பயங்கரவாத தடைச்சட்டத்தை எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து அகற்றுங்கள்

நகலை கிழித்தெறிந்து சபையில் எதிர்ப்பை வெளியிட்டார் ரவூப் ஹக்கீம்

0 248

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் எமது நாட்டு சட்­டக்­கட்­ட­மைப்பில் இருந்து முற்­றாக நீக்­கப்­பட வேண்டும் என்று தெரி­வித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் திருத்த நகலை கிழித்­தெ­றிந்து தனது எதிர்ப்பை முன்­வைத்தார்.

பாரா­ளு­மன்­றத்தில்  செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற பயங்­க­ர­வாதத் தடுப்பு (தற்­கா­லிக ஏற்­பா­டுகள்) திருத்தச் சட்­ட­மூல இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தில் உரை­யாற்­று­கை­யி­லேயே இவ்­வாறு எதிர்ப்பை வெளிக்­காட்­டினார்.

அவர் அங்கு குறிப்­பி­டு­கையில்,
பயங்­க­ர­வாதத் தடை சட்­டத்தில் திருத்­தத்தை கொண்­டு­வந்து சர்­வ­தே­சத்தை ஏமாற்றும் செயற்­பாடே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருக்­கின்­றது. இந்த சட்டம் தொடர்­பாக நீதி­ப­திகள் பலரும் தமது மாற்றுக் கருத்­துக்­களை வெளி­யிட்­டுள்­ளனர்.

பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் நாட்டு மக்கள் பல­ருக்கு பல இன்­னல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்­த­ நி­லையில் இந்த சட்­டத்தில் திருத்தம் கொண்டு வரு­வது வெட்­கக்­கே­டா­னது. எனவே இந்த திருத்­தத்தை தாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வ­தில்லை.

முன்னாள் பிர­தமர் ரணில் தனது அனு­ப­வங்­களை முன்­வைத்து கருத்து தெரி­வித்தார். எதிர்க்­கட்சித் தலை­வரும் கட்சி நிலைப்­பாட்டை தெரி­வித்தார். அர­சியல் நோக்கில் இந்த சட்டம் பயன்­ப­டு­தப்­ப­டு­வது வெட்கக்கேடா­னது. உயிர்த்த ஞாயிறு விசா­ரணை வேறு­பக்­கத்­திற்கு செல்­கி­றது. கர்­தினால் ஜெனீ­வா­வுக்கு சென்றார். படை­யினர் இதில் தொடர்­பு­பட்­டுள்­ள­னரா என ஆரா­யு­மாறு மனித உரிமை பேரவை ஆணை­யாளர் கோரி­யுள்ளார். எந்த குற்­றச்­சாட்­டு­மின்றி பலர் பல வரு­டங்­க­ளாக தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளனர்.
அதனால் பயங்கரவாத தடைச்சட்டம் எமது நாட்டு சட்டக்கட்டமைப்பில் இருந்து முற்றாக நீக்கப்பட வேண்டும் என தெரிவித்து நகலை கிழித்தெறிந்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.