ஹஜ் பயண கட்டண அதிகரிப்பால் யாத்திரை மீதான ஆர்வம் குறைவு

968 பேரை பயணத்தை உறுதி செய்துள்ளனர்

0 396

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ஹஜ் யாத்­தி­ரைக்­காக சுமார் 4600 பேர் தலா 25 ஆயிரம் ரூபா பதி­வுக்­கட்­டணம் செலுத்தி முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் தங்­களைப் பதிவு செய்து கொண்­டி­ருந்­தாலும் ஹஜ் கட்­டண அதி­க­ரிப்பின் கார­ண­மாக இவ்­வ­ருடம் மக்கள் ஹஜ் கட­மையில் ஆர்வம் குறைந்­த­வர்­க­ளா­கவே இருக்­கின்­றனர்.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்டா கிடைக்­கப்­பெற்றும் 968 பேரே தங்கள் ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­துள்­ளனர்.ஹஜ் கட்­டணம் இவ்­வ­ருடம் 20-–25 இலட்­சத்­துக்கு உட்­பட்­ட­தாக முக­வர்­களால் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது தொகுதி ஹஜ் பய­ணி­களை ஏற்­றிக்­கொண்டு எதிர்­வரும் 1 ஆம் திகதி விமானம் பய­ணிக்­க­வுள்­ளது. எதிர்­வரும் ஜூலை 1 ஆம் திகதி முதல் 4 ஆம் திக­தி­வரை ஹஜ்­ வி­மான சேவைகள் இடம்­பெறும். ஜூலை 15 முதல் 20 ஆம் திக­திக்குள் இலங்கை ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கட­மையை நிறைவு செய்து கொண்டு நாடு திரும்­ப­வுள்­ளனர் என முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்

ஹஜ் யாத்­திரை தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில் “ ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவில் நாட்­டுக்­கா­கவும் நாட்டு மக்­களின் சுபீட்­சத்­துக்­கா­கவும் நெருக்­கடி நிலை­மையின் விடி­வுக்­கா­கவும் விசேட துஆ பிரார்த்­த­னை­களை மேற்­கொள்­ளு­மாறு வேண்டிக் கொள்­கிறேன். நாடு நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யுள்ள நிலையில் இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. இதற்­காக அனு­மதி வழங்­கிய அமைச்­ச­ருக்கு நாம் நன்றி கூற வேண்டும்.

ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சவூதி அரே­பி­யாவின் சட்ட விதி­க­ளைப்­பேணி தமது கட­மை­களை முன்­னெ­டுக்க வேண்டும். சவூதி அரே­பி­யா­வி­லுள்ள இலங்கை தூத­ரக அதி­கா­ரிகள் இலங்கை ஹாஜி­களின் நலன்­களைக் கவ­னிப்­பார்கள்.

ஹஜ் முக­வர்கள் தாம் அற­விடும் கட்­ட­ணங்­க­ளுக்கு அமை­வாக யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு சேவை­களை வழங்­க­வேண்டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டி­ருக்­கி­றார்கள். தமது யாத்­தி­ரைக்­கான முக­வர்­களைத் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்ளும் தெரிவு இவ்­வ­ருடம் ஹஜ் யாத்திரிகளிடமே வழங்கப்பட்டது என்றார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.