வன்செயல்களில் ஈடுபடாதீர்

முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை

0 233

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் இன்­றைய அசா­தா­ரண நிலையில் நாட்டு மக்கள் அனை­வரும் அமைதி காக்கும் படியும் எவ்­வித வன்­செ­யல்­களில் ஈடு­பட வேண்­டா­மெ­னவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்ஸில் கோரிக்கை விடுத்­துள்­ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்­கை­யிலே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்­ஸிலின் உதவி தலைவர் ஹில்மி அஹமட் வெளி­யிட்­டுள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது, அர­சியல் சுய­ந­ல­வா­தி­களும் குண்­டர்­களும் இந்த தற்­போ­தைய அசா­தா­ரண நிலை­மை­யினைப் பயன்­ப­டுத்தி இன வன்­மு­றை­களை உரு­வாக்­கு­வ­தற்கும், கொள்­ளை­யி­டு­வ­தற்கும் முயற்­சிக்­கலாம். நாட்டு மக்கள் சட்­டத்தை தங்கள் கைகளில் எடுத்து செயற்­ப­டு­வதைத் தவிர்த்துக் கொள்­ளு­மாறு வேண்­டு­கிறோம்.

இச்­சந்­தர்ப்­பத்தில் அர­சாங்கம் அர­சியல் பேத­மின்றி சட்­டத்­தையும் ஒழுங்­கையும் நிலை­நாட்ட வேண்­டு­மெனக் கோரு­கிறோம்.

அலரி மாளி­கைக்கு முன்­னாலும், காலி முகத்­தி­ட­லிலும் கடந்த 30 நாட்­க­ளாக ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் அமை­தி­யான முறை­யிலே தமது எதிர்ப்­பினை வெளி­யிட்­டார்கள். அவர்கள் ஒரு குழு­வி­னரால் தாக்­கப்­பட்­டுள்­ளனர்.

இத்­தாக்­கு­தலின் பின்­ன­ணி­யி­லி­ருந்த அர­சியல் தலை­வர்கள் உட்­பட அமைச்­சர்­களை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு நாம் பொலிஸ்மா அதி­பரைக் கோரு­கிறோம். அப்­பாவி ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்கள் தாக்­கப்­பட்­ட­மைக்­கான அத்­தாட்சிப் புகைப்­ப­டங்­களும் வீடியோ பதி­வு­களும் உள்­ளன.

ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ உட­ன­டி­யாக பாரா­ளு­மன்­றத்தைக் கூட்­டு­மாறும் இடைக்­கால அர­சாங்­கத்தை நிறு­வு­மாறும் வேண்­டு­கிறோம்.
20ஆவது மற்றும் 19ஆவது அர­சியல் திருத்­தத்தை அமு­லுக்கு கொண்டுவருமாறும் கோருகிறோம்.

அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசொன்றினை நிறுவுமாறும் அரசியல் கட்சிகளையும் கோருகிறோம் ை விடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.