பாடசாலைகளில் ஊடுருவும் போதைப் பழக்கம்

0 378

யு.எல். முஸம்மில்,
குருநாகல்

மாண­வர்கள் மத்­தியில் அதி­க­ரிக்கும் போதைப்­ப­ழக்கம் என்ற தலைப்பில் கடந்த வார விடிவெள்ளியில் ஆக்கம் ஒன்று வெளி­வந்­தி­ருந்­தது. அந்த ஆக்­கத்தைப் படிக்­கும்­போது பாட­சா­லை­களில் இருந்தும் மாண­வர்கள் போதைப் பழக்­கத்­துக்கும் அடி­மை­யா­கி­றார்­களா என்று கேட்கத் தோன்­று­கி­றது.

இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட இரண்டு சம்­ப­வங்­களை இங்கு குறிப்­பி­டு­வது பொருத்தம். குரு­நாகல் மாவட்­டத்தின் பின்­தங்­கிய கிராமம் ஒன்றில் அமைந்­துள்ள சிறிய பாட­சா­லை­யொன்றில் நடந்த சம்­பவம் இது. ஒவ்­வொரு வகுப்­பிலும் மிகச் சிறிய தொகை மாணவ, மாண­வி­களை கொண்ட அந்தப் பாட­சா­லையின் இரண்டாம் வகுப்பு பாட நேரத்­தின்­போது மாணவி ஒரு­வரின் நட­வ­டிக்கை சற்று வித்­தி­யா­ச­மாக இருந்­ததை அவ­தா­னித்த அந்த வகுப்பு ஆசி­ரியை மாண­வி­யிடம் சில விப­ரங்­களை கேட்­டுள்ளார். அதன்­போது அந்த மாணவி வழங்­கிய பதில் ஆசி­ரி­யையை ஆச்­ச­ரி­யத்­துக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. அதா­வது தான் பாட­சாலை வரும்­போது எனது தந்தை வீட்டில் வாங்கி வைத்­தி­ருந்த டொபிகள் சில­வற்றை எடுத்து வந்­த­தா­கவும் அதை ஏனைய மாண­வி­ய­ருக்கும் வழங்­கி­விட்டு தான் இரண்டு டொபி­களை சாப்­பிட்­ட­தா­கவும் கூறி­யுள்ளார். தான் அந்த டொபியை சாப்­பிட்­டதில் இருந்து தலை சுற்­று­வது போல் உள்­ளது என்றும் அந்த டொபி அவ்­வ­ளவு சுவை­யா­ன­தா­கவும் இல்லை என்றும் ஆசி­ரி­யை­யிடம் கூறி­யுள்ளார். அத்­தோடு தான் சாப்­பிட்ட டொபியின் தாள்­களை கொண்டு வந்து வகுப்­பா­சி­ரி­யை­யி­டமும் காண்­பித்­துள்­ளார். இது­போன்ற டொபியை எனது வாப்பா அடிக்­கடி சாப்­பி­டுவார், எமது சாச்­சாவும் இந்த டொபியை சாப்­பி­டு­வதை கண்­டுள்ளேன், வாப்பா சாப்­பிட்­டு­விட்டு வைத்­தி­ருந்த டொபி­களில் சில­வற்றைத் தான் நான் கொண்­டு­வந்து இவர்­க­ளுக்கும் கொடுத்தேன், நானும் சாப்­பிட்டேன் என்றும் மேலும் கூறி­யுள்ளார்.

அந்த டொபி தாள்­களைப் பெற்­றுக்­கொண்ட ஆசி­ரியை தனக்கும் அது­பற்­றிய தெளிவு இல்­லா­மையால் அதிபர் மற்றும் ஏனைய ஆசி­ரி­யர்­க­ளுடன் இவ்­வி­டயம் பற்றி கலந்­து­ரை­யா­டி­யுள்ளார். அப்­போ­துதான் அது ஒரு போதைப்பொருள் என்­பது அனை­வ­ருக்கும் தெரிய வந்­துள்­ளது.

அப்­ப­டி­யாயின் பெற்­றோர்தான் குழந்­தை­க­ளுக்கு போதைப்பொருட்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­கி­றார்­களா? முன்னர் வீடு­களில் தந்தை சிகரட் குடிப்­பதை பார்த்த பிள்­ளை­களும் பழ­கிய காலம் கடந்து, இப்­போது தந்தை பயன்­ப­டுத்தும் போதைப் பொருட்­களை பிள்­ளை­களும் பயன்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருப்­பது எவ்­வ­ளவு ஆபத்­தான விடயம்?
இது­போன்­றுதான் இதே மாவட்­டத்தில் உள்ள பிர­ப­ல­மான முஸ்லிம் பாட­சா­லை­யொன்றில் நடந்த சம்­ப­வமும் இந்த இடத்தில் நினை­வுக்கு வரு­கி­றது. மாண­வர்கள் தமது இடை­வே­ளையின் போது விளை­யாட்­ட­ரங்கில் விளை­யாடிக் கொண்­டி­ருக்­கின்­றனர்.

விளை­யாடிக் கொண்­டி­ருந்த மாண­வர்கள் மத்­தியில் இருந்த ஒரு மாணவன் புதி­தாக வந்த சிறிய வகுப்பு மாண­வனை நோக்கி ஓடோடி வந்து திடீ­ரென தனது கையில் இருந்த ஏதோ ஒன்றை அந்த மாண­வனின் வாயில் திணித்து விட்டு ஓடி­யுள்ளான். பின்பு அந்த மாணவன் மயக்­க­முற்று கீழே விழுந்­துள்ளார். என்ன நடந்­தது என விசா­ரித்­ததில் அந்த மாண­வனின் வாயில் போதைப்­பொருள் திணிக்­கப்­பட்­டுள்­ளது என்ற விடயம் தெரி­ய­வந்­தது. இதனைச் செய்­தவன் யார் என்­பதை அந்த மாண­வனால் சரி­யாக கண்­டு­பி­டிக்க முடி­ய­வில்லை. அப்­ப­டி­யாயின் மாண­வர்கள் மூல­மா­கவே திட்­ட­மிட்டு ஏனைய மாண­வர்­க­ளையும் போதைக்கு அடி­மை­யாக்கும் சதிகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என்ற கேள்வி எழு­கி­றது.

இவை நான் சுட்­டிக்­காட்­டிய இரண்டு விட­யங்கள் மட்­டுமே. பாட­சா­லை­களில் இது­போன்று பல விட­யங்கள் நடந்­தே­றி­யுள்­ளன. மிகவும் கவ­லைக்­கு­ரிய செய்தி என்­ன­வென்றால் இஸ்லாம் போதைப்­பொ­ருளை ஹறா­மாக்கி, கடு­மை­யாக தடை செய்­துள்­ளது. இவை­களின் விளை­வுகள் பற்றி தாரா­ள­மாக எடுத்­து­ரைக்­கப்­பட்­டுள்­ளது. பாட­சா­லை­களில் அறி­வு­றுத்­தப்­ப­டு­கின்­றது. பள்­ளி­வாசல் மிம்பர் மேடை­களில் தெளிவு படுத்­தப்­ப­டு­கின்­றது. ஊட­கங்­க­ளிலும் வெளிச்­ச­மிட்டு காட்­டப்­ப­டு­கின்­றன. எனினும் நல்­ல­றிவைப் போதிக்கும் எமது பாடசாலைகளிலிருந்தே போதைக்கு அடிமையாகுபவர்கள் உருவாகிறார்கள் என்பதை அறிகையில் கவலையே மேலெழுகிறது.

எனவே இந்த விடயத்தில் பாடசாலைகளில் ஊடுருவியுள்ள போதைப் பழக்கத்தை துடைத்தெறிய எல்லோருமாக இணைந்து ஏதாவது ஒரு நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இன்றேல் எமது சமூகமே போதையில் மூழ்கிவிடும். அந்தப் போதையிலிருந்து நம்மையும் நமது பிள்ளைகளையும் அல்லாஹ் பாதுகாப்பானாக.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.