நாடு முழுவதிலும் கொந்தளிப்பு நிலை

ஆர்ப்பாட்டங்கள் உக்கிரம்; பலத்தை பிரயோகிக்கிறது அரசாங்கம்

0 265

ஜனா­தி­பதி கோத்தாபய ராஜ­ப­க்ஷவும் அவரது அர­சாங்­கமும் பதவி வில­க­வேண்டும் என வலி­யு­றுத்தும் ஆர்ப்­பாட்­டங்கள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ள­மையால் நாட்டில் கொந்­த­ளிப்­பான நிலை­மை­யொன்று உரு­வா­கி­யுள்­ளது. இந்­நி­லையில், இதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் இரா­ணுவம் மற்றும் பொலிஸ் பலத்தை பயன்­ப­டுத்த முயற்சிப்பது நிலைமையை மேலும் மோச­ம­டையச் செய்துள்ளது.

பாது­காப்பு அமைச்சின் அறிக்கை
நாட்டில் நேற்­றைய தினம் ( 20) மட்டும் காலை முதல் மாலை வரை­யி­லான காலப்­ப­கு­தியில் 12 மாவட்­டங்­களில் 18 பாரிய ஆர்ப்­பாட்­டங்கள் இடம்­பெற்­ற­தாக பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செயலர் ஓய்­வு­பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் டயஸ் தெரி­வித்தார்.

குறித்த அறிக்­கையில், மேற்­கு­றித்த 18 பாரிய ஆர்ப்­பாட்­டங்­க­ளுக்கு மேல­தி­க­மாக பல இடங்­க­ளிலும் சிறிய சிறிய குழுக்­க­ளாக சேர்ந்து எதிர்ப்­புக்­களை வெளி­யிட்ட சம்­ப­வங்கள் பல பதி­வா­கி­யுள்­ளன.

ஆர்ப்­பாட்­டங்கள் கார­ண­மாக, நாட்டின் பல முக்­கிய வீதிகள் ஊடான போக்­கு­வ­ரத்­துக்கு இடை­யூறு ஏற்­பட்­ட­த­கவும், இதனால் எரி­பொருள் விநி­யோகம், அத்­தி­ய­வ­சிய உணவு விநி­யோகம், உள்­ளிட்ட பொருட்கள் சேவை­களை முன்­னெ­டுக்­கவும் குறிப்­பி­டத்­தக்க அள­வி­லான பாதிப்­புகள் ஏற்­பட்­டன.

மக்­களின் எதிர்ப்பு வெளி­யி­டு­வ­தற்­கான உரி­மையை மதிப்­ப­தாக கூறிய அவர், அவ்­வு­ரி­மையை பயன்­ப­டுத்தும் போது மற்­ற­வர்­க­ளுக்கு அது இடைஞ்சல் இல்­லாமல் இருக்க வேண்டும் என பொது மக்­க­ளிடம் கோரினார்.

13 ஆவது நாளா­கவும் போராட்டம்
அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் ‘கோ ஹோம் கோட்டா’ எனும் தொனிப்­பொ­ரு­ளி­லான மக்கள் எழுச்­சிப்­போ­ராட்டம் 13வது நாளாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­கின்­றது.

நேற்று 12 ஆவது நாள் ஆர்ப்­பாட்­டத்­தின்­போது ரம்­புக்­க­ணையில் போராட்­டக்­கா­ரர்­க­ளுக்கு எதி­ராக பொலிஸார் மேற்­கொண்ட துப்­பாக்கிப் பிர­யோ­கத்தை கண்­டித்து கோஷம் எழுப்­பப்­பட்­டது.

எரி­பொ­ருட்­களின் விலை அதி­க­ரிக்­கப்­பட்­ட­மையை கண்­டித்து ரம்­புக்­கணையில் பொது­மக்­களால் நேற்­று­முன்­தினம் முன்­னெ­டுக்­கப்­பட்ட ஆர்ப்­பாட்­டத்தில் பொலி­ஸாரின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­திற்கு இலக்­காகி உயி­ரி­ழந்த நப­ரை ­கா­லி­மு­கத்­தி­டலில் கலந்­து­கொண்ட மக்கள் நினைவு கூர்ந்­தனர்.

இதே வேளை இலங்கை மத்­திய வங்­கியின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காக்­கு­மாறு கோரி இலங்கை மத்­திய வங்கி தொழிற்­சங்க ஒன்­றி­ய­மா­னது காலி­மு­கத்­தி­டலில் எதிர்ப்பு ஆர்ப்­பாட்­ட­மொன்றில் ஈடு­பட்­டது. இதன்­போது மத்­தி­ய­ வங்­கியின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காக்­கு­மாறும் அர­சியல் தலை­யீ­டு­களை நிறுத்­து­மாறும் அவர்கள் கோரி­ய­துடன் அடக்­கு­மு­றையை நிறுத்­துங்கள் வன்­முறை ஒரு தீர்­வல்ல எனும் பதா­தைகளை காட்­சிப்­ப­டுத்­தியும் தங்­க­ளது எதிர்ப்பை வெளிப்­ப­டுத்­தினர்.

மேலும் மக்­களின் எதிர்ப்பு போராட்­டத்­திற்கு மத்­தியில் ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை பதவி வில­கு­மாறு வலி­யு­றுத்தி பௌத்­த­தேரர் ஒருவர் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டி­ருந்தார். திரி­பேஹ சிறி­தம்ம தேரர் எனும் பௌத்த தேர­ரொ­ரு­வரே இவ்­வாறு உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் ஈடு­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

ம.வி.மு. ஆர்ப்­பாட்டம்
இத­னி­டையே கடந்த திங்கட் கிழமை மக்கள் விடு­தலை முன்­ன­ணி­யினர் அளுத்­க­ம­யி­லி­ருந்து ஆர்ப்­பாட்டப் பேர­ணி­யொன்றை ஆரம்­பித்­தனர். இந்த பேரணி திங்­க­ளன்று பாணந்­து­றையை வந்­த­டைந்­தது. மறுநாள் செவ்­வாய்க்­கி­ழமை பாணந்­து­றையில் ஆரம்­பித்து கொழும்பு நகர மண்­டப வளா­கத்தை அடைந்­தது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் குறித்த ஆர்ப்­பாட்ட பேர­ணியில் கலந்­து­கொண்டு அர­சாங்­கத்­திற்கு எதி­ராக கோஷங்­களை எழுப்­பினர்.

ஊட­க­வி­ய­லா­ளர்கள் ஆர்ப்­பாட்டம்
நேற்று முன்­தினம் செவ்வாய்க் கிழமை காலி­மு­கத்­தி­ட­லில் அ­மைந்­துள்ள பண்­டா­ர­நா­யக்­கவின் சிலைக்கு அரு­கா­மையில் ஊட­க­வி­ய­லா­ளர்கள் அர­சாங்­கத்­திற்கு எதி­ரான ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். அத்­துடன், நேற்­றைய தினம் கோட்டை ரயில் நிலை­யத்­திற்கு முன்­பா­கவும் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் ஆர்ப்­பாட்­ட­மென்று இடம்­பெற்­றது. இவ்­விரு ஆர்ப்­பாட்­டங்­க­ளிலும் பெரு­ம­ள­வி­லான ஊட­க­வி­ய­லா­ளர்கள் கலந்­து­கொண்­டி­ருந்­தனர்.

ரம்­புக்­கணை விவ­காரம்
இத­னி­டையே நேற்­று­முன்­தினம் ரம்­புக்­க­ணையில் எதிர்ப்பில் ஈடு­பட்ட சிவி­லி­யன்கள் மீது நடத்­தப்­பட்ட துப்­பாக்கிப் பிர­யோகம் சட்ட வரை­ய­றை­க­ளுக்கு உட்­பட்ட பலப் பிர­யோ­கமா என்­பது தொடர்பில் விசா­ரிக்க மூவர் கொண்ட குழு­வொன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. சமூக பொலிஸ் இரா­ஜாங்க அமைச்சின் செயலர் எஸ்.ரி. கொடி­கார தலை­மையில் இந்த குழு, பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் செயலர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டய­ஸினால் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

இக்­கு­ழுவில், பொது மக்கள் பாது­காப்பு அமைச்சின் மேல­திக செயலர் எம்.எஸ்.பி. சூரி­யப்­பெ­ரும மற்றும் பாது­காப்பு அமைச்சின் சட்ட ஆலோ­சகர் மேஜர் ஜெனரால் ஈ.எஸ். ஜய­சிங்க ஆகியோர் உள்­ள­டங்­கு­கின்­றனர்.

இந்த குழு­வா­னது, ரம்­புக்­க­ணையில், ஆர்ப்­பட்­டத்தை கலைக்க பொலிஸார் செய்த பலப் பிர­யோகம் சட்ட ரீதி­யி­லா­னதா என்­பது தொடர்பில் ஆராயும் என பொலிஸ் திணைக்­களம் அறி­வித்­துள்­ளது.

நேற்று முன் தினம்(19) ரம்புக்கணையில் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகத்தினால் காயமடைந்த 13 பேர் தொடர்ந்தும் கேகாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மேலும் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதென கேகாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, காயமடைந்த 15 பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.– Vidivelli

Leave A Reply

Your email address will not be published.