பௌத்த, இந்து மத தலைவர்கள் முதன்முறையாக சவூதி விஜயம்

0 364

இலங்­கையின் பௌத்த மற்றும் இந்து மத தலை­வர்கள் அடங்­கிய குழு­வொன்று முதன் முறை­யாக சவூதி அரே­பி­யா­வுக்கு விஜயம் செய்­துள்­ளது.

உலக முஸ்லிம் லீக்கின் அழைப்பின் பேரில் சவூ­தியில் இடம்­பெற்ற மதங்­களைப் பின்­பற்­று­வோ­ரி­டையே உள்ள ‘ஒற்­று­மை­களை ஊக்­கு­வித்தல்’ எனும் தலைப்பில் மே 9 முதல் 13 வரை இடம்­பெற்ற மாநாட்டில் கலந்து கொள்ளும் பொருட்டே இக் குழு அங்கு விஜயம் செய்­துள்­ளது.

இலங்கை மகா­போதி சங்­கத்தின் தலைவர் பன­கல உப­திஸ்ஸ தேரர் தலை­மை­யி­லான பௌத்த மற்றும் இந்து மத தலை­வர்கள் அடங்­கிய குழு­வி­னரே இவ்­வாறு சவூ­திக்கு விஜயம் செய்­துள்­ளனர்.

இதன்­போது உலக முஸ்லிம் லீக்கின் செய­லாளர் நாயகம் கலா­நிதி அஷ்ஷெய்க் முஹம்மத் பின் அப்துல் கரீம் அல் ஈஸாவைச் சந்­தித்து இக் குழு கலந்­து­ரை­யா­டி­ய­துடன் நினைவுச் சின்­னங்­க­ளையும் பரி­மாறிக் கொண்­டனர்.

மே 11 ஆம் திகதி ரியாத், ரிட்ஸ் கார்ல்டன் ஹோட்­டலில் இடம்­பெற்ற மாநாட்டின் அமர்வில் உரை நிகழ்த்­திய பன­கல உப­திஸ்ஸ தேரர், புத்­தரின் போத­னை­க­ளுக்கும் இஸ்­லா­மிய நம்­பிக்­கைக்­கு­மி­டை­யி­லான ஒற்­று­மை­களைச் சுட்­டிக்­காட்­டினார்.

“இஸ்­லாத்­தையும் பௌத்­தத்­தையும் ஒப்­பி­டு­வதை நினைத்து பலர் அதிர்ச்­சி­ய­டை­யலாம், இருப்­பினும் நீங்கள் இரு சம­யங்­க­ளி­னதும் போத­னை­க­ளையும், அமை­திக்­கான முயற்­சி­க­ளையும் உன்­னிப்­பாகப் பார்த்தால், அவை சந்­தே­கப்­ப­டு­வதை விட ஒத்­த­தா­கவே இருக்கும்” எனக் குறிப்­பிட்டார்.

இந்த விஜ­யத்தின் போது மத தலை­வர்கள் சவூ­தியில் வாழும் இலங்­கை­யர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர். அத்­துடன் இலங்கை தற்­போது பொரு­ளா­தார நெருக்­க­டி­களை எதிர்­கொண்­டுள்ள நிலையில் அங்கும் வாழும் இலங்­கை­யர்­களின் பங்­க­ளிப்­பு­களின் அவ­சியம் குறித்தும் வலி­யு­றுத்­தி­யுள்­ளனர்.

அத்­துடன் ரியா­தி­லுள்ள இலங்கைத் தூத­ர­கத்தில் இடம்­பெற்ற வெசாக் நிகழ்­விலும் போதி பூஜை­யிலும் பங்­கு­பற்­றினர். அங்கு தஹம் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களின் கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன. மேலும் தூதரகத்தில் இடம்பெற்ற அன்னதான நிகழ்விலும் பௌத்த மத தலைவர்கள் பங்குபற்றினர்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.