‘ஸதகா’ மூலம் இன­வா­தி­க­ளுக்கு பதி­லடி கொடுத்த டாக்டர் ஷாபி

0 346

எம்.எப்.எம்.பஸீர்

சிங்­கள தாய்­மாருக்கு சட்ட விரோ­த­மாக கருத்தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட வைத்­தியர் ஷாபிக்கு, கட்­டாய விடு­முறை காலத்தில் வழங்­கப்­ப­ட­வேண்­டிய சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள் செலுத்­தப்­பட்­டுள்­ளன. இதற்­கான காசோலை கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக் கிழமை தனக்கு கிடைக்கப் பெற்­ற­தனை வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் ‘விடிவெள்ளி’யிடம் உறு­திப்­ப­டுத்­தினார்.

குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­தம கணக்­காளர் கே.சி.எம்.முதன்­னா­யக்­கவின் கையொப்­பத்­துடன் 337496 எனும் இலக்­கத்தை உடைய காசோலை ஊடாக இந்த சம்­பள நிலுவை செலுத்­தப்­பட்­டுள்­ளது. 2 மில்­லியன் 6 இலட்­சத்து 75 ஆயி­ரத்து 816 ரூபா 48 சதம் ( 2675816.48) இவ்­வாறு நிலுவை சம்­பளக் கொடுப்­ப­ன­வாக செலுத்­தப்­பட்­டுள்­ளது. சுகா­தார அமைச்சின் மக்கள் வங்­கியில் உள்ள கணக்­கி­லி­ருந்து இந்த நிலுவை செலுத்­தப்­பட்­டுள்­ளது.

சம்­ப­ளத்தை பெறு­வ­தற்­கான போராட்டம்:
முன்­ன­தாக எதிர்­வரும் ஜூலை 10 ஆம் திக­திக்குள் வைத்­தியர் ஷாபியின் சம்­பள, கொடுப்­ப­னவு நிலு­வை­களை பூர­ண­மாக செலுத்தி முடிப்­ப­தாக சுகா­தார அமைச்சு மேன் முறை­யீட்டு நீதி­மன்­றுக்கு சட்ட மா அதிபர் ஊடாக கடந்த 07ஆம் திகதி அறி­வித்­தது.
சட்­ட­வி­ரோ­த­மாக கருத்­தடை செய்­த­தாக பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு உள்­ளாக்­கப்­பட்டு கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட தனக்கு, வழங்­கப்­பட வேண்­டிய சம்­பள நிலுவை மற்றும் கொடுப்­ப­ன­வு­களை உட­ன­டி­யாக வழங்க உத்­த­ர­வி­டு­மாறு கோரி குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தியர் சேகு சிஹாப்தீன் மொஹம்மட் ஷாபி மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் தாக்கல் செய்த எழுத்­தாணை ( ரிட்) கடந்த 7 ஆம் மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் பரி­சீ­லிக்­கப்­பட்­டது.

அரச நிர்­வாக அமைச்சின் உறுதி :
இதற்கு முன்னர் குறித்த மனு பரி­சீ­லிக்­கப்­பட்ட போது அரச நிர்­வாக அமைச்சின் நிறு­வ­னங்கள் தொடர்­பி­லான பணிப்­பளர் நாய­கத்தின் கடிதம் ஒன்­றினை மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்தி, சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் பிர­சன்­ன­மான மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி சுமதி தர்­ம­வர்­தன வைத்­தியர் ஷாபி கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்ட காலப்­ப­கு­தியில், அவ­ருக்கு செலுத்­தப்­ப­ட­வேண்­டிய அடிப்­படை சம்­பளம், கொடுப்­ப­னவு, வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­னவு, இடைக்­கால கொடுப்­ப­ன­வுகள் உள்­ளிட்­ட­வற்றை வழங்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக நீதி­மன்­றுக்கு தெரி­வித்­தி­ருந்தார்.

சுகா­தார அமைச்சின் உறுதி :
இந் நிலை­யி­லேயே, கடந்த 7 ஆம் திகதி மனு பரி­சீ­ல­னைக்கு வந்த போது, குறித்த அடிப்­படை சம்­பளம், கொடுப்­ப­னவு, வாழ்க்கைச் செலவு கொடுப்­ப­னவு, இடைக்­கால கொடுப்­ப­ன­வுகள் உள்­ளிட்­ட­வற்றை ஜூலை 10 ஆம் திக­திக்குள் முழு­மை­யாக செலுத்­து­வ­தாக சுகா­தார அமைச்சின் சார்பில் உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டது.

வைத்­தியர் ஷாபி­யினால் தாக்கல் செய்­யப்­பட்ட இந்த எழுத்­தாணை மனுவில், குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­முவ, அவ்­வைத்­தி­ய­சா­லையின் முன்னாள் பணிப்­பாளர் வைத்­தியர் ஏ.எம்.எஸ். வீர­பண்­டார, சுகா­தார அமைச்சர் கெஹ­லிய ரம்­புக்­வெல்ல,சுகா­தார அமைச்சின் செயலர் மேஜர் ஜெனரல் வைத்­தியர் எஸ்.எம். முண­சிங்க, சுகா­தார சேவைகள் பணிப்­பாளர் நாயகம் வைத்­தியர் அசேல குண­வர்­தன ஆகியோர் பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

இதன்­போது போது, மனு­தா­ர­ரான வைத்­தியர் ஷாபி சார்பில் மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சிரேஷ்ட சட்­டத்­த­ரணி புலஸ்தி ரூப­சிங்க, தனது சேவை பெறு­ந­ருக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும் அடிப்­படை ஒழுக்­காற்று விசா­ர­ணைகள், தற்­போ­தைய குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பணிப்­பாளர் வைத்­தியர் சந்­தன கெந்­தன்­க­முவ ஊடாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வது தொடர்பில் ஆட்­சே­ப­னை­களை முன் வைப்­ப­தாக கூறினார். குறித்த பணிப்­பாளர் பக்­கச்­சார்­பான நபர் எனவும், அவர் தொடர்பில் அரச சேவை ஆணைக் குழு­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இதன்­போது சட்­டத்­த­ரணி புலஸ்தி ரூப­சிங்க குறிப்­பிட்­டி­ருந்தார்.

எனினும் 7 ஆம் திகதி பரி­சீ­ல­னை­களின் போது, வைத்­தியர் சந்­தன கெந்தன் கமுவ முன்­னி­லையில் ஒழுக்­காற்று விசா­ர­ணை­களை எதிர்­கொள்ள வைத்­தியர் ஷாபிக்கு ஆட்­சே­பனை இல்லை என சட்­டத்­த­ர­ணிகள் மன்­றுக்கு தெரி­வித்­தனர்.

அதற்­க­மைய, மனுவின் ஊடாக கோரப்­பட்ட நிவா­ர­ணங்கள் கிடைத்­துள்­ளதன் பின்­ன­ணியில், இந்த ரிட் மனுவை மீளப் பெற்­றுக்­கொள்ள வைத்­தியர் சாபி சிஹாப்தீன் தரப்பு கோரிய நிலையில், வழக்கை முடி­வுக்கு கொண்­டு­வர நீதி­மன்றம் தீர்­மா­னித்­தது.

அடிப்­ப­டை­யற்ற குற்­றச்­சாட்டு :
குரு­ணாகல் போதனா வைத்­தி­ய­சா­லையின் பிர­சவ மற்றும் மகப்­பேற்று பிரிவின் வைத்­தி­ய­ராக தான் சேவை­யாற்­றி­ய­தா­கவும், இதன்­போது சட்ட விரோத கருத்­தடை தொடர்பில் ஆதா­ர­மற்ற, இன ரீதி­யி­லான வெறுக்கத்தக்க பிர­சா­ரங்­களை மையப்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து தான் கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும் மனு­தாரர் மனுவில் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மகப்­பேற்றுத் துறையில் நிபு­ணர்கள் பலரும், தன் மீதான குற்­றச்­சாட்­டுக்கள் அறி­வியல் ரீதி­யாக சாத்­தி­ய­மற்­றவை எனவும் பொய்­யா­னவை எனவும் ஆதா­ர­பூர்­வ­மாக விளக்­கியும், தன் மீதான பொய்க்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்ந்து சுமத்­தப்­பட்­ட­தாக மனு­தாரர் மனுவில் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அவ்­வா­றான நிலையில் தனக்கு கிடைக்க வேண்­டிய சம்­பள நிலுவை மற்றும் கொடுப்­ப­ன­வுகள் இது­வரை கிடைக்­க­வில்லை எனவும் தாபன விதிக் கோவையின் 20 (2) ஆம் பிரிவின் படி, கட்­டாய விடு­மு­றையில் உள்­ள­வ­ருக்கு சம்­பளம் வழங்­கப்­படல் வேண்டும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யிருந்த மனு­த­ார­ரான வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் அவற்றை செலுத்த உட­ன­டி­யாக பிர­தி­வா­தி­க­ளுக்கு உத்­த­ர­வி­டு­மாறு கோரி­யி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

கிடைத்த பணத்தை ஸதகா செய்த வைத்­தியர் ஷாபி :
இந் நிலையில், தனக்கு கிடைக்கப் பெற்ற சம்­பளம், கொடுப்­ப­னவு நிலு­வை­களை அத்­தி­ய­வ­சிய மருந்து கொள்­வ­ன­வுக்­காக சுகா­தார அமைச்­சுக்கே வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் வழங்க நட­வ­டிக்கை எடுத்­துள்ளார். இது தொடர்பில் சுகா­தார அமைச்சின் செய­ல­ருக்கு வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் அறி­வித்­துள்ளார்.

 

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட காசோலை

இந் நிலையில் இது குறித்து சுகா­தார அமைச்சின் மருத்­துவ தொழில் நுட்ப சேவைகள் பிரிவின் பணிப்­பாளர் வைத்­தியர் அன்வர் ஹம்­தா­னி­யுடன் கலந்­து­ரை­யா­டி­யுள்ள வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன், தனக்கு கிடைக்கப் பெற்ற நிலுவை சம்­பளம், கொடுப்­ப­னவில் அத்­தி­ய­வ­சிய மருந்து பொருட்­களை கொள்­வ­னவு செய்து ‘ஸதகா’ ( தான தர்மம்) செய்வதாக குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­தி­யா­வி­லி­ருந்து தரு­விக்­கப்­படும் மருந்­துகள் :
இதற்­காக இந்­திய மருந்து நிறு­வனம் ஒன்­றுடன் பேசப்­பட்­டுள்­ள­துடன், மிக விரைவில் அந்த மருந்துப் பொருட்கள் இலங்­கைக்கு அனுப்­பப்­பட்ட பின்னர், அவற்றை சுகா­தார அமைச்­சிடம் நேரில் கைய­ளிக்க வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் நட­வ­டிக்கை எடுத்­துள்ளார்.

வைத்­தியர் ஷாபி கூறு­வது என்ன?
இந் நிலையில், தான் கைது செய்­யப்­பட்­டது முதல் இது வரை­யி­லான அனைத்து விட­யங்­க­ளையும் முன்­னி­றுத்தி வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் சமூ­கத்­துக்கும், நாட்­டுக்கும் இரு செய்­தி­களை கூற விரும்­பு­வ­தாக ‘விடிவெள்ளி’யு­ட­னான கலந்­து­ரை­யா­டலில் குறிப்­பிட்டார்.

நாட்டில் இதன் பிறகு ஒரு அரச ஊழி­ய­ருக்கோ, வைத்­தி­ய­ருக்கோ ஏன் சாதா­ரண மனிதர் ஒரு­வ­ருக்கோ தனக்கு நடந்­ததைப் போன்று ஒரு சம்­பவம் நடக்­கவே கூடாது என்­பது தனது முதல் செய்தி என வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் குறிப்­பிட்டார்.

அடுத்­து இன­வாதம், மத­வாதம் உள்­ளிட்ட பேதங்­களை மறந்து அனைத்து மக்­களும் ஒற்­று­மைப்­பட வேண்டும் என்­பது தனது இரண்­டா­வது செய்தி என அவர் குறிப்­பிட்டார்.

மனை­வியின் துணையும் ஊக்­க­ம­ளிப்பும்:
வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் கைது செய்­யப்­பட்­ட­தி­லி­ருந்து, அவர் விளக்­க­ம­றி­யலில் இருந்த காலப்­ப­கு­தி­யிலும் சரி அதன் பின்­ன­ரான காலப்­ப­கு­தி­யிலும் சரி இது­வரை அவ­ரது மனைவி வைத்­தியர் இமா­ராவின் வகி­பாகம் மிக முக்­கி­ய­மா­னது என்­ப­துடன் போற்­றத்­தக்­க­து­மாகும். அதே போல், இங்கு வைத்­தியர் ஷாபி, தனது நிலுவைச் சம்­ப­ளத்தை ஸதகா செய்ய எடுத்த தீர்­மா­னத்­திலும் அவரது மனைவி வைத்­தியர் இமா­ராவின் ஊக்­க­ம­ளிப்பு இன்­றி­ய­மை­யா­தது.

நிலுவைச் சம்­ப­ளத்தை ஸதகா செய்ய தான் எடுத்த தீர்­மா­னத்­தினை, தனது மனைவி எப்­போதும் போல பக்­க­ப­ல­மாக இருந்து ஊக்­க­ம­ளித்து, அதனை கண்­டிப்­பாக செய்­யு­மாறு ஆலோ­ச­னை­ய­ளித்­த­தாக இது குறித்து வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன் ‘விடிவெள்ளி’யுடனான கலந்­து­ரை­யா­டலில் குறிப்­பிட்டார்.

விளம்­பரம் தேட­வில்லை :
தனது சம்­பள நிலு­வையை அத்­தி­ய­வ­சிய மருந்து கொள்­வ­ன­வுக்கு வழங்க தீர்­மா­னித்­துள்ள வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன், அத­னூ­டாக தான் எந்த பிர­பல்­யத்­தை­யுமோ அல்­லது விளம்­ப­ரத்­தை­யுமோ எதிர்­பார்க்­க­வில்லை என்பதையும் சுட்டிக்காட்டு­கிறார்.
தனக்கு தற்­போதும் போது­மான பிர­பல்யம் இருப்­ப­தாக சுட்­டிக்­காட்டும் அவர், தனக்கு எவ்­வா­றான இன்­னல்கள் வந்த போதும் தன்னைக் கைவி­டாத இறை­வ­னுக்­காக, இவ்­வாறு அந்த பணத்தில் மருந்து வாங்கி ஸதகா செய்­வ­தாக குறிப்­பிட்டார். தனது இம்மை, மறுமை வாழ்வின் விடி­வுக்­காக அதனைத் தான் செய்­வ­தாக அவர் கூறினார். எனினும் இந்த ஸத­காவை வெளிப்­ப­டை­யாக செய்ய காரணம், நாட்டின் தற்­போ­தைய நிலையில், இவ்­வா­றான பணி­க­ளுக்கு ஏனை­யோ­ரையும் ஊக்­கு­விப்­பது ஒன்றே நோக்கம் என அவர் குறிப்­பிட்டார்.

மக்­களின் நம்­பிக்கை வீண் போகாது:
இந் நிலையில், தன் மீதான பொய்க் குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட போதும், மக்கள் வைத்­தியர் ஷாபி நல்­லவர் என நம்­பி­ய­தா­கவும், அத­னா­லேயே அவர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து தனக்­காக நோன்பு பிடித்து பிரார்த்­தனை செய்­த­தா­கவும் நன்­றி­யோடு நினைவு கூறும் வைத்­தியர் ஷாபி சிஹாப்தீன், அந்த நம்­பிக்­கையை தான் என்றும் பாது­காக்க தவறப் போவ­தில்லை என்றும் உணர்­வு­பூர்­வ­மாக குறிப்­பிட்டார்.

உற­வி­னரின் முகநூல் பதிவு :
இத­னி­டையே டாக்டர் ஷாபிக்கு சம்­பளப் பணம் மீள­ளிக்­கப்­பட்­டமை மற்றும் அவர் அதனை மருந்துப் பொருட்­களை கொள்­வ­னவு செய்ய வழங்­க­வுள்­ளமை தொடர்பில் அவ­ரது உற­வினர் இன்ஷாப் தீன் முக­நூலில் எழு­தி­யுள்ள பதிவு ஒன்றில் பின்­வ­ரு­மாறு குறிப்­பி­டு­கிறார்.

“டாக்டர் ஷாபி கைது செய்­யப்­பட்­ட­போது அவ­ரதும் அவ­ரது மனைவி டாக்டர் இமாரா உட்­பட அவர்­களின் குடும்­பத்தின் மன­நிலை எப்­ப­டி­யி­ருந்­தி­ருக்கும். செய்­யாத ஒரு தப்­புக்­காக அந்தக் குடும்பம் 3 வரு­டங்­க­ளுக்கு மேலாக ஒதுக்­கப்­பட்டு உள­ரீ­தி­யாகப் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதி­லி­ருந்து மீள்­வ­தென்­பது அவ்­வ­ளவு எளி­தான விட­ய­மல்ல.
இந்தப் பிரச்­சினை ஏற்­பட்­ட­போது முழுக் குடும்­பமும் அதிர்ச்­சியில் இருந்தோம். இவ்­வ­ளவு நல்ல மனிதர் இப்­படித் தாக்­கப்­ப­டு­கி­றாரே என கவ­லை­ய­டைந்தோம்.

தனக்கு எதி­ராக மிகப் பெரிய சூழ்ச்சி ஒன்று நிகழ இருப்­ப­தை அவர் அன்று எதிர்­பார்க்­க­வில்லை. தனக்கு வைத்­தி­ய­சா­லை­யிலும் சரி, நக­ரிலும் சரி எதி­ரிகள் இருப்­பது பற்றி அவ­ருக்கு நன்­றாகத் தெரியும். ஆனால் இந்தக் கோணத்தில் இது திரும்பும் என்று எதிர்­பார்க்­க­வில்லை. ஆனால் அவர் இந்த சவா­லுக்கு தைரி­ய­மாக முகங்­கொ­டுத்தார்.

பிள்­ளை­களோ குரு­நா­க­லையில் ஒரு பிர­சித்தி பெற்ற சிங்­கள மொழிப் பாட­சா­லை­யி­லேயே கல்வி கற்­றனர். வகுப்பில் இருப்­ப­துவோ ஓரிரு முஸ்­லிம்கள். நகரில் தகப்­ப­னுக்கு எதி­ராகப் போராட்டம். பாட­சா­லையில் ஆசி­ரி­யர்­களும் சக மாண­வர்­களும் பெற்­றோர்­களும் இவர்­களை நக்கல் செய்து ஒதுக்­கினர். அந்தப் பிள்­ளை­களின் மன­நிலை எப்­ப­டி­யி­ருந்­தி­ருக்கும். பிறகு பிள்­ளை­களை அங்­கி­ருந்து விலக்கி கல்­முனை சென்­றார்கள். தெரன, ஹிரு மற்றும் ஏனைய சிங்­கள ஊட­கங்­களில் மே 2019 இலி­ருந்து ஆகஸ்ட் 2020 வரை இவரின் பெயர் சொல்­லப்­ப­டாத ஒரு செய்தி வந்­தி­ருக்­காது. அந்த அள­விற்கு இந்தப் பிரச்­சி­னையை சமூ­க­ம­யப்­ப­டுத்தி சிங்கள மக்­களை திசை திருப்­பினர். ஆனால் இவ்­வா­றான எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் பொறு­மை­யாக இருந்தார்.

2019 நவம்பர் 17 ஆம் திகதி எனக்குக் கற்றுத் தந்த ஒரு விரி­வு­ரை­யா­ளர்­ த­ன­து ­மு­கநூல் பக்­கத்தில் இப்­படி எழு­தி­யி­ருந்தார். “நான் இன்று கோட்­டா­ப­ய­விற்கு எனது வாக்­கினை இரண்டு கார­ணங்­க­ளுக்­காக வழங்­கினேன். ஒன்று உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு நீதி வேண்டி. இரண்­டா­வ­தாக ‘வந்த (கருத்தடை) ஷாபி’ தண்­டிக்­கப்­பட வேண்டும் என்­ப­தற்­காக. ‘வந்த ஷாபி” என்றே அவர் எழு­தி­யி­ருந்தார். படித்­த­வர்­க­ளையும் நம்ப வைத்த நாடகம் தான் இந்த ‘வந்த சிகிச்சை’.

பிறகு என்ன நடந்­தது. அவர் நிர­ப­ராதி என்று தீர்ப்பு வழங்கி அவ­ரது சம்­பளப் பாக்­கி­யையும் வழங்­கும்­படி உத்­த­ர­வி­டப்­பட்­டது. பேரி­ன­வா­தி­க­ளுக்கு இது ஒரு பேர­டி­யில்­லையா? அத்­தோடு நின்­று­வி­டாமல் நான் இந்த நாட்டை நேசிப்­பவன் என்ற அடை­யா­ளத்தைக் காட்டி தனக்குக் கிடைக்கப் பெற்ற சம்­பளப் பாக்­கி­யினை குரு­நா­கலை வைத்­தி­ய­சா­லை­யிற்கு அன்­ப­ளிப்புச் செய்தார். இன­வா­தி­க­ளுக்கு இதை­விட வேறென்ன செருப்­படி வேண்டும்.

எந்­த­ள­விற்கு அவரின் கௌரவம் களங்­கப்­ப­டுத்­தப்­பட்­டதோ அந்த அள­விற்கு அவரின் குற்­ற­மற்ற தன்மை ஊட­கங்­க­ளி­னூ­டாக மக்கள் மயப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. இன்னும் ஒரு குற்­ற­வாளி என்றே சில மாற்று மதத்­தினர் நினைத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஊட­கங்­க­ளுக்கு அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்டு இவர் பற்­றிய உண்மைத் தக­வல்­களை மக்­க­ளுக்குத் தெரி­விக்க வேண்டும்” எனக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

டாக்டர் ஷாபி குற்­ற­மற்­றவர் என நிரூ­பிக்­கப்­பட்­டமை மற்றும் அவர் தனது சம்­பளப் பாக்­கியை மருந்­துகள் கொள்­வ­னவு செய்ய திருப்­பி­ய­ளித்­தமை போன்ற சம்­ப­வங்கள் தொடர்பில் சமூக வலைத்­த­ளங்­களில் முஸ்­லிம்­களும் முஸ்­லி­மல்­லா­த­வர்­களும் பலத்த பாராட்­டுக்­களைத் தெரிவித்து வருவதுடன் டாக்டர் ஷாபி இதன் மூலம் இனவாதிகளுக்கு பலத்த பதிலடியைக் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.–Vidivelli

Leave A Reply

Your email address will not be published.