ஆடைக் கலாசார விவகாரங்கள் அரசியலாக்கப்படக் கூடாது

0 408

ஆடைக் கலா­சா­ரத்தை முன்­வைத்து இந்­தி­யா­விலும் இலங்­கை­யிலும் தற்­போது தோன்­றி­யுள்ள சர்ச்­சைகள் கவலை தரு­வ­ன­வா­க­வுள்­ளன. ஒரே நேரத்தில் இரு நாடு­க­ளிலும் இந்து -முஸ்லிம் சமூ­கங்கள் மத்­தியில் பிரி­வி­னையை உண்­டு­பண்ணும் வகையில் இந்த விவ­கா­ரங்கள் திர­ப­டைந்­தி­ருப்­பது எதிர்­காலம் பற்­றிய அச்­சத்தைத் தோற்­று­விப்­ப­தா­க­வுள்­ளது.

இலங்­கையில், திரு­கோ­ண­மலை நகரில் அபாயா அணிந்து கட­மைக்கு சமு­க­ம­ளிக்க முடி­யா­தென அப் பகு­தி­யி­லுள்ள பிர­பல பாட­சா­லை­யான சண்­முகா இந்து மகளிர் கல்­லூரி நிர்­வாகம் அனு­மதி மறுத்த விவ­காரம் சுமார் 4 வரு­டங்­களின் பின்னர் மீண்டும் சர்ச்­சை­யாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த விவ­காரம் தற்­போது நீதி­மன்றில் உள்­ளதால் அது பற்­றிய வாதப்­பி­ர­தி­வா­தங்­களைத் தவிர்த்து, இந்த விவ­கா­ரத்தை சமூ­கங்­க­ளுக்­கி­டையில் பிள­வுகள் ஏற்­ப­டா­த­வாறு எவ்­வாறு கையா­ளலாம் என சிந்­திப்­பதே நம்முன் உள்ள கட­மை­யாகும்.

நாட்டின் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உரி­மை­யான அபாயா அணியும் உரி­மையை அர­சாங்க நிறு­வ­ன­மொன்றில் மறு­த­லிக்க முடி­யாது என்­பதே அதனை அணிந்து சென்ற ஆசி­ரியை மற்றும் அவ­ருக்கு ஆத­ர­வான தரப்பின் வாத­மா­க­வுள்­ளது. தான் தொடர்ந்து அங்கு பணி­யாற்றப் போவ­தில்லை என்றும் ஆனால் தனது உரி­மையை மீண்டும் அப் பாட­சா­லையில் நிலை­நாட்­டி­விட்டு வேறு ஒரு பாட­சா­லைக்கு மாற்­ற­லாகிச் செல்லத் தயார் என்றும் குறித்த ஆசி­ரியை குறிப்­பிட்­டுள்ளார். இதற்கு பாட­சாலை நிர்­வாகம் இட­ம­ளிக்­கு­மாயின் பிரச்­சி­னையை சுமு­க­மாக தீர்க்க முடி­யு­மா­க­வி­ருக்கும். இதில் முன்­னரே மனித உரி­மைகள் ஆணைக்­குழு, மேன் முறை­யீட்டு நீதி­மன்றில் சட்­டமா அதிபர் திணைக்­கள பிர­தி­நி­திகள் மூலம் எட்­டப்­பட்ட இணக்­கப்­பாடு மற்றும் கல்வி அமைச்சின் உத்­த­ரவு ஆகி­ய­வற்றை அடிப்­ப­டை­யாகக் கொண்டு பாட­சாலை நிர்­வாகம் செயற்­ப­டு­மாயின் இந்த விவ­கா­ரத்­திற்கு முற்றுப் புள்ளி வைக்கக் கூடி­ய­தா­க­வி­ருக்கும். அதை­வி­டுத்து பாட­சாலை மாண­வர்­க­ளையும் வீதிக்கு இறக்கி, பெற்­றோர்கள், பழைய மாண­வர்கள், அர­சி­யல்­வா­திகள் என இப் பிரச்­சி­னையின் வட்­டத்தை மேலும் விஸ்­த­ரிப்­பது ஒரு போதும் தீர்வைத் தரப் போவ­தில்லை.

மறு­புறம் இந்­தி­யாவின் கர்­நா­ட­காவில் பாட­சா­லை­க­ளுக்கு மாண­விகள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என வெடித்த சர்ச்­சை­யா­னது இன்று இரு மதங்­க­ளுக்­கி­டை­யி­லான ஏட்­டிக்குப் போட்­டி­யான விவ­கா­ர­மாக மாற்றம் பெற்­றுள்­ளது. மாண­விகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி நிற துண்­டு­களை அணிந்­து­வ­ருவோம் என மற்­றொரு தரப்­பினர் போராட்­டத்தில் குதித்­துள்­ளனர். இலங்­கையைப் போன்றே இந்­தி­யா­விலும் இந்த விவ­காரம் தற்­போது நீதி­மன்றின் கைக­ளுக்குச் சென்­றுள்­ளது. இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரும் விரி­வான நீதி­ய­ர­சர்கள் குழாமின் தீர்ப்பே இந்த விவ­கா­ரத்தின் போக்கைத் தீர்­மா­னிக்கப் போகி­றது.

துர­திஷ்­ட­வ­ச­மாக, இந்­தி­யாவின் ஹிஜாப் விவ­காரம் அர­சியல் பின்­ன­ணி­களைக் கொண்­டது என்­ப­தையும் இதனை ஆளும் பார­தீய ஜனதா கட்சி தனது வாக்கு வங்­கிக்­கான பிர­தான கருப்­பொ­ரு­ளாக கையி­லெ­டுத்­தி­ருக்­கி­றது என்­ப­தையும் இந்­திய ஊட­கங்கள் வெளிச்­ச­மிட்­டுக்­காட்டி வரு­கின்­றன. அடுத்த வருடம் கர்­நா­ட­காவில் தேர்தல் நடை­பெ­ற­வுள்ள நிலையில் இந்த விவ­கா­ரத்தை தொடர்ந்தும் தூண்­டு­வ­தா­னது, தமது தேர்தல் பிர­சா­ரத்­திற்கு வாய்ப்­பாக அமையும் என அக் கட்சி கரு­து­கி­றது. இந்த விட­யத்தில் காங்­கிரஸ் கட்சி முஸ்­லிம்­க­ளுக்கு ஆத­ர­வாக குரல் கொடுக்­கி­றது. இது தமது வாக்கு வங்­கியைப் பாதிக்கும் என்ற போதிலும் தாம் அர­சி­ய­ல­மைப்பில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட உரி­மையின் பக்கம் நிற்­ப­தற்கு பின்­னிற்கப் போவ­தில்லை என அக் கட்­சியின் அர­சியல் பிர­தி­நி­திகள் குறிப்­பிட்­டுள்­ளனர். இந்த விவ­காரம் தற்­போது இந்­திய ஊட­கங்­க­ளிலும் குறிப்­பாக சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பாரிய பேசு­பொ­ரு­ளாக மாறி­யுள்­ளது. இதில் முஸ்­லி­மல்­லாத அதி­க­மா­ன­வர்கள் ஹிஜா­புக்கு ஆத­ர­வாக குரல் கொடுப்­ப­தா­னது ஆறு­த­ல­ளிக்­கின்ற போதிலும், ஹிஜா­புக்கு எதி­ரா­ன­வர்­க­ளது அடுத்த கட்ட நகர்வு எவ்­வாறு அமையும் என்ற அச்சம் மேலோங்­கு­கி­றது.

இந்­தி­யாவைப் பொறுத்­த­வரை தேர்­தல்கள் அண்­மிக்­கின்ற போது இன, மத, சாதி­க­ளுக்­கி­டையே கல­வ­ரங்­களைத் தோற்­று­வித்து தமது வாக்கு வங்­கியை நிரப்பிக் கொள்­வது வழக்கம். தற்­போது இந்த ஹிஜாப் விவ­கா­ரத்­தையும் பூதா­க­ர­மாக்கி அங்கு கல­வ­ரங்­களைத் தோற்­று­வித்­து­வி­டு­வார்­களோ என்ற நியா­ய­மாக அச்சம் எழு­வ­தையும் தவிர்க்க முடி­ய­வில்லை.

அதே­போன்­றுதான் இந்­திய ஹிஜாப் விவ­கா­ரத்தின் போக்கை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இலங்கை விவ­கா­ரமும் நக­ரு­மானால் அது இங்கும் தேவை­யற்ற முரண்­பா­டு­க­ளையும் பதற்­றங்­க­ளையும் தோற்­று­விக்கும். இந்­தி­யாவில் இதனை அர­சி­யல்­வா­திகள் கையி­லெ­டுத்­துள்­ள­மையே பிரச்­சி­னை­க­ளுக்குக் கார­ண­மாகும். இலங்­கை­யிலும் அவ்­வாறு அர­சி­யல்­வா­தி­களின் கைக­ளுக்கு இந்த விட­யத்தைக் கொண்டு செல்லக் கூடாது. மாறாக நீதி­மன்றம் மற்றும் கல்வி அமைச்சு மட்டத்திலேயே இதற்குத் தீர்வு காணப்பட வேண்டும். இன்றேல் இந்தியாவைப் போன்றே தமது அரசியலுக்காக இலங்கையிலும் இனங்களுக்கிடையே, மதங்களுக்கிடையே விரிசல்களை உருவாக்கி அதன் மூலம் வாக்குகளைக் கொள்ளையடிக்கக் காத்திருக்கும் சக்திகளுக்கு நாமே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததாக அமைந்து விடும்.

எனவேதான் இலங்கை மற்றும் இந்தியாவில் இந்து – முஸ்லிம் சமூகங்களை மையப்படுத்தியதாக இடம்பெறும் இந்த முரண்பாடுகள் களையப்பட்டு சுமுகமான நிலை தோன்ற பிரார்த்திப்பதுடன் நம்மால் இயன்ற நல்லிணக்க முயற்சிகளையும் முன்னெடுப்போமாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.