சாய்ந்தமருதில் குண்டினை வெடிக்க வைத்தவர்களின் உடற்பாகங்கள் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டன

சாராவுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய 3 ஆவது டி.என்.ஏ. பரிசோதனைக்கு ஏற்பாடு

0 321

(எம்.எப்.எம்.பஸீர், பாறூக் ஷிஹான்)
உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்கள் தொடர்­பான விசா­ர­ணை­களில் தொடர்ந்து மர்­ம­மாக உள்ள, நீர்­கொ­ழும்பு – கட்­டு­வ­பிட்­டிய தேவா­ல­யத்தில் தாக்­குதல் நடாத்­திய மொஹம்­மது ஹஸ்தூன் எனும் குண்­டு­தா­ரியின் மனை­வி­யான புலஸ்­தினி மகேந்திரரன் எனும் சாரா­வுக்கு என்ன நடந்­தது என்­பது தொடர்பில் வெளிப்­ப­டுத்த 3 ஆவது தட­வை­யா­கவும் மீண்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுக்க ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அதற்­காக, கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக நம்­ப­ப்படும், சஹ்­ரானின் சகோ­தரர் ரில்வான் தலை­மை­யி­லான குழு­வி­ன­ரு­டைய உடற் பாகங்கள், அம்­பாறை பொது மயா­னத்தில் புதைக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவை நேற்று மீள தோண்டி எடுக்­கப்­பட்­டன.

கல்­முனை நீதி­வா­னிடம் பெற்­றுக்­கொள்­ளப்­பட்ட உத்­த­ர­வுக்கு அமைய இவ்­வாறு உடற்­பா­கங்கள், அம்­பாறை நீதிவான் துஷாரா குமாரி தர்­ம­கீர்த்தி முன்­னி­லையில் தோண்டி எடுக்­கப்­பட்­டன.

இதற்கு முன்னர் குறித்த உடற்­பா­கங்கள் தொடர்பில் பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுத்த சட்ட வைத்­திய அதி­கா­ரிகள், இவ்­வி­வ­கா­ரத்தில் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்த அனைத்து பொலிஸ் அதி­கா­ரி­க­ளுடன் அர­சாங்க இர­சா­யன பகுப்­பாய்­வாளர் திணைக்­கள அதி­கா­ரி­களும் இந் நட­வ­டிக்­கையின் போது பங்­கேற்­றி­ருந்­தனர்.

பலத்த பொலிஸ் பாது­காப்­புக்கு மத்­தியில் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந் நட­வ­டிக்­கையின் போது, அம்­பாறை மாந­கர சபையின் பெக்கோ இயந்­திரம் கொண்டு புதைக்கப்­பட்ட இடம் மீள தோண்­டப்­பட்ட நிலையில், அரச இர­சா­யன பகுப்­பாய்­வாளர் மற்றும் சட்ட வைத்­திய அதி­கா­ரி­களின் வழி நடாத்­தலில் உடற் பாகங்கள், கறுப்பு நிற பாது­காப்பு பைக­ளுடன் தோண்டி எடுக்­கப்­பட்­டன. பின்னர் சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுக்­கொண்­டுள்­ள­துடன், தற்­போது உடற்­பா­கங்கள் அம்­பாறை பொலிஸ் தட­ய­வியல் பிரி­வி­னரின் (சொகோ) பொறுப்பில் வைக்­கப்­பட்­டுள்­ளன. இந் நிலை­யி­லேயே இந்த உடற் பாகங்கள் மூன்­றா­வது டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக கொழும்­புக்கு விரைவில் அனுப்பிவைக்கப்படவுள்ளன.

இது குறித்து விடி­வெள்­ளி­யிடம் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நிஹால் தல்­துவ,

‘ தோண்டி எடுக்­கப்­பட்ட உடற்­பா­கங்­க­ளி­லி­ருந்து சட்ட வைத்­திய அதி­கா­ரிகள் தேவை­யான மாதி­ரி­களைப் பெற்­றுள்­ளனர். தற்­போது பெறப்­பட்ட மாதி­ரிகள், உடற்­பா­கங்கள் அனைத்தும் அம்­பாறை பொலிஸ் ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரின் பொறுப்பின் கீழ் உள்­ளன. எதிர்­வரும் நாட்­களில் கல்­முனை நீதி­வா­னிடம் சி.ஐ.டி.யினரும், அம்­பாறை பொலிஸ் ஸ்தல தடய­வியல் பிரி­வி­னரும் அறிக்கை ஊடாக விடயங்களை முன் வைத்து, டி.என்.ஏ. பரிசோதனைக்காக உடற்பாகங்களை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புவர்.’ என தெரிவித்தார்.

கடந்த 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருந்த பயங்­க­ர­வா­திகள், பாது­காப்பு படை­க­ளு­ட­னான மோத­லி­னி­டையே குண்­டினை வெடிக்கச் செய்து தற்­கொலை செய்­து­கொண்­டி­ருந்­தனர்.

இதன்­போது அங்கு மொத்­த­மாக 19 பேர் இருந்­த­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. எனினும் சஹ்­ரானின் மனை­வியும் அவ­ரது ஒரு குழந்­தையும் உயி­ருடன் மீட்­கப்­பட்­டனர். எனினும் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஸ்தல பரி­சோ­த­னை­களின் போதும் அடை­யாளம் காணப்­பட்ட உடற்­பா­கங்கள் மீது முன்­னெ­டுக்­கப்­பட்ட டி.என்.ஏ. பரி­சோ­த­னை­களின் போதும், 16 சட­லங்­களே அடை­யாளம் காணப்­பட்­டி­ருந்­தன. இந் நிலை­யி­லேயே அங்­கி­ருந்த சாரா எனும் பயங்­கர­வாதி தப்­பித்­துள்­ள­தாக தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன.

கொழும்பு மற்றும் நீர் கொழும்பு, மட்­டக்­க­ளப்பு ஆகிய இடங்­களில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தம்மைத் தாமே இலங்­கையின் ஐ.எஸ்.ஐ.எஸ். இனர் என அழைத்­துக்­கொண்ட தேசிய தெளஹீத் ஜமா அத் தலை­வ­னாக செயற்­பட்ட சஹ்ரான் ஹஷீம் தலை­மை­யி­லான கும்­ப­லினால் 8 தொடர் குண்டுத் தாக்­கு­தல்கள் நடாத்­தப்­பட்­டன.

இந்த குண்­டு­வெ­டிப்பு தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளி­லேயே சாரா தொடர்பில் முதலில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பாக கட்­டு­வா­பிட்­டிய தேவா­லய குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வத்தின் குண்­டு­தா­ரியின் மனைவி என அடை­யாளம் காணப்­பட்ட சாரா, அந்த குண்­டு­தா­ரியை காத­லித்து மதம் மாறி அவனை திரு­மணம் செய்­தி­ருந்தார்.

இந் நிலையில், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்­கு­தல்­களை நடாத்­திய குண்­டு­தா­ரி­க­ளான சஹ்ரான் ஹஸீமின் குடும்பத்தினர், ஹஸ்­தூனின் மனைவி உட்­பட மேலும் பலர் சாய்ந்­த­ம­ருது – வெலி­வே­ரியன் பகு­தியில் வீடொன்றில் மறைந்­தி­ருப்­பது தெரி­ய­வ­ரவே, அதனை சுற்றி வளைத்த போது, அங்கு இருந்த தற்­கொலை குண்­டு­தா­ரிகள் குண்­டு­களை வெடிக்கச் செய்து தமது உயிர்­களை மாய்த்­துக்­கொண்­டி­ருந்­தனர். அத­னை­ய­டுத்து இரா­ணு­வத்­தினர் முன்­னெ­டுத்த தேடு­தலில், சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவும், அவ­ரது மகளும் படு­கா­ய­ம­டைந்த நிலையில் உயி­ருடன் மீட்­கப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் சிகிச்­சை­க­ளி­டையே சஹ்­ரானின் மனை­வி­யிடம் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் சி.ஐ.டி. சிறப்புக் குழு பல்­வேறு தக­வல்­களை வெளிப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்­தது.
அதன்­படி, குறித்த சாய்ந்­த­ம­ருது வீடு சுற்­றி­வ­ளைக்­கப்­படும் போது அங்கு இருந்­த­வர்கள் யார் யார் என்­பதை சி.ஐ.டி. வெளிப்­ப­டுத்­தி­யது. கொழும்­பி­லி­ருந்து அவர்கள் சாய்ந்­த­ம­ரு­துக்கு செல்லும் வழியே, குரு­ணாகல் மாவட்டம் – கிரி­உல்ல பகுதி துணிக்­க­டையில் அடுத்த கட்ட தாக்­கு­த­லுக்கு என சந்­தே­கிக்­கப்­படும் வெள்ளை ஆடை­களை கொள்­வ­னவு செய்யும் சி.சி.ரி.வி. காட்­சி­க­ளிலும் சாரா உள்­ளிட்­ட­வர்கள் தெளி­வாக விசா­ர­ணை­களால் அடை­யாளம் காணப்­பட்­டனர்.

இவ்­வா­றான பின்­ன­ணியில், சட்டத் தேவைக்­காக சாய்ந்­த­ம­ருது வீட்டில் தற்­கொலை செய்­து­கொண்டு உயி­ரி­ழந்த பயங்­க­ர­வத கும்­ப­லைச்­சேர்ந்­த­வர்­களின் ஆள் அடை­யா­ளத்தை நிரூ­பிக்க, சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்கு மூலத்­தினை அடிப்­ப­டை­யாக கொண்டு டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

அதா­வது, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஸ்தல தட­ய­வியல் பிரி­வி­னரால் அடை­யாளம் காணப்­பட்டு மீட்­கப்­பட்ட உயி­ரியல் கூறுகள், குண்டு வெடிக்கச் செய்யும் போது வீட்டில் இருந்­த­வர்கள் என சஹ்­ரானின் மனைவி ஹாதி­யாவின் வாக்குமூலத்தில் குறிப்­பி­டப்­பட்­ட­வர்­களின் இரத்த உற­வு­க­ளிடம் பெறப்­பட்ட உயி­ரியல் கூறு­க­ளுடன் ஒப்­பீடு செய்­யப்­பட்­டன.
இதன்­போது ஹாதி­யாவின் வாக்கு மூலத்தில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்த அனை­வ­ரி­னதும் டி.என்.ஏ.க்கள் கண்­ட­றி­யப்­பட்டு அவர்­க­ளது இறப்பு அறி­வியல் ரீதியில் உறுதி செய்­யப்­பட்ட போதும், ஹாதியா பெயர் குறிப்­பிட்ட சாரா தொடர்பில் மட்டும் டி.என்.ஏ. பரி­சோ­த­னைகள் தோல்­வி­ய­டைந்­தன. ( ஹாதி­யாவின் வாக்கு மூலத்தை தவிர வேறு சுயா­தீ­ன­மான சாட்­சிகள் ஊடா­கவும் அவ்­வீட்டில் இருந்­த­வர்கள் யார் என்­பதை விசா­ர­ணை­யா­ளர்கள் கண்­ட­றிந்­தி­ருந்­தனர்)

இத­னை­ய­டுத்து அது குறித்து விஷேட விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. சாராவின் தாயின் டி.என்.ஏ. மாதிரி­களை பெற்றே, சம்­பவ இடத்­தி­லி­ருந்த உயி­ரியல் கூறு­க­ளுடன் அது ஒப்பீடு செய்யப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலையிலேயே ஏற்கனவே இரு முறை செய்யப்பட்ட டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கு மேலதிகமாக மீளவும் டி.என்.ஏ. பரிசோதனைகளுக்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு தற்போது உடற் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டு, இரசாயன பகுப்பாய்வுகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.