் தொடர்பில் தெரி­வித்த கருத்­துக்­களில் உறு­தி­யாக இருக்­கிறேன். எவ்­வா­றா­யினும், பல நாடுகள் இலங்­கைக்கு உதவ ஆர்­வ­மாக உள்­ளன என அவர் இப்போது நம்பிக்கையுடன் குறிப்­பி­டு­வதில் நான் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்’ என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா, மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி நஷீடின் டுவிட்டுக்கு பதிலளித்துள்ளார்.

எது எவ்­வா­றி­ருப்­பினும் கோத்­தா­பய அர­சாங்­கத்தின் பிழை­யான கொள்­கை­களே நாடு பாதா­ளத்­துக்குச் செல்ல கார­ண­மா­யிற்று. குறிப்­பாக, ஆட்­சி­பீடம் ஏறு­வ­தற்­காக இன­வா­தத்­தையும் மத­வா­தத்­தையும் பரப்­பு­வ­தற்­காக ராஜ­ப­க்ஷாக்கள் கடும்போக்­கு­வா­தி­களை போஷித்து அவர்கள் மூல­மாக நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­களை கட்­ட­விழ்த்­து­விட்­டனர். அத்தோடு, கோத்தா அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறிய பின்னர் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான செயற்படுகளை மத்திய கிழக்கு வளைகுடா நாடுகள் அறிந்திருந்தன. குறிப்பாக ஜனாஸா எரிப்பு விடயத்தில் வளைகுடா நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. அத்தோடு, அவர்களின் கோரிக்கைகளை கோத்தா அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தி அடைந்திருந்தன.

மத்திய கிழக்கு நாடுகளுடனான உறவை வலுப்பெறச் செய்ய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவோ எந்தவித நடவடிக்கையும் முன்னெடுக்காமையே இன்றைய நிலைமைக்கு காரணம் என்பது திண்ணம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.