உத்­தர பிர­தே­சத்தில் தகர்க்­கப்­படும் முஸ்­லிம்­களின் வீடுகள்!

0 323

இந்­தி­யாவின் ஆளும் பார­தீய ஜனதாக் கட்­சியின் செய்தித் தொடர்­பாளர் நூபுர்­சர்மா, நபி­க­ளாரை அவ­ம­திக்கும் வகையில் தொலைக்­காட்சி பேட்டி ஒன்றில் தெரி­வித்த கருத்து பெரும் சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.

நூபுர் சர்­மாவின் கருத்து தொடர்பில் முஸ்லிம் நாடுகள் பல இந்­தி­யா­வுக்கு கண்­டனம் தெரி­வித்­தன. இந்­தியப் பொருட்­களை நிரா­க­ரிக்க வேண்டும் என வளை­குடா நாடு­களில் கோரிக்­கைகள் முன்­வைக்­கப்­பட்­டன.

இதை­ய­டுத்து, நூபுர் சர்­மாவின் கருத்து இந்­திய அரசின் கருத்து அல்ல என்று மத்­திய அரசு பதில் அளித்­தது. இந்­நி­லையில் நூபுர் சர்­மாவை இடை­நி­றுத்தம் செய்த பாஜக, அவ­ரது கருத்தை ஆத­ரித்துப் பேசிய கட்­சியின் முக்­கி­யஸ்தர் நவீன் ஜிண்­டாலை கட்­சியை விட்டும் நீக்­கி­யது. கட்சி பொறுப்­பா­ளர்கள், பொதுவில் கருத்­துக்­களை தெரி­விக்கும் போது பொறுப்­புடன் செயல்­பட வேண்டும் எனவும் பாஜக அறி­வு­றுத்­தி­யது. நூபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது டெல்லி பொலி­ஸாரும் வழக்குப் பதிவு செய்­தனர்.
இந்­நி­லையில் நூபுர் சர்மா மற்றும் நவீன் ஜிண்டால் தெரி­வித்த கருத்­துக்கு எதிர்ப்புத் தெரி­விக்கும் வகையில்,கடந்த வெள்ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கையின் பின்னர் முஸ்­லிம்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர். இதேபோல் உத்­தர பிர­தேசம் சஹா­ரன்­பூரில் உள்ள பள்­ளி­வா­சல்­க­ளிலும் தொழு­கைக்குப் பின் முஸ்­லிம்கள் போராட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

உத்­தர பிர­தே­சத்தில் ஆர்ப்­பாட்­டமும் வன்­மு­றையும்
உத்­தர பிர­தே­சத்தில் கடந்த 3 ஆம் திகதி வெள்ளிக்­கி­ழமை ஜும்ஆ தொழு­கைக்குப் பிறகு இடம்­பெற்ற ஆர்ப்­பாட்டம் மற்றும் வன்­மு­றை­களைத் தொடர்ந்து முஸ்­லிம்­களை இலக்கு வைத்த கைதுகள் மற்றும் அவர்­க­ளது வீடு­களை புல்­டோ­சர்கள் கொண்டு தகர்க்­கின்ற நட­வ­டிக்­கைகள் பெரும் சர்ச்­சையைத் தோற்­று­வித்­துள்­ளன.

உத்­தர பிர­தே­சத்தில் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்ட 255 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஃபிரோ­ஸா­பாத்தில் 13 பேர், அலி­கரில் 3 பேர், ஹத்­ராஸில் 50 பேர், மொரா­தா­பாத்தில் 27 பேர், அம்­பேத்கர் நகரில் 28 பேர், சஹா­ரன்­பூரில் 64 பேர், ஜலோனில் 2 பேர், பிர­யாக்­ராஜில் 68 பேர் இதில் அடங்­குவர்.

புல்­டோசர் மூலம் இடிக்­கப்­பட்ட
ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களின் வீடுகள்
ஜூன் 3 சம்­ப­வத்­திற்கு ஒரு வாரத்­திற்குப் பிறகு, கான்­பூரில் உள்ள மேம்­பாட்டு ஆணையம் முகம்­மது இஷ்­தியாக் என்ற நபரின் கட்­ட­டத்தின் மீது புல்­டோ­சரை ஏற்ற உத்­த­ர­விட்­டது. பலத்த பாது­காப்­புக்கு மத்­தியில் புல்­டோசர் மூலம் அவ­ரது கட்­டிடம் இடித்­த­ழிக்­கப்­பட்­டது.

சஹ­ரான்­பூ­ரிலும் புல்­டோசர்
சஹ­ரான்­பூரில் வெள்ளிக்­கி­ழமை ஏற்­பட்ட வன்­மு­றையில் மொத்தம் 64 பேர் காவல்­து­றை­யி­னரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் மீது தேசிய பாது­காப்புச் சட்­டத்தின் கீழ் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக பொலிஸ் நிர்­வாகம் கூறி வரு­கி­றது.

இந்தச் சம்­ப­வத்தில் குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்­களில் முஸம்மில் மற்றும் அப்துல் வக்கர் ஆகிய இரு­வரின் வீடு­களும்,மாந­க­ர­ச­பையால் புல்­டோசர் மூலம் தகர்க்­கப்­பட்­டது. இரு­வ­ரையும் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

அஃப்ரீன் பாத்­திமா வீடும் இடித்­த­ழிப்பு
உத்­தர பிர­தேச மாநிலம் பிர­யாக்ராஜ் நகரில் உள்ள மாணவர் ஒன்றிய தலைவர் அஃப்ரீன் பாத்­திமா வீட்­டையும் மாநில அரசு இடித்துத் தரை­மட்­ட­மாக்­கி­யுள்­ளது. இவ­ரது தந்தை ஜாவேத் முகம்­மது ‘வெல்­பயார் பார்ட்டி ஒப் இந்­தியா’ என்ற கட்­சியின் தலை­வ­ராவார்.

முகம்­மது நபி குறித்து பாஜக செய்தித் தொடர்­பா­ள­ராக இருந்த நூபுர் ஷர்மா தெரி­வித்த ஆட்­சே­ப­க­ர­மான கருத்­து­களைக் கண்­டித்து, நட­வ­டிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்­கி­ழமை பிர­யாக்­ராஜில் நடந்த போராட்­டத்தில் வெடித்த வன்­மு­றைக்கு சதித்­திட்டம் தீட்­டி­ய­தாக ஜாவேத் மீது அரசு குற்­றம்­சாட்­டு­கி­றது.

போராட்டம் ஒன்றில் குரல் எழுப்பும் அஃப்ரீன் பாத்­திமா

தற்­போது கைது செய்­யப்­பட்­டுள்ள ஜாவே­துக்கு, அவ­ரது மகள் அஃப்ரீன் ஆலோ­சனை வழங்­கி­ய­தா­கவும் பொலிஸ் குற்­றம்­சாட்­டு­கி­றது.

இந்தப் பின்­ன­ணியில் பிர­யாக்ராஜ் மாந­க­ராட்சி, அஃப்ரீன் பாத்­தி­மா­வுக்கு சனிக்­கி­ழமை இரவு ஒரு நோட்­டீசை அனுப்­பி­யது. அதில் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை அவ­ரது வீட்டை இடிக்க இருப்­ப­தா­கவும், எனவே, வீட்டை காலி செய்­யும்­ப­டியும் அதில் கூறப்­பட்­டி­ருந்­தது.
அதன்­படி மறு­தினம் புல்­டோசர் கொண்டு அவ­ரது வீடு முழு­வதும் இடித்துத் தரை­மட்­ட­மாக்­கப்­பட்­டது. உ.பி. அரசின் இந்த செயல், ‘சட்ட விரோதம்’ என்றும், ‘புல்­டோசர் அர­சியல் என்றும் விமர்­ச­னத்­துக்கு உள்­ளா­கி­யி­ருக்­கி­றது.

வெல்­பயார் பார்ட்டி ஒப் இந்­தி­யாவின் மாணவர் பிரி­வான ஃப்ராட்­டர்­னிட்டி மூவ்­மென்ட்டின் (சகோ­த­ரத்­துவ இயக்கம்) தேசிய செய­லா­ள­ராக இருக்­கிறார் அஃப்ரீன் பாத்­திமா.

இவர், 2021ஆம் ஆண்டு டெல்லி ஜவா­ஹர்லால் நேரு பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­ட­மேற்­ப­டிப்பு முடித்தார். படிக்­கும்­போது பல்­க­லைக்­க­ழக மாணவர் சங்­கத்தில் கவுன்­சி­ல­ராகத் தேர்வு செய்­யப்­பட்டு பணி­யாற்­றினார்.

அதற்கு முன்­பாக அலிகர் முஸ்லிம் பல்­க­லைக்­க­ழ­கத்தின் பெண்கள் கல்­லூ­ரியில் படித்­த­போது கல்­லூரி மாணவர் சங்கத் தலை­வ­ராக இருந்­தி­ருக்­கிறார்.

கர்­நா­ட­காவில் எழுந்த ஹிஜாப் சர்ச்சை, புல்­லிபாய் செயலி மூலம் முஸ்லிம் பெண்­களை இணை­யத்தில் ஏலம் விட்ட சல்லி டீல் சர்ச்சை, குடி­யு­ரிமைத் திருத்­தச்­சட்டம் ஆகிய விவ­கா­ரங்­களின் போது போராட்ட செயல்­பா­டு­களில் ஈடு­பட்­டவர் அஃப்ரீன் பாத்­திமா. அவரும் அவ­ரது சகோ­தரி சுமை­யாவும் சேர்ந்து பெண்­க­ளுக்­கான ஒரு அமைப்பை உரு­வாக்­கினர்.

கடும் கண்­ட­னங்கள்
அஃப்ரீன் மற்றும் அவ­ரது தந்தை ஜாவேத்தின் வீட்டை இடித்துத் தரை­மட்­ட­மாக்­கிய உ.பி. அரசின் செயலை பலரும் கண்­டித்து வரு­கி­றார்கள்.

ராஷ்ட்­ரிய ஜனதா தளம் கட்­சியின் தேசிய செய்தித் தொடர்­பாளர் தால் மனோஜ் ஜா இது பற்றிப் பேசும்­போது,“இது சட்ட நடை­மு­றை­களை இடித்துத் தள்­ளு­வது போன்­றது” என்று குறிப்­பிட்டார். நிரூ­பிக்­கப்­ப­டாத குற்­றங்­க­ளுக்­காக, ‘கும்பல் தண்­டனை” என்ற முறையில் இப்­படி வீடு­களை இடிப்­ப­தற்­கான ஊக்­கத்தை ஹிட்­லரின் நாஜி மாதி­ரியில் இருந்து எடுத்­துக்­கொண்­டுள்­ளனர். ஒரு தரப்பு இதனை கொண்­டா­டிக்­கொண்­டி­ருக்­கி­றது. புல்­டோ­சர்கள் என்­பவை அநீ­தியின் சின்­ன­மா­கி­யுள்­ளன. இதனை தொடர அனு­ம­திக்க முடி­யாது என்று அவர் கூறி­யுள்ளார்.

மக்­களின் வீடு­களை புல்­டோசர் கொண்டு இடிக்கும் உத்­தர பிர­தேச அரசின் இந்த பகி­ரங்­க­மான விதி­மீ­றலை உச்ச நீதி­மன்றம் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். நிர்­வா­கத்­து­றையே பொலி­சா­கவும், வழக்­கு­ரை­ஞ­ரா­கவும், நீதி­ப­தி­யா­கவும் இருப்­பதை அனு­ம­திக்க முடி­யாது என முன்னாள் ஒன்­றிய நிதி­ய­மைச்­சரும் திரி­ணமூல் தேசியத் துணைத் தலை­வ­ரு­மான யஷ்வந்த் சின்ஹா தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் நீதி­ப­திகள் கண்­டனம்
இஸ்­லா­மி­யர்­களின் வீடு­களை புல்­டோசர் மூலம் இடிக்கும் உத்­தரப் பிர­தேச அரசின் செயல் அர­சியல் அமைப்பை கேலிக்­குள்­ளாக்­கு­வதால் உச்­ச­நீ­தி­மன்றம் தலை­யிட்டு தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் நீதி­ப­திகள், மூத்த வழக்­க­றி­ஞர்கள் உள்­ளிட்­ட­வர்கள் கடிதம் எழு­தி­யுள்­ளனர்.

இந்த விவ­கா­ரத்தை தாமாக முன்­வந்து விசா­ரிக்­கு­மாறு முன்னாள் நீதி­ப­திகள், மூத்த வழக்­க­றி­ஞர்கள் உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு கடிதம் எழு­தி­யுள்­ளனர். போராட்­டங்­களில் ஈடு­பட்­ட­வர்­களின் வீடு­களை முன் அறி­விப்­பின்றி இடிப்­பது போன்ற காட்­சிகள் சமூக வலைத்­த­ளங்­களில் வெளி­யாகி தேசத்தின் மனச்­சாட்­சியை உலுக்­கு­கின்­றன. இது நீதிக்குப் புறம்­பான தண்­டனை என்று அக் கடி­தத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
உத்­தரப் பிர­தேச முதல்வர் யோகி ஆதித்­ய­நாத்தின் அறிக்­கைகள் போரா­டு­வோர்­களை சித்­தி­ர­வதை செய்­யலாம் என்ற தைரி­யத்தை காவல்­து­றைக்கு கொடுக்­கி­றது என்று அந்த கடி­தத்தில் கூறப்­பட்­டுள்­ளது.

உச்­ச­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ப­திகள் பி. சுதர்ஷன் ரெட்டி, பி. கோபால கங்கா, ஏ.கே. கங்­குலி உட்­பட உயர்­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ப­திகள், மூத்த வழக்­க­றி­ஞர்கள் பலரும் இந்த கடி­தத்தில் கையொப்­ப­மிட்­டுள்­ளனர்.

முகம்­மது ஜாவேதின் மகள் சுமையா பேட்டி
பிர­யாக்­ராஜில், தன்­னார்­வலர் முக­மது ஜாவேதின் வீட்டின் மீது ஞாயிற்றுக் கிழ­மை­யன்று பிரயாக் ராஜ் மேம்­பாட்டு அதி­கார அமைப்பு புல்­டோசர் நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டது. ஜூன் 10 நடந்த வன்­மு­றைக்கு அவர்தான் முக்­கிய காரணம் என்று நிர்­வாகம் கூறு­கி­றது. அங்கு நடந்த விட­யங்கள் குறித்து, அவ­ரு­டைய மகள் சுமையா பிபி­சிக்கு பேட்­டி­ய­ளித்­துள்ளார். அதில் அவர் தெரி­வித்­துள்­ள­தா­வது,

நாங்கள் இந்த வீட்டில் 20 ஆண்­டு­க­ளாக வாழ்­கிறோம். நான் இங்­குதான் பிறந்தேன். நான் பிறப்­ப­தற்கு ஓராண்­டுக்கு முன்பு இந்த வீட்டைக் கட்­டி­னார்கள். என் தந்­தையை வேண்­டு­மென்றே இதில் சிக்க வைக்கப் பார்க்­கி­றார்கள் என்று எங்­களால் உறு­தி­யாகச் சொல்ல முடியும். இதில் அவ­ருக்கு எந்தப் பங்கும் இல்லை. நீங்கள் அவ­ரு­டைய கடைசி ஃபேஸ்புக் பதிவை பார்த்தால், அதில் அவர் சமா­தானம் மற்றும் பாது­காப்பு குறித்து வலி­யு­றுத்­தி­யி­ருப்பார். அமைதி, பாது­காப்பு குறித்துப் பேசும் ஒரு மனிதர், எப்­போதும் நிர்­வா­கத்­தோடு ஒத்­து­ழைக்கும் ஒரு மனிதர், திடீ­ரென்று இர­வோடு இர­வாக எப்­படி வன்­மு­றையின் முக்­கிய மூளை­யாக மாற­மு­டியும்?

இந்த ஆர்ப்­பாட்­டத்தில் அவ­ருக்கு எந்தப் பங்கும் இல்லை. அவர் கூட்­டத்தைச் சேர்க்க முய­ல­வில்லை.

ஆர்ப்­பாட்­டங்கள் வேண்டாம் என்று தான் எனது தந்தை பேஸ்­புக்கில் பதி­விட்­டுள்ளார். எதிர்ப்பு தெரி­விக்க வேண்­டு­மெனில், நிர்­வா­கத்­திடம் மனு கொடுங்கள், அர­சியல் சாசன அடிப்­ப­டையில் எதிர்ப்பு தெரி­வி­யுங்கள், இந்த மாதிரி சாலையில் ஆர்ப்­பாட்டம் செய்­வதால் எந்தப் பலனும் இல்லை என்­றுதான் அவர் எழு­தி­யுள்ளார்.

தொழு­கைக்குப் பிறகு பிரார்த்­தனை செய்­யுங்கள் என்று சொல்லி, சமா­தானம் மற்றும் பாது­காப்­புக்கு அவர் வேண்­டுகோள் விடுத்தார்.

எங்கள் வீட்டுக்கு முதலில் சுமார் 8:30 மணியளவில் காவல்துறை வந்தது. பேச வேண்டுமென்று கூறி தந்தையை அவர்கள் அழைத்துப் போனார்கள். அவரும் எந்த எதிர்ப்பும் காட்டாமல், அவர்களுடன் ஒத்துழைத்தார். நான்கு மணிநேரத்திற்குப் பிறகு 12:30 மணிக்கு மேல், என்னையும் என் உம்மாவையும் பேசுவதற்காக என்று கூறி அழைத்துச் சென்றார்கள்.

இரண்டு இரவுகள் என்னையும் உம்மாவையும் காவல் நிலைத்தில் தடுத்து வைத்திருந்தார்கள். இந்த நேரத்தில்தான் உங்கள் வீட்டை இடிக்கப் போகிறோம் என்று பொலிஸார் வந்து எம்மை மிரட்டினார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை எங்களை உறவினர் வீட்டில் எங்களைக் கொண்டுபோய் விட்டார்கள். அதிலிருந்து சில மணிநேரம் கழித்து புல்டோசர் மூலம் எங்களுடைய வீட்டை இடித்தார்கள் என்றார்.

உத்தர பிரதேச அரசின் முஸ்லிம்களுக்கு எதிரான இந்த பாகுபாடு, முகம்மது நபிகளாரை அவமதிக்கும் கருத்துக்கள் தொடர்பில் முஸ்லிம் நாடுகள் மத்தியில் எழுந்துள்ள இந்தியா மீதான அதிருப்தியை மேலும் உக்கிரமடையவே செய்யும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.