ஹஜ் யாத்திரைக்கு அரசாங்கம் அனுமதி

25 இலட்சம் ரூபா வரை கட்டணம் அறவிடப்படலாம்

0 228

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டில் நிலவும் பொரு­ளா­தார நெருக்­கடி மற்றும் அந்­நிய செலா­வணி பற்­றாக்­கு­றையை கருத்திற் கொண்டு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தில்லை என ஹஜ் முக­வர்கள் ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தாலும், அரசு இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு அனு­மதி வழங்­கி­யுள்­ளது.

புத்­த­சா­சன மற்றும் சமய விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் விது­ர­ விக்­கி­ர­ம­நா­யக்­கவின் தலை­மையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற கலந்­து­ரை­யா­ட­லின்­போது இவ்­வ­ருட ஹஜ் யாத்­தி­ரைக்கு அமைச்சர் அனு­மதி வழங்­கினார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் சுற்­றாடல் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் , முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் இப்­றாஹிம் அன்ஸார் மற்றும் ஹஜ் முக­வர்கள் சங்­கங்­களின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இவ்­வ­ருடம் இலங்­கைக்கு சவூதி ஹஜ் அமைச்சு 1585 கோட்டா வழங்­கி­யுள்­ளது. ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு தலா ஒரு குறிப்­பிட்ட தொகை டொலர் இலங்­கையின் மத்­திய வங்­கியில் வைப்­பி­லிடப்பட வேண்­டு­மென்ற நிபந்­தனை விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்பில் ஹஜ், உம்ரா முக­வர்கள் சங்­கத்தின் பிர­தித்­த­லைவர் அஹமட் நிஜார் விடி­வெள்­ளிக்கு கருத்து தெரி­விக்­கையில், ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுக்கும் முக­வர்கள் தங்­க­ளது பதிவுக் கட்­ட­ண­மாக ஒருவர் தலா ஒரு இலட்சம் ரூபா முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்குச் செலுத்த வேண்டும்.அத்­தோடு ஹஜ் யாத்­தி­ரி­கர்­க­ளுக்­கான கட்­ட­ண­மாக தலா 4000 ரூபா சேவைக் கட்­டணம் திணைக்­க­ளத்­துக்கு செலுத்­தப்­ப­ட­வேண்டும்.

இவ்­வ­ருட ஹஜ் கட்­டணம் சுமார் 25 இலட்­ச­மாக அமையும். இதே­வேளை ஹஜ் முக­வர்கள் சவூ­தியில் வழங்கும் சேவைகள் தங்­கு­மிட வச­தி­க­ளுக்­கேற்ப கட்­ட­ணத்தில் மாற்­றங்கள் ஏற்­படும். அத்­தோடு முக­வர்­களின் எண்­ணிக்கை இவ்­வ­ருடம் 15 ஆக மட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட 15 முக­வர்­க­ளுடன் ஏனைய ஹஜ் முக­வர்கள் இணைந்து ஹஜ் பயண ஏற்­பா­டு­களில் ஈடு­பட முடியும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

நாளை வெள்­ளிக்­கி­ழமை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தில் நடை­பெ­ற­வுள்ள கூட்­டத்தில் ஹஜ் முக­வர்கள் தொடர்பில் இறுத்­தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது என்றார்.

இதே­வேளை கொன்­ஸி­யூலர் சேவை­களை ஜித்­தாவில் உள்ள இலங்கை கொன்­ஸி­யூலர் காரி­யா­லயம் வழமை போன்று வழங்­க­வுள்­ளது.

ஹஜ் ஏற்­பா­டுகள் தொடர்­பான கலந்­து­ரை­யா­டல்கள் புத்­த­சா­சன மற்றும் மத­வி­வ­கா­ரங்கள் அமைச்­சிலும் இலங்கை மத்­திய வங்­கி­யிலும் இடம்­பெற்­றன.
ஹஜ் முக­வர்கள் தாங்கள் அழைத்துச் செல்லும் யாத்­தி­ரி­கர்­களின் எண்­ணிக்கை உட்­பட விப­ரங்­களை நாளை வெள்­ளிக்­கி­ழமை திணைக்­க­ளத்­திடம் கைய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டுள்­ளனர்.

இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­திரை மேற்­கொள்ள திட்­ட­மிட்­டுள்­ள­வர்கள் தாம­தி­யாது முக­வர்­களைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்பட்டுள்ளனர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.