சிறார்களின் ஆரோக்கியத்திற்கு கேடு தரும் துரித உணவுக் கலாசாரம்!

0 765

எம்.ஏ.எம். அஹ்ஸன்

பாட­சாலை மாண­வர்கள் காலை உண­வுக்­காக துரித உணவுகள் எனப்­படும் சிற்­றுண்­டி­களை சாப்­பி­டு­வது சாதா­ர­ண­மான கலா­சா­ர­மாக மாறி­யுள்ள நிலைமை தொடர்­பாக ஆராய்ச்­சி­யா­ளர்­களும் சுகா­தார அதி­கா­ரி­களும் தற்­போது கவனம் செலுத்தி வரு­கின்­றார்கள். இந்த ஆரோக்­கி­ய­மற்ற பழக்க வழக்கம் குறித்து பாட­சாலை மட்­டத்தில் இருந்து மாற்­றங்­களை தோற்­று­விப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடு­களில் இன்­னமும் ஆரம்ப கட்­டத்­தி­லே­யேதான் இருக்­கின்­றன.

காலை உண­வாக துரித உணவுகள் அல்­லது சிற்­றுண்­டி­களை சாப்­பிடும் மாண­வர்கள் அதிக உடல் எடை­யு­டை­ய­வர்­க­ளாக மாறு­கின்­றார்கள். இதனால் மாண­வர்கள் இல­கு­வாக நோய்­வாய்ப்­ப­டு­வ­துடன் கல்­வியில் கவனம் செலுத்த முடி­யாத உடல் ரீதி­யான சவால்­களை சந்­திப்­ப­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. இவ்­வா­றான தவ­றான உண­வுப்­ப­ழக்கம் ஒன்றை தொடர்ச்­சி­யாக வைத்­தி­ருப்­ப­வர்கள் தமது உடல் மற்றும் உடல் திணி­வுச்­சுட்­டிக்கு (பி.எம்.ஐ) இடையில் எதிர்­ம­றை­யான உற­வொன்­றையே பேணு­கி­றார்கள். இந்த மோச­மான உணவுக் கலா­சாரம் மாண­வர்­களில் உடல் ஆரோக்கியத்தை வெகு­வாக பாதிக்­கின்ற ஒரு விடயம் என்­பதை பெற்­றோர்­க­ளுக்கு சுகா­தார வல்­லு­னர்கள் அறி­வு­றுத்தி வரு­கின்­றார்கள்.

துரித உணவுகள் அல்­லது சிற்­றுண்­டிகள் என்பது ஊட்­டச்­சத்­துக்கள் குறை­வாக உள்ள உணவு மற்றும் பானங்கள் ஆகும். இந்த வகை உண­வு­க­ளுக்கு உதா­ர­ணங்­க­ளாக புரதம், விட்­ட­மின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்­சத்­துகள் தேவைக்கு அதி­க­மாக உள்ள உணவு வகை­களைக் குறிப்­பி­டலாம். கொழுப்பு அல்­லது சீனி போன்ற மற்ற சேர்க்­கை­க­ளுடன் உள்ள உண­வு­க­ளையும் குறிப்­பிட முடியும். மாண­வர்கள் அதி­க­மாக உட்­கொள்ளும் துரித உணவுகளில் பல­வ­கை­யான குறு­கிய உண­வு­கள் இருக்­கின்­றன. அதற்கு எடுத்­துக்­காட்­டாக ரோல்ஸ், கட்­லெட்கள், வடை, சமோசா போன்­ற­வற்றைக் குறிப்­பிட முடியும். மிட்­டாய்கள், பொரியல், இனிப்­புகள், குக்­கீகள், ஐஸ்­கிரீம், சிப்ஸ் மற்றும் எண்­ணெய்யில் ஆழ­மாக வறுத்­தெ­டுத்த உணவு வகை­களும் இதில் உள்­ள­டங்கும்.

அதி­க­ கலோ­ரி­களை உட்­கொள்­ளும்­போது அவர்கள் அதிக எடை அல்­லது பரு­ம­னாக மாறு­கி­றார்கள் என்­றுதான் சுகா­தார ஆர்­வ­லர்கள் தெரி­விக்­கி­றார்கள். ஏனெனில் ஆரோக்­கி­ய­மற்ற உண­வுகள் அதிக எடை மற்றும் உடல் பரு­ம­னுக்கு முக்­கிய ஊக்­கி­க­ளாக இருக்­கின்­றன. கிழக்கு மத்­தி­ய­தரைக் கடல் பிராந்­தி­யத்தில் உள்ள நாடு­களில் கடந்த 40 ஆண்­டு­களில் சிறு­வர்கள் மற்றும் இளம் பரு­வத்­தி­ன­ரி­டையே அதிக எடை விகிதம் வியத்­தகு அளவில் அதி­க­ரித்­துள்­ள­தாக உலக சுகா­தார தாபனம் தகவல் வெளி­யிட்­டுள்­ளது.

துரித உணவுகள் என்று சொல்­லப்­படும் உண­வு­களில் தேவைக்கு அதி­க­மாக உப்பு மற்றும் கல்­சியம் என்­பன உள்­ளதால் அது பசியைக் குறைக்­கி­றது. சந்­தையில் துரித உணவுகள் போன்ற உண­வுகள் குறைந்த விலையில் கவர்ச்­சி­க­ர­மான விளம்­ப­ரங்கள் மூலம் கிடைக்­கி­றது. விழிப்­பு­ணர்வு இல்­லாத பெற்­றோர்கள் தமது பிள்­ளை­க­ளுக்கு குறித்த விளம்­ப­ரங்­களை பார்த்து அவற்றை வாங்கிக் கொடுத்து விடு­கி­றார்கள். பிள்­ளை­களின் இந்த உண­வுப்­ப­ழக்கம் தொடர்­பான கவனம் பெற்­றோர்­க­ளுக்கு இல்­லா­ததால் நீண்ட கால உடல் நல குறை­பா­டு­களை சந்­திக்­கி­றார்கள்.

அதிக எடை அல்­லது பரு­ம­னுடன் பிள்­ளைகள் வளர்­வதால் பிற்­கா­லத்தில் தொற்­றா நோய்­க­ளான இதய நோய், பக்­க­வாதம், நீரி­ழிவு மற்றும் சில புற்­று­நோய்கள் போன்ற அச்­சு­று­தல்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் இருப்­ப­தாக உலக சுகா­தார தாபனம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தையும் பெற்­றோர்கள் கவ­னத்தில் கொள்ள வேண்டும். அதனால் இந்த ஆபத்தை குறைக்க பிள்­ளை­க­ளுக்கு அதிக பழங்கள், காய்­க­றிகள், பருப்பு வகைகள் மற்றும் தானி­யங்­களை சாப்­பி­டு­வ­தற்­கான வழி­களை ஏற்­ப­டுத்த வேண்டும்.
துரித உணவு­களை காலை உண­வாக உட்­கொள்ளும் தவ­றான உணவுப் பழக்­கத்­துடன் இணைந்து நீண்ட நேரம் உட­்கார்ந்த நிலையில் வேலை­களைத் தொடர்­வ­திலும் உடற்­ப­ருமன் அதி­க­ரிக்கும் அபாய நிலை உள்­ளது. நீண்ட நேரம் வீடியோ விளை­யாட்­டு­களில் ஈடு­ப­டுதல் மற்றும் தொலைக்­காட்சி பார்த்தல் போன்ற பழக்கங்கள் இதற்கு உதா­ர­ணங்­க­ளாகும்.

இலங்கை தெற்­கா­சி­யாவில் குறைந்த நடுத்­தர வரு­மானம் கொண்ட ஒரு மூன்றாம் உலக நாடாக இருக்­கி­றது. இலங்­கையில் வயது வந்­தோ­ரி­டையே அதிக எடை மற்றும் உடல் பருமன் பாதிப்பு முறையே 25.2 சத­வீதம் மற்றும் 9.2 சத­வீதம் என உள்­நாட்டு ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கி­றார்கள். கொழும்பின் நகர்ப்­பு­றங்­களில் நடத்­தப்­பட்ட ஒரு ஆய்வில், ஆசிய திணி­வுச்­சுட்­டி­களின் அடிப்­ப­டையில் எடை குறை­வாக இருப்­பது, சாதா­ரண எடை­யுடன் இருப்­பது, அதிக எடை மற்றும் உடல் பரு­ம­னுடன் இருப்­பது என்­பவை தொடர்­பாக ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. 2025 ஆம் ஆண்­ட­ளவில் இலங்­கையில் அதிக எடை­யுடன் உணவு தொடர்­பான நீண்­ட­கால நோய்­களில் 18 தொடக்கம் 40 வீத­மா­ன­வர்கள் இருப்­பார்கள் என்­ப­துடன் அவர்­களில் 20.9 சத­வீ­த­மா­ன­வர்­களின் இறப்­புக்கு துரித உணவுகள் போன்ற தவ­றான உண­வுப்­ப­ழக்­கமே கார­ண­மாக இருக்கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது.

இலங்­கையின் உணவு மற்றும் போஷாக்குக் கொள்­கை­களின் படி, பெரும்­பா­லான தேசிய பொது சுகா­தாரத் திட்­டங்கள் மற்றும் சிறு­வர்கள் மீதான ஆய்­வுகள் ஊட்­டச்­சத்து குறை­பாடு நிலை குறித்து கவனம் செலுத்­து­கின்ற போதிலும் அது மிகவும் சக்தி வாய்ந்த ஒன்­றாக இல்­லாத நிலை­யிலே உள்­ளது.

காலை உணவு என்­பது மிகவும் முக்­கி­ய­மா­ன­தொரு உணவு வேளை ஆகும். காலை உணவின் உள்­ள­டக்­கங்கள் அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகி­ய­வற்­றுடன் வலு­வான தொடர்பைக் கொண்­டி­ருக்­கின்­றன. 12–-14 வய­து­டைய பதின்ம வயது சிறு­வர்கள் ஏனைய சிறு­வர்­க­ளுடன் ஒப்­பி­டும்­போது அதிக எடை மற்றும் உடல் பருமன் அதி­க­ரிப்பைக் கொண்­டுள்­ளார்கள். மேலும் பதின்ம வய­து­டை­ய­வர்கள் சிறந்த புரி­தலைக் கொண்­ட­வர்­க­ளா­கவும் உணவுத் தேர்வில் சுதந்­தி­ர­மா­ன­வர்­க­ளா­கவும் கரு­தப்­ப­டு­கின்­றார்கள்.

2019 இல் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தில் உள்ள நான்கு கலப்புப் பாட­சா­லை­களில் கல்வி கற்கும் மாண­வர்­களைக் கொண்டு ஆய்வு ஒன்று நடத்­தப்­பட்­டது. அனைத்து சமூ­கங்­களில் இருந்தும் 425 மாண­வர்கள் இதில் பங்­கு­பற்­றி­னார்கள். நடத்தை, காலை உணவு மற்றும் சமூக பொரு­ளா­தார கார­ணிகள் பற்­றிய கேள்­விகள் அடங்­கிய வினாத்தாள் ஒன்று மாண­வர்­க­ளுக்கு வழங்­கப்­பட்டு நிரப்­பு­மாறு கோரப்­பட்­டது. இறுதி வினாக்கொத்தை தயா­ரிப்­ப­தற்கு முன்னர் பல்­வேறு வகை­யான துரித உணவுகளை உட்­கொள்­வதில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய கார­ணி­களைக் கண்­ட­றிய தோரா­ய­மாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 25 மாண­வர்­களைக் கொண்டு ஒரு ஆய்வுக் கணக்­கெ­டுப்பு நடத்­தப்­பட்­டது.

ஆண் சிறு­வர்கள் மற்றும் சிறு­மி­க­ளுக்கு இடையில் எடை, உயரம் மற்றும் திணி­வுச்­சுட்டி ஆகி­ய­வற்றில் பாரி­ய­ளவில் வேறு­பா­டுகள் எதுவும் ஆய்வு மாதி­ரியில் காணப்­ப­ட­வில்லை. மாண­வர்­களின் திணி­வுச்­சுட்டி நிலையின் 55 வீத­மா­ன­வர்கள் சாதா­ரண வரம்பில் இருந்­துள்­ளார்கள். அதிக எடை­யுடன் 24 வீத­மா­ன­வர்­களும் எடை குறை­வாக 21 வீத­மா­ன­வர்­களும் இருந்­தார்கள். இதே­வேளை கொழும்பு நகர்ப் பகு­தியில் ஆறு மற்­றும் ஏழாம் வகுப்பு மாண­வர்­களைப் பயன்­ப­டுத்தி நடத்­தப்­பட்ட ஆய்வில் அவர்கள் உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறைக்கு அடி­மை­யா­னதால் உடல் பருமன் அல்­லது அதிக எடை போன்ற நிலை­மை­களால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என்று ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன.
பெரும்­பா­லான மாண­வர்கள் சிற்­றுண்­டி­க­ளையே காலை உண­வாக உட்­கொள்­வது ஆய்வின் மூலம் தெரி­ய­வந்­துள்­ளது. 22 வீத­மான மாண­வர்கள் வாரத்­திற்கு ஐந்து முதல் ஆறு முறை சிற்­றுண்டி உணவை உட்­கொள்­கி­றார்கள். 44.7 வீத­மா­ன­வர்கள் வாரத்தில் இரண்டு அல்­லது மூன்று சிற்­றுண்டி உணவை உட்­கொள்­கி­றார்கள். 33.3 வீத­மான மாண­வர்கள் காலை உண­வாக சிற்­றுண்­டி­களை உண்­ணாத மாண­வர்­க­ளாக இருந்­துள்­ளார்கள்.

பகலில் பிரத்­தி­யேக வகுப்­புடன் இறுக்­க­மான அட்­ட­வ­ணையை எதிர்­கொள்­வதால் சரி­யான உணவை சாப்­பி­டு­வ­தற்கு போது­மான நேரம் இல்லை என்றும் பெற்­றோர்கள் தாம­த­மாக எழும்­பு­வதால் காலை உணவை நேரத்­திற்கு தயா­ரிக்க முடி­ய­வில்லை என்­ப­துமே மாண­வர்­கள் சிற்­றுண்­டி­களை நாடு­வ­தற்­கான கார­ணங்­க­ளாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.
சிற்­றுண்­டி­களை சாப்­பி­டு­கின்­ற­வர்கள் அது சுவை­யுடன் தங்­க­ளுக்கு இனி­மை­யான உணர்வைத் தரு­வ­தாக நம்­பு­கின்­றார்கள். சிற்­றுண்­டி­களை தேர்ந்­தெ­டுப்­ப­தற்­கான கார­ணத்தை மாண­வர்­க­ளிடம் கேட்­ட­போது 73 வீத­மா­ன­வர்கள் சுவை­யையும் 13.7 வீத­மா­ன­வர்கள் நேரத்தை மிச்­சப்­ப­டுத்­து­வ­தா­கவும் 7.7 வீத­மா­ன­வர்கள் குறைந்த விலை­யையும் 6 வீத­மா­ன­வர்கள் வேறு சில கார­ணங்­க­ளையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

பரு­ம­னான மற்றும் அதிக எடை கொண்ட மாண­வர்­களில் பெரும்­பா­லானோர் சிற்­றுண்­டி­களை காலை உண­வாக உட்­கொண்­ட­வர்கள் ஆவர். உடல் பருமன், எடை குறைவு மற்றும் அதிக எடை ஆகி­ய­வற்­றுக்கு இடையே புள்­ளி­யியல் ரீதி­யாக குறிப்­பி­டத்­தக்க வேறு­பா­டுகள் உள்­ளன.

பதி­ல­ளித்­த­வர்­களில் மொத்தம் 87 வீத­மா­ன­வர்கள் சிற்­றுண்­டி­களை உட்­கொள்ளும் பழக்கம் பற்றி தமது பெற்றோர் அறிந்­தி­ருப்­ப­தாகக் கூறி­யுள்­ளனர். 8 வீத­மா­ன­வர்கள் தாம் உண்­பது குறித்தோ பெற்­றோரின் விழிப்­பு­ணர்வு குறித்தோ தங்­க­ளுக்கு எந்த யோச­னையும் இல்லை என்று தெரி­வித்­துள்­ளார்கள். 5 வீத­மா­ன­வர்கள் அவர்­களின் பெற்­றோ­ருக்குத் தெரி­யாமல் இர­க­சி­ய­மாக சிற்­றுண்­டி­களை உட்­கொள்­வ­தாக கூறு­கி­றார்கள்.

ஆய்வில் கலந்­து­கொண்ட மாண­வர்­களில் 70 வீத­மான மாண­வர்கள் சிற்­றுண்­டிகள் அல்­லது துரித உணவுகள் என்­பன ஆரோக்­கி­ய­மற்ற உண­வுகள் என்­பதை ஏற்க­னவே உணர்ந்­த­வர்­க­ளாக இருந்­தார்கள். மேலும் 28 வீத­மான மாண­வர்கள் சிற்­றுண்­டி­களை ஆரோக்­கி­ய­மான உண­வுகள் என்று நினைத்துக் கொண்­டி­ருந்­த­வர்கள் ஆவர்.
லேபிள்­களில் உள்ள பொருட்கள் பற்­றிய பங்­கேற்­பா­ளர்­களின் விழிப்­பு­ணர்வு திருப்­தி­க­ர­மாக இருப்­ப­தாக கரு­தப்­ப­டு­கின்­றது. பெரும்­பா­லான மாண­வர்கள் தாங்கள் சரி­யாக சாப்­பி­ட­வில்லை என்­பதை ஒப்­புக்­கொண்­ட­துடன் உண­வுக்கு அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்க முடி­யாத அள­வுக்கு வேலைப்­பளு­வுடன் இருப்­ப­தா­கவும் முடி­வுகள் தெரி­விக்­கின்­றன.

முடி­வு­க­ளின்­படி மாண­வர்­களின் திணி­வுச்­சுட்டி மற்றும் உடல் செயற்­பாடு நிலைக்கு இடையே ஒரு தெளி­வான உறவை ஏற்­ப­டுத்த முடியும் என்று ஆய்­வா­ளர்கள் கண்­ட­றிந்­துள்­ளார்கள். மாண­வர்­களின் உடல் செயற்­பா­டு­களின் நிலைக்கும் அவர்­களின் திணி­வுச்­சுட்­டிக்கும் இடையே தெளி­வான தொடர்பு இருப்­ப­த­னா­லேயே ஆய்­வா­ளர்கள் இவ்வாறு தெரிவிக்கிறார்கள். களுத்துறை மாவட்டத்தில் 14-–15 வயதுடைய பள்ளி மாணவர்களிடையே திணிவுச்சுட்டியின் நிலை மற்றும் உடல் செயல்பாடு நிலை ஆகியவற்றுக்கு இடையே இதேபோன்ற புள்ளிவிபரம் இருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

மாணவர்களின் உணவுப்பழக்கம் மற்றும் ஆற்றல்கள் என்பன திணிவுச்சுட்டியுடன் நேரடியாக தொடர்புபடுகின்றது என்பதை மேற்கண்ட ஆய்வுகள் தெளிவாக காட்டுகின்றன. பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் உணவுப்பழக்கம் தொடர்பாக விழிப்படைய வேண்டியது மிகக்கட்டாயமான ஒரு விடயம் என்பதை நாம் உணர வேண்டும். சிற்றுண்டிகளை காலை உணவாக உட்கொள்வதால் ஏற்படவிருக்கும் மிகத்தீவிரமான நீண்டகால எதிர்மறை விளைவுகளை கவனத்தில்கொண்டு ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.

பாட­சாலைக் கல்விச் சூழல் சுகா­தா­ரத்தை உறு­திப்­ப­டுத்­திய ஒன்­றாக இருப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட வேண்டும். பாட­சாலை மாண­வர்கள் காலையில் ஆரோக்­கி­ய­மான உண­வு­க­ளைத்தான் சாப்­பி­டு­கி­றார்­களா என்­பதை அவ­தா­னித்து உறு­திப்­ப­டுத்தும் பொறி­மு­றைளை பாட­சா­லை­க­ளுக்குள் கொண்டு வந்தால் ஆரோக்­கி­ய­மான எதிர்கால தலைமுறையை நாம் உருவாக்க முடியும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.