பாராளுமன்ற களேபரம் விசாரணைக்குழு இன்று கூடும்

0 517

கடந்த நவம்பர் மாதம் பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற களேபரம் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு சபா­நா­யகர் கரு­ஜ­ய­சூ­ரி­ய­வினால் நிய­மிக்­கப்­பட்ட பாரா­ளு­மன்ற குழு இன்று முதன் முறை­யாகக் கூட­வுள்­ளது. பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற கல­வ­ரங்கள் தொடர்­பாக விசா­ரணை நடாத்தும் பொலிஸ் குழுவின் தலை­வரும் இன்­றைய பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­துக்கு அழைக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.

பொலிஸ் விசா­ர­ணை­களின் விப­ரங்கள் தொடர்பில் அறிந்து கொள்­வ­தற்­கா­கவே பொலிஸ் குழுவின் தலைவர் அழைக்­கப்­பட்­டுள்­ள­தாக, பாரா­ளு­மன்ற களேபவரம் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற குழுவின் தலைவர் பிரதி சபா­நா­யகர் ஆனந்த குமா­ர­சிறி தெரி­வித்தார்.

பிரதி சபா­நா­யகர் ஆனந்­த­கு­மா­ர­சிறி தலை­மையில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள இந்த குழுவில் ஏனைய உறுப்­பி­னர்­க­ளாக சமல் ராஜபக் ஷ, ரஞ்சித் மத்­தும பண்­டார, சந்­தி­ர­சிறி கஜ­வீர, பிமல் ரத்­னா­யக்க மற்றும் மாவை சேனா­தி­ராஜா ஆகிய பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அங்கம் வகிக்­கின்­றனர். பாரா­ளு­மன்­றத்தில் கல­வர நிலைமை மற்றும் தாக்­குதல் சம்­ப­வங்கள் கடந்த நவம்பர் மாதம் 14,15 மற்றும் 16ஆம் திக­தி­களில் இடம்­பெற்­றன.

இந்த சம்­ப­வங்­க­ளினால் பாரா­ளு­மன்ற சொத்­துக்­க­ளுக்கு ஏற்­பட்ட சேதங்கள் 2 இலட்­சத்து 60 ஆயிரம் ரூபா என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. களேபவரங்கள், தாக்குதல்கள் தொடர்பான வீடியோ பதிவுகள் இன்று பரிசீலனைக்குட் படுத்தப்படவுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.