பயங்கரவாதத் தடைச்சட்டம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பவர்களை அதிலிருந்து மீண்டு வரமுடியாத கரும்பக்கத்திற்குள் தள்ளுகின்றது

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா

0 264

(நா.தனுஜா)
பயங்­க­ர­வாதத்­ த­டைச்­சட்­ட­மா­னது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் அதி­லி­ருந்து மீண்டு வெளியே வர­மு­டி­யா­த­ள­விற்கு அவர்­களை சட்­ட­ரீ­தி­யான கரும்­பக்­கத்­திற்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றது.

நான் ஒரு சட்­டத்­த­ர­ணி­யா­கவும் பெரு­ம­ள­வான சட்ட உதவி மற்றும் அனை­வ­ரி­னதும் அவ­தா­னத்­தைக்­கொண்ட நப­ராக இருந்­த­போ­திலும், பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்டுத் தடுத்­து­வைக்­கப்­பட்­டமை மிகவும் கடி­ன­மான விட­ய­மா­கவே இருந்­தது. இருப்­பினும் அவ்­வாறு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள பலர் அதற்கு எதி­ராகப் போரா­டக்­கூ­டிய சக்­தியைக் கொண்­டி­ரா­த­வர்­க­ளாக இருப்­ப­தாக சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லா தெரி­வித்­துள்ளார்.

சிவில் சமூக அமைப்­புக்­களின் உல­க­ளா­விய கூட்­டணி என்ற அமைப்­பிற்கு வழங்­கி­யுள்ள நேர்­கா­ண­லொன்­றி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். அவர் அந்­நேர்­கா­ணலில் கூறி­யுள்ள முக்­கிய விட­யங்கள் வரு­மாறு:

நான் கைது­செய்­யப்­பட்­ட­மை­யா­னது அர­சாங்­கத்­தினால் முஸ்­லிம்கள் நடத்­தப்­படும் முறையை விமர்­ச­னத்­திற்கு உட்­ப­டுத்­து­கின்ற தெரி­வு­செய்­யப்­பட்ட முஸ்­லிம்கள் சிலரை அடக்­கு­வ­துடன், உயிர்த்த ஞாயி­றுதி­னத்­தாக்­கு­தல்கள் தொடர்பில் அவர்­கள்­மீது பழி­சு­மத்­து­வ­தற்­கான முயற்­சியின் ஓரங்­க­மாக இருக்­கக்­கூடும். இப்­போது விடு­த­லை­யாகி இருப்­ப­தென்­பது மீண்டும் பிறந்­த­தைப்­போன்று உண­ரச்­செய்­கின்­றது. நான் எனது வாழ்க்­கையை மெது­வாக மீளக்­கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு முயற்­சிக்­கின்றேன். நான் சிறைப்­ப­டுத்­தப்­பட்­டமை எனது குடும்­பத்­தாரின் அன்­றாட வாழ்க்­கை­மீது மிக ஆழ­மான தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. அவர்கள் அனை­வ­ரி­னது வாழ்க்­கையும் சுமார் இரு­வ­ரு­ட­கா­ல­மாக ஒரே இடத்தில் நின்­று­விட்­டது.

ஆனால் பிணையில் விடு­த­லை­யாகி இருப்­ப­தென்­பது அத்­தனை இல­கு­வான விட­ய­மல்ல. நான் எப்­போதும் எனது வழக்கு விசா­ர­ணை­களில் ஏற்­ப­டக்­கூ­டிய முன்­னேற்றம் குறித்து தொடர்ந்து கரி­ச­னை­யுடன் இருக்­கின்றேன்.

அடுத்­த­தாகப் பயங்­க­ர­வாதத் ­த­டைச்­சட்­ட­மா­னது தடுப்­புக்­கா­வலில் வைக்­கப்­பட்­டி­ருப்­ப­வர்கள் அதி­லி­ருந்து மீண்டு வெளியே வர­மு­டி­யா­த­ள­விற்கு அவர்­களை சட்­ட­ரீ­தி­யான கரும்­பக்­கத்­திற்குள் (இக்­கட்­டான சூழ்­நி­லைக்குள்) தள்­ளி­யி­ருக்­கின்­றது. நான் ஒரு சட்­டத்­த­ர­ணி­யா­கவும் பெரு­ம­ள­வான சட்ட உதவி மற்றும் அனை­வ­ரி­னதும் அவ­தா­னத்­தைக்­கொண்ட நப­ராக இருந்­த­போ­திலும், பயங்­க­ர­வா­தத்­த­டைச்­சட்­டத்­தின்கீழ் கைது­செய்­யப்­பட்டுத் தடுத்­து­வைக்­கப்­பட்­டமை மிகவும் கடி­ன­மான விட­ய­மா­கவே இருந்­தது. இருப்­பினும் அவ்­வாறு தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள பலர் அதற்கு எதி­ராகப் போரா­டக்­கூ­டிய சக்­தியைக் கொண்­டி­ரா­த­வர்­க­ளாக உள்­ளனர்.

அவர்கள் எம்மைத் தனிப்­பட்ட ரீதி­யிலும், ஓர் சமூ­க­மா­கவும் அமை­திப்­ப­டுத்த முயற்­சித்­தார்கள். அந்­த­வ­கையில் நான் கைது­செய்­யப்­பட்­ட­மை­யா­னது உலகின் பல்­வேறு நாடு­க­ளிலும் சட்­டத்­த­ர­ணிகள் கைது­செய்­யப்­படும் சம்­ப­வங்­க­ளி­லி­ருந்து வேறுபட்டதல்ல என்றே கூறவேண்டும். எம்மை நிறுத்துவதற்காகவும், அமைதிப்படுத்துவதற்காகவும், ஏனையோர் மத்தியில் அச்சத்தை விதைப்பதற்காகவும் அவர்கள் எம்மைக் கைதுசெய்தார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் எனக்குக் கிடைக்கப்பெற்ற ஆதரவிற்கும், என்னை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபரை இணங்கக் காரணமாக அமைந்த உள்ளக மற்றும் சர்வதேச அழுத்தங்களுக்கும் நன்றியுடையவனாக இருக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.