இருப்பதை பகிர்ந்து வாழ்வோம்!

0 381

கடந்த பல மாதங்­க­ளாக தொடரும் எரி­பொருள் பற்­றாக்­குறை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது. வாக­னங்கள் எரி­பொ­ரு­ளுக்­காக நிற்கும் வரிசையின் நீளம் முன்னரை விட நீண்டு செல்கிறது. எரி­வா­யு­வுக்கும் இதே நிலைதான்.

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பொதுப் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் நேற்றைய தினம் ரயில் வண்டிகளின் கூரைமீதிருந்து பயணிக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
தினமும் இரண்டு மணித்தியாலத்திற்கும் அதிகமான மின்வெட்டு தொடர்கிறது. மின்சார சபை திட்டமிட்டு செயற்படாவிட்டால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இதே மின்வெட்டு தொடரும் என மின்சார சபை தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.

பண வீக்கம் காரணமாக பொருட்களின் விலைகள் பல மடங்கு அதிகரித்துள்ளன. இதனால் சகல தரத்திலுள்ள மக்களும் வெகு­வாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மக்கள் செய்­வ­த­றி­யாது தவிக்­கி­றார்கள். எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக காத்து நிற்கும் மக்கள் மீண்டும் ஆர்ப்பாட்­டங்­களில் ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள். சமூக வலைத்­த­ளங்­களில் மக்கள் தமது உணர்ச்­சி­களைக் கொட்டிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

அனர்த்தம் ஒன்று வரு­கின்­ற­போது, பாதிக்­கப்­பட்ட சாரா­ருக்கு பாதிக்­கப்­ப­டாத சாரார் முன்­வந்து உத­வி­களை வழங்­கு­வார்கள். ஆனால் நாடு இன்று எதிர்­நோக்­கி­யுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி அனைத்து மக்­க­ளை­யுமே பாகு­பா­டின்றிப் பாதித்­துள்­ளது. இதில் யார் யாருக்கு உத­வு­வது என்ற கேள்­விக்கே இட­மில்­லா­துள்­ளது.

இன்­றைய நாட்­களில் பண வசதி படைத்­த­வர்கள் முதல் ஏழைகள் வரை அனை­வ­ருமே பொரு­ளா­தார ரீதி­யாகப் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். எரி­பொ­ரு­ளின்மை, தொடர் மின்­சாரத் தடை கார­ண­மாக பாரிய வர்த்­த­கங்கள் கூட நெருக்­க­டியைச் சந்­தித்­துள்­ளன. பலர் தமது தொழில் நட­வ­டிக்­கை­களை கைவிட வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளார்கள். எரி­பொருள் தட்­டுப்­பாடு கார­ண­மாக வாக­னங்கள் மூலம் தொழில்­பு­ரியும் சார­திகள் உள்­ளிட்ட பல்­லா­யிரக்கணக்­கானோர் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். எரி­வாயு இன்­மையால் பல ஹோட்­டல்­களும் மூடப்­பட்­டுள்­ளன. இந்தப் பொரு­ளா­தார நெருக்­கடி நிலை கார­ண­மாக பல தொழில் நிறு­வ­னங்கள் தமது ஊழி­யர்­களின் எண்­ணிக்­கையை வெகு­வாகக் குறைத்­துள்­ளன. பாரிய தொழிற்சாலைகள் கூட ஆயிரக்கணக்கான தமது தொழிலாளர்களை பணி இடைநிறுத்தம் செய்யத் தீர்மானித்துள்ளன. இதனால் பலர் தொழில்­வாய்ப்­பு­களை இழக்க நேரிட்டுள்ளது.

அரசாங்க ஊழியர்களின் தொழிலுக்கு உத்தரவாதமில்லா நிலை தோன்றியுள்ளது. ஐந்து வருட விடுமுறை வழங்கி அரச ஊழியர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியமற்ற அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படாது என்பது உறுதியாகிறது.

வாழ்க்கைச் செலவு உச்­சத்தைத் தொட்­டுள்ள இன்­றைய நாட்­களில் வரு­மா­ன­மின்றித் தவிக்கும் இந்தக் குடும்­பங்­க­ளுக்கு உதவிக் கரம் நீட்­டு­வது அவ­சி­ய­மாகும். ஆங்காங்கே இவ்வாறான சிறிய சிறிய பணிகள் முன்னெடுக்கப்படுவதைக் காண முடிகிறது.
இருப்பினும் முஸ்லிம் சமூகம் பள்­ளி­வா­சல்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு நிர்­வ­கிக்­கப்­ப­டு­வதால், ஒவ்­வொரு பள்­ளி­வா­சல்­களும் தமது மஹல்­லா­வுக்­குட்­பட்ட தேவை­யு­டைய குடும்­பங்­களை இனங்­கண்டு எவ்­வாறு உத­வலாம் என்­பது குறித்துத் திட்­ட­மிட்டுச் செயற்­பட வேண்டும்.

முஸ்லிம் சமூக நிறு­வ­னங்­க­ளுக்கும் இதில் பொறுப்­புள்­ளது. தமது ஸகாத், ஸத­காக்கள் மூலம் உதவக் கூடி­ய­வர்­க­ளி­ட­மி­ருந்து பணத்தைத் திரட்டி ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யின்றித் தவிக்கும் குடும்­பங்­களை இனங்­கண்டு உத­வி­களை வழங்க வேண்டும். துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று சமூ­கத்தில் மக்­களை மென் மேலும் நெருக்­க­டிக்குள் தள்­ளு­கின்ற செயற்­பா­டு­களே அதிகம் இடம்­பெ­று­கின்­றன. பொருட்­களைப் பதுக்கி வைத்து வியா­பாரம் செய்­ப­வர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. அடிப்படை உணவான அரிசியைக் கூட பதுக்கி வைக்கின்றளவுக்கு சில வியாபாரிகள் மோசமாக நடந்து கொள்கின்றமை கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும்.

இது மக்­க­ளி­ட­மி­ருந்து கொள்­ளை­ய­டிப்­ப­தற்­கான நேர­மல்ல. மாறாக ஒரு­வ­ருக்­கொ­ருவர் உதவி ஒத்­தா­சை­யா­க­வி­ருந்து இந்த நெருக்­க­டி­யி­லி­ருந்து நாம் மீளத் தலைப்­பட வேண்டும். நமது செயற்­பா­டுகள் ஒரு போதும் இறை­வனின் புறத்­தி­லி­ருந்து தண்­ட­னையைக் கொண்­டு­வ­ரு­ப­வை­யாக அன்றி அருளைக் கொண்டு வரு­ப­வை­யாக அமைய வேண்டும். இன்­றைய இந்த நெருக்­கடி நிலை­மைக்கு ஊழல் நிறைந்த அர­சி­யல்­வா­தி­களும் அதிகாரிகளும் மாத்திரம் காரணமல்ல. சந்தர்ப்பம் பார்த்து கொள்ளையடிக்கின்ற இவ்வாறான வியாபாரிகளும்தான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

எனவேதான் நெருக்கடியான இன்றைய நாட்களில் ஒருவரிடமிருந்து பொருளாதாரத்தை எப்படி அபகரிக்கலாம் என்பது பற்றிச் சிந்தியாது எவ்வாறு ஒருவருக்கொருவர் கொடுத்துதவலாம் என்பது பற்றிச் சிந்திப்போம். நமது பிரதேசங்களில் ஒருவர் கூட உண்ண வழியின்றி பட்டினியுடன் படுக்கைக்குச் செல்ல அனுமதிக்காதிருப்போம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.