ரம்புக்கனை போராட்டத்தின் காரணமாக நிறுத்தப்பட்ட ரயிலில் சிக்கித் தவித்த மக்களுக்கு உணவுகளை வழங்கி உபசரித்த பிரதேச முஸ்லிம்கள்

0 241

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
ரம்­புக்­க­னையில் கடந்த 19ஆம் திகதி இடம் பெற்ற மக்கள் போராட்ட தினத்­தன்று இன்­னல்­க­ளுக்­குள்­ளான ரயில் பய­ணிகள் மீது முஸ்­லிம்கள் காட்­டிய மனி­தா­பி­மானம் பற்றி பெரும்­பான்மை சமூ­கத்­தினர் பாராட்­டு­களைத் தெரி­வித்­துள்­ளனர். முஸ்­லிம்­களின் மனி­தா­பி­மான உத­விகள் அவர்­களை உணர்­வு­பூர்­வ­மாக நெகிழ வைத்­துள்­ளன.

கடந்த 19 ஆம் திகதி ரம்­புக்­க­னையில் எரி­பொ­ருள் விலை அதி­க­ரிப்­புக்கு எதிராக மக்கள் அமைதி போராட்­டங்­களை முன்­னெ­டுத்­தார்கள். இதனை வலி­யு­றுத்தி தங்கள் கோரிக்­கை­யினை வெற்­றி ­கொள்­வ­தற்­காக ரம்­புக்­கனை ரயில் பாதையை சிலிப்பர் கட்­டை­களைக் கொண்டு மறித்து தடை­களை ஏற்­ப­டுத்­தினர். இதனால் கொழும்பு – கண்டி உட்­பட பல ரயில் சேவை பாதிக்­கப்­பட்­டது.

பதுளை ரயில் நிலை­யத்­தி­லி­ருந்து காலை 5.30 மணிக்கு புறப்­பட்டு வந்த “உட­ரட்ட மெனிக்கே” புகை­யி­ரதம் மாலை 4.00 மணி­யி­லி­ருந்து இரவு 8.30 மணி­வரை ரம்­புக்­கனை ரயில் நிலை­யத்­துக்கு அண்­மித்த இஹ­ல­ கோட்டே ரயில் நிலை­யத்தில் தரித்­தி­ருந்­தது. ரம்­புக்­கனை வழி­பா­தையை போக்­கு­வ­ரத்­துக்­காக ஏற்­பாடு செய்யும் வரை­யிலே இவ்­வாறு தரித்­தி­ருந்­தது.

இச்­சம்­பவம் தொடர்பில் குறிப்­பிட்ட ரயிலில் பய­ணித்த பய­ணி­யொ­ருவர் கருத்துத் தெரி­விக்­கையில்; ரயிலில் வய­தா­ன­வர்கள், சிறு­பிள்­ளைகள், வெளி­நாட்டு உல்­லா­சப்­ப­ய­ணிகள், குரு­மார்கள் என பெரும் எண்­ணிக்­கை­யானோர் இருந்­தார்கள். பிள்­ளைகள் மாத்­திரம் சுமார் 300 பேர் இருந்­தனர். அவர்கள் பசியில் இருந்­தனர். உணவுப் பொருட்கள் வாங்­கு­வ­தற்கு கடைகள் இருந்­தன. ஆனால் மக்கள் சாப்­பி­டு­வ­தற்கு ஒன்றும் இல்லை. உணவு வாங்­கு­வ­தற்கு இய­லு­மான இடத்­துக்கு செல்வோம் என ரயில் அதி­கா­ரி­களைக் கேட்டுக் கொண்­டார்கள். இத­னை­ய­டுத்து ரயில் அதி­கா­ரிகள் புகை­யி­ர­தத்தை கடு­கண்­ணாவ ரயில் நிலை­யத்­துக்கு செலுத்திச் சென்­றனர். அப்­போது நேரம் இரவு 9.00 ஐக் கடந்­தி­ருந்­தது. சாப்­பாட்டுக் கடைகள் அங்கு மூடப்­பட்­டி­ருந்­தன. குரோ­ச­ரி­களில் உண­வுப்­பொ­ருட்கள் குறைந்­த­ள­விலே இருந்­தன. இவ்­வாறு தவித்­துக்­கொண்­டி­ருந்த நிலை­யிலே எவரும் எதிர்­பா­ராத இந்த சம்­பவம் நிகழ்ந்­தது. முஸ்லிம் சகோ­த­ரர்கள் உண­வுடன் வருகை தந்­தார்கள். எப்­படி அவர்கள் ஏற்­பாடு செய்­தார்கள் என்று தெரி­ய­வில்லை.

ரயில் பெட்­டி­க­ளுக்குள் உண­வுடன் வந்த முஸ்­லிம்கள் பிரி­யாணி மற்றும் நூடில்ஸ் என்­ப­ன­வற்றை புகை­யி­ரத்தில் இருந்து அனைத்து மக்­க­ளுக்கும் பங்­கிட்­டார்கள். ரயிலில் இருந்த குரு­மார்கள், பிக்­கு­னி­க­ளுக்கும் பங்­கிட்­டார்கள்.
சுமார் 12 மணித்­தி­யா­லங்­க­ளுக்கும் மேலாக எவ்­வித குறை­யு­மின்றி முஸ்லிம் சகோ­த­ரர்கள் உணவு பரி­மா­றி­னார்கள்.

இரவு 1.00 மணிக்கே ரயில் கடு­கண்­ணா­வை­யி­லி­ருந்து கொழும்பு நோக்கி மீண்டும் தனது பய­ணத்தை ஆரம்­பித்­தது. நான் அதி­காலை 2.45 மணிக்கே ராகமை ரயில் நிலை­யத்தில் இறங்­கினேன். பது­ளை­யி­லி­ருந்து பய­ணத்தை ஆரம்­பித்த பய­ணி­க­ளுக்கு இது 20 மணித்­தி­யால பய­ண­மாக அமைந்­தது.

முஸ்லிம் சகோ­த­ரர்களின் மனி­தா­பி­மான உதவி, உண­வ­ளித்­தமை எமக்கு உணர்வு பூர்­வ­மாக அமைந்­தது. இச்சம்பத்தை வாழ்நாளில் என்றும் எம்மால் மறக்க முடியாது. முஸ்லிம்களின் புனித நோன்பு காலத்தில் அவர்களது தாராள மனப்பான்மையுடன் கூடிய –ஏற்பாடு உதவியை நாம் என்றும் நினைவில் வைத்திருப்போம். என்று தெரிவித்தார். முஸ்லிம்களின் இந்த நற்பண்பினை பெரும்பான்மை மதத்தலைவர்களும் பாராட்டியுள்ளனர்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.