21 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதா? முஸ்லிம் கட்சிகள் தீர்மானமில்லை

0 293

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
21 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் பாரா­ளு­மன்­றத்­திற்கு வரும்­போது அதனை ஆத­ரிப்­பதா? இல்­லையா? என்ற தீர்­மா­னத்­திற்கு இன்னும் வர­வில்லை என பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முஸ்லிம் கட்­சிகள் தெரி­வித்­துள்­ளன.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் மற்றும் தேசிய காங்­கிரஸ் என்­பன பாரா­ளு­மன்­றத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நிலையில், 21 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்தம் இந்த வாரம் பாரா­ளு­மன்­றுக்கு கொண்­டு­வ­ரப்­ப­ட­வி­ருந்­தது.

எனினும், அமைச்­ச­ரவை அனு­ம­தியில் இழு­பறி நிலை மற்றும் பொது­ஜன பெர­மு­ன­வி­னரின் எதிர்ப்பு கார­ண­மாக 21 ஆம் திருத்தம் பாரா­ளு­மன்றில் சமர்­பிக்­கப்­ப­டு­வது தாம­த­மாகி வரு­கின்­றது.

முஸ்லிம் காங்­கிரஸ்
இந்­நி­லையில் இது தொடர்­பாக விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­வித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் சட்­டத்­த­ரணி நிஸாம் காரி­யப்பர், 21 ஆவது திருத்தச் சட்­டத்தை கொண்டு வரு­வ­தாக உறு­தி­ய­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்தும் ஏமாற்­றி­வ­ரு­கிறார். மூன்று திங்­கட்­கி­ழமை கடந்தும் 21 ஆவது திருத்த சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வையில் சமர்ப்­பிக்­கப்­ப­ட­வில்லை. பிர­தமர் பசில் ராஜ­பக்­சவைக் காப்­பாற்­று­வ­தற்கு முனை­கி­றாரா என்ற சந்­தேகம் எழு­கி­றது.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் 21 ஆவது திருத்­தச்­சட்­டத்தை கொண்­டு­வ­ரு­வ­தாக கூறி அர­சாங்கம் தொடர்ந்து காலத்தைக் கடத்தி வரு­கின்­றமை மிகவும் கவ­லைக்­கு­ரி­ய­தாக இருக்­கி­றது என்றார்.

அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்
அத்­தோடு, உத்­தே­சிக்­கப்­பட்­டுள்ள 21 ஆவது திருத்தச் சட்­டத்தில் ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்கள் நிபந்­த­னை­க­ளுக்கு உட்­பட்­ட­தாக இருக்க வேண்டும். அவ்­வாறு இருந்­தாலே அது சிறு­பான்­மை­யி­ன­ருக்கு அனு­கூ­ல­மாக இருக்கும் என்­பன உட்­பட 21 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் உள்­வாங்­கப்­பட வேண்­டிய பல விட­யங்­களை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஐக்­கிய மக்கள் சக்தி கட்­சியின் ஊடாக சமர்ப்­பித்­துள்­ளது என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் பொதுச் செய­லாளர் எஸ்.சுபைர்தீன் தெரி­வித்தார்.

21ஆவது திருத்­தச்­சட்டம் தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் நிலைப்­பாட்­டினை தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் அர­சியல் யாப்பு சபைக்கு ஐவர் நிய­மிக்­கப்­ப­டு­வ­துடன் அதில் ஒருவர் தமி­ழ­ரா­கவும் மற்­று­மொ­ருவர் முஸ்­ஸி­மா­கவும் இருக்க வேண்டும். அத்­தோடு கட்­சி­மா­றுதல் தடை செய்­யப்­ப­ட­வேண்டும். மேலும் அரச நிர்­வாக சேவைக்கு நிய­மனம் பெறு­ப­வர்கள் நிர்­வாக சேவையைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். இளைப்­பா­ரிய இரா­ணுவ அதி­கா­ரிகள் நிய­மிக்­கப்­ப­டக்­கூ­டாது.

பாரா­ளு­மன்­றத்தைக் கலைக்கும் அதி­காரம் ஜனா­தி­ப­திக்கு இருந்­தாலும் பிர­த­மரின் ஆலா­ச­னையின் பேரிலே அது இடம் பெற­வேண்டும். போன்ற விட­யங்கள் 21 ஆவது திருத்த திருத்த சட்ட மூலத்தில் உள்­வாங்­கப்­ப­ட­வேண்டும். அத்­தோடு 19 திருத்­தச்­சட்­டத்தில் உள்­ள­டங்­கி­யி­ருக்கும் சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நிய­மனம் பெற வேண்டும் என எமது ஆலோ­ச­னை­களை முன்­வைத்­துள்ளோம் என்றார்.

தேசிய காங்­கிரஸ்
இத­னி­டையே, அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேறி சுயா­தீ­ன­மாக இயங்கும் தேசிய காங்­கிரஸ் கட்சி தனது நிலைப்­பாட்­டினை இது­வரை வெளி­யி­ட­வில்லை. அக்­கட்­சியின் தலைவர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அதா­வுல்லாஹ் 21 ஆம் திருத்­த­த்திற்கும் ஆத­ர­வ­ளிப்பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.