எம்.பி.க்களுக்கு நஷ்டஈடு வழங்கமுன் முஸ்லிம் மக்களுக்கு வழங்குக

சிவில் சமூகம் கோரிக்கை

0 247

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
கடந்த மே மாதம் 9ஆம் திகதி நாட்டில் இடம்­பெற்ற வன்­செ­யல்­களால் பாதிக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நஷ்­ட­ஈடும், வீடு­களும் வழங்­கப்­ப­டு­வ­தற்கு முன்பு கடந்த காலங்­களில் அளுத்­கம, ஜின்­தோட்ட, திகன, மினு­வங்­கொட, அம்­பாறை போன்ற பகு­தி­களில் இடம்­பெற்ற வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கும், பனா­கொட முகாம் குண்டு வெடிப்புச் சம்­ப­வத்­தினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கும் முழு­மை­யாக நஷ்ட ஈடு வழங்­கப்­பட வேண்டும். அதன்­பின்பே மே மாதம் 9 திக­திய வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட வேண்­டு­மென உச்­ச­நீ­தி­மன்றில் மனு­தாக்கல் செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த மனு ஹில்மி அஹமட், சார்னி ஜய­வர்­தன, மொஹமட் பிஸ்ரி கஸ்­ஸாலி, தஸ்­லிமா தஹ்லான், மொஹமட் சாம் நவாஸ், சாந்­தினி ஜய­வர்­தன மற்றும் அவன்தி சக­பந்து ஆகி­யோ­ரினால் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. குறிப்­பிட்ட மனு­வினை உச்­ச­நீ­தி­மன்றில் தாக்கல் செய்­வ­தற்­காக தகவல் அறியும் உரிமை மூலம் தக­வல்­களைத் திரட்டிக் கொள்­வ­தற்­காக விண்­ணப்­பிக்­கப்­பட்­டுள்­ள­தாக ஹில்மி அஹமட் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

இத­ன­டிப்­ப­டையில் அளுத்­கம ஜின்­தோட்ட, திகன, மினு­வாங்­கொடை, அம்­பாறை, பனா­கொட சம்­ப­வங்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு முழு­மை­யாக நஷ்ட ஈடு வழங்­கப்­பட்­டு­விட்­டதா? இல்­லை­யாயின் இது­வரை நஷ்ட ஈடு வழங்­கப்­ப­டா­துள்ள பாதிக்­கப்­பட்ட மக்­களின் எணண்­ணிக்கை, நஷ்ட ஈட்டுத் தொகை என்­பன தக­வல் அறியும் உரிமை மூலம் சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னத்­தி­ட­மி­ருந்து கோரப்­பட்­டுள்­ளன எனவும் ஹில்மி அஹமட் தெரி­வித்தார். அமைச்சர் பிர­சன்ன ரண­துங்க மே 9 ஆம் திகதி வன்செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு நஷ்­ட­ஈடும் வீடும் வழங்­கு­வ­தாகக் கூறி­யி­ருக்­கிறார். இதனை நாம் எதிர்க்­க­வில்லை. ஆனால் கடந்­த­கா­லங்­களில் வன்­செ­யல்­க­ளினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு வழங்­கப்­பட்ட பின்பே அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு வழங்­கப்­பட வேண்­டு­மெ­னவும் அவர் கூறினார்.

இதே­வேளை அர­சி­யல்­யாப்­பின்­படி இது விட­யத்தில் மக்­களை இன, மத ரீதி­யா­கவோ அர­சியல் ரீதி­யா­கவோ பிரித்துப் பார்க்க முடி­யாது. அனை­வரும் இவ்­வி­ட­யத்தில் சம­மாக கரு­தப்­பட வேண்டும் என சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தெரி­வித்தார். அடிப்­படை உரிமை மனு விரைவில் உச்ச நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­ழுடும் எனவும் அவர் கூறினார்.

இந்­நி­லையில் கடந்த திங்­கட்­கி­ழமை சட்­டத்­த­ரணி சிராஸ் நூர்தீன் தலை­மையில் குறிப்­பிட்ட எழு­வரும் இது தொடர்பில் மனித உரிமை ஆணைக்­கு­ழுவில் முறைப்­பா­டொன்­றையும் பதிவு செய்­தனர்.

அளுத்­கம, ஜின்தோட்ட, மினுவாங்கொட, திகன, அம்பாறை மற்றும் பனாகொட சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்கப்பட்டதன்பின்பே மே 9 ஆம் திகதிய வன்செயல்களில் பாதிக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் அவர்களது முறைப்பாடு அமைந்திருந்தது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.