ஹஜ் பயணம்: 50-65 வயதுக்கிடைப்பட்ட இலங்கை யாத்திரிகர்களுக்கு முன்னுரிமை

பிரதமர் மஹிந்த ஹஜ் குழுவுக்கு ஆலோசனை

0 242

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
இவ்­வ­ருடம் ஹஜ் யாத்­தி­ரைக்கு 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­களே அனு­ம­திக்­கப்­ப­டு­வார்கள் என சவூதி ஹஜ், உம்ரா அமைச்சு அறி­வித்துள்­ளதால் இலங்­கை­யி­லி­ருந்து ஹஜ் யாத்­தி­ரைக்கு 50 முதல் 65 வய­துக்­குட்­பட்­ட­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கு­மாறு பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ஷ அரச ஹஜ் குழு­விற்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார்.

அத்­தோடு முதற் தட­வை­யாக ஹஜ் கட­மைக்­காக விண்­ணப்­பித்­துள்­ள­வர்­க­ளுக்கு அடுத்­தாக சந்­தர்ப்பம் வழங்­கு­மாறும் பிர­தமர் ஹஜ் குழு­வைக்­கோ­ரி­யுள்ளார்.
ஹஜ் யாத்­தி­ரையை மேற்­கொள்­வ­தற்கு சுமார் 5000 பேர் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­திற்கு விண்­ணப்­பித்­தி­ருக்கும் நிலையில் இவ்­வ­ருடம் இலங்­கைக்கு 1585 ஹஜ் கோட்­டாவே கிடைக்­கப்­பெற இருப்­பதால் பிர­த­மரின் ஆலோ­சனை கண்­டிப்­பாக பின்­பற்­றப்­படும் என அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் விடி­வெள்­ளிக்குத் தெரி­வித்தார்.

மேலும் அவர் கருத்து தெரி­விக்­கையில், நாட்டில் பதிவு செய்­யப்­பட்­டுள்ள சுமார் 100 ஹஜ் முகவர் நிலை­யங்­களின் உரி­மை­யா­ளர்­களில் பெரும் எண்­ணிக்­கை­யானோர் 65 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளா­கையால் அவர்­க­ளுக்கும் ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அழைத்துச் செல்லும் வாய்ப்பு இல்­லாமற் போயுள்­ளது. அதனால் அவர்கள் தங்­க­ளது ஹஜ் யாத்­தி­ரி­கர்­களை அவர்­க­ளது பிர­தி­நிதி ஒரு­வரின் பொறுப்­பிலே அ-னுப்பி வைக்க வேண்­டி­யுள்­ளது.

அத்­தோடு இம்­முறை ஹஜ் விசாவில் மாத்­தி­ரமே ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள முடியும்.வரு­கை­தரு (Visit) விசா மூலம் ஹஜ் பய­ணத்தை மேற்­கொள்ள முடி­யாது.
தற்­போது அனேக ஹஜ் முக­வர்கள் உம்ரா பய­ணத்தில் சவூதி அரே­பி­யாவில் இருப்­பதால் அவர்கள் நாடு திரும்­பி­யதும் பெருநாள் தினத்தின் பின்பு அரச ஹஜ் குழு இவ்­வ­ருட ஹஜ் ஏற்­பா­டுகள் குறித்து கலந்­து­ரை­யா­டு­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது என்றார்.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.