இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகரிப்பு

ஆட்சியைப் பொறுப்பேற்கமாட்டோம் என்கிறார் இராணுவ தளபதி

0 275

(எம்.எப்.எம்.பஸீர்)
தலை­நகர் கொழும்பு உட்­பட நாட்டின் பல பகு­தி­க­ளிலும் பாது­காப்புக் கட­மை­களில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக கொழும்பின் பிர­தான வீதி­களில் கவச வாக­னங்­களில் நேற்றுக் காலை முதல் இரா­ணு­வத்­தினர் ரோந்து நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளனர். அத்­துடன் நேற்று முதல் மோட்டார் சைக்கிள் அணி­யி­னரும் சேவையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.

நாட்டில் இரா­ணுவ ஆட்­சி­யொன்­றுக்கு திட்­ட­மி­டப்­ப­டு­வ­தாக முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா உட்­பட பலரும் எச்­ச­ரித்­துள்ள நிலையில் இரா­ணுவ பிர­சன்னம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது மக்கள் மத்­தியில் அச்­சத்தைத் தோற்­று­வித்­துள்­ளது.

இத­னி­டையே வன்­மு­றையில் ஈடு­ப­டுவோர் மீது துப்­பாக்கிச் சூடு நடத்த அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

கல­வ­ரங்கள் மற்றும் வன்­மு­றை­களில் ஈடு­ப­டு­வோரை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கும், குற்றக் குழுக்கள் முன்­னெ­டுக்கும் சட்­ட­வி­ரோத செயல்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவும் அவ­சியம் ஏற்­படும் போது துப்­பாக்கிச் சூடு நடாத்த பொலி­ஸா­ருக்கும், முப்­ப­டை­யி­ன­ருக்கும் உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

கல­வ­ரங்­களில் ஈடு­படும் குழுக்கள், வன்­மு­றை­யா­ளர்கள் உயிர் சேதம் விளை­விக்கும் நோக்கில் அல்­லது கொள்­ளை­யிடும் நோக்கில் வாக­னங்­களை நிறுத்தி சோதனை செய்யும் நட­வ­டிக்­கை­களை நிறுத்­தவும், அரச மற்றும் தனியார் சொத்­துக்­களை சேதப்­ப­டுத்­துதல், கொள்­ளை­யி­டுதல், கொலை செய்தல், கடும் காயம் ஏற்­ப­டுத்­துதல் போன்ற சம்­ப­வங்­களைத் தடுக்­கவும் உயர்ந்த பட்ச நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் நேற்று (11) அறி­வித்­துள்ளார்.
தேவை­யான போது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­யு­மாறும் பொலிஸ் மா அதிபர் இதன்­போது அனைத்து பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும், பொலிஸ் பொறுப்­ப­தி­கா­ரி­க­ளுக்கும் அதி­கா­ர­ம­ளித்­துள்­ள­தாக பொலிஸ் பேச்­சாளர் சிரேஸ்ட பொலிச் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ கூறினார்.

இவ்­வா­றான நிலையில், மேற்­கூ­றப்­பட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்­காக, துப்­பாக்கிச் சூடு நடாத்த பாது­காப்பு அமைச்சும் முப்­ப­டை­யி­ன­ருக்கு அதி­கா­ர­ம­ளித்து உத்­த­ர­விட்­டுள்­ளது.
எவ்­வா­றெ­னினும், இரா­ணு­வத்­தினர் ஆட்­சியைப் பொறுப்­பேற்­க­வுள்­ள­தாக வெளி­யான செய்­தி­களை இரா­ணு­வத்­த­ள­பதி ஜெனரால் சவேந்ர சில்வா மறுத்­துள்ளார்.

நாட்டின் ஜனா­தி­பதி, முப்­ப­டை­களின் தள­ப­தி­யா­கவும் இருக்கும் சூழலில், புதி­தாக ஏன் இரா­ணுவம் ஆட்­சியைப் பிடிக்க வேண்டும் என இரா­ணுவ தள­ப­தியும் முப்­ப­டை­களின் தலைமை அதி­கா­ரி­யு­மான ஜெனரால் சவேந்ர சில்வா கேள்வி எழுப்­பினார்.
நேற்று இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு முன்­னி­லையில் விசா­ர­ணை­க­லுக்கு ஆஜ­ரான பின்னர் வெளி­யேறும் போது, ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேட்ட கேள்வி ஒன்­றுக்கு பதி­ல­ளிக்கும் போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.

தற்­போ­தைய சூழலில் இரா­ணுவம் ஆட்­சியைக் கைப்­பற்றப் போவ­தாக ஒரு தகவல் உள்­ளது. உண்­மையில் இரா­ணுவ தள­பதி எனும் ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன பதி­ல­ளிக்க விரும்­பு­கின்­றீர்கள்? அந்த தகவல் உண்­மை­யா­னது தானா? என ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர்.

அதற்கு பதி­ல­ளித்த ஜெனரால் சவேந்ர சில்வா, நாட்டில் அர­சி­ய­ல­மைப்­பொன்று உள்­ளது. அந்த அர­சி­ய­ல­மைப்­புக்கு அமை­யவே இரா­ணுவம் செயற்­படும். அர­சி­ய­ல­மைப்­புக்கு அமைய நாட்டை பாது­காப்­பதே எமது கட­மை­யாகும். தற்­போ­தைய சூழலில் நாம் அத­னையே செய்­கின்றோம். நாட்டில் ஜனா­தி­பதி ஒருவர் இருக்கும் போது இது எப்­படி சாத்­தி­ய­மாகும்.

தற்­போ­தைய ஜனா­தி­ப­தியே நாட்டினுடைய ஜனாதிபதி. அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு அப்பதவியில் இருக்க தற்போதும் அவகாசம் இருக்கிறது. அவ்வாறு இருக்கையில் இராணுவத்துக்கு ஆட்சியை கைப்பற்ற எந்த தேவையும் இல்லை. ஜனாதிபதியே முப்படைகளினுடைய தளபதியாவார். ஜனாதிபதியைப் போன்றே அவர் முப்படைகளுக்கும் தளபதி. அப்படி இருக்கையில் நாம் எதற்கு மீள ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.