கூரகல தப்தர் ஜெய்லானியில் பள்ளியாக இயங்கும் கொட்டிலை அகற்றுக

ஸியாரம் மாத்திரம் இருக்கலாம் என்கிறார் தம்­ம­ர­தன தேரர்

0 888

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
“கூர­கல – ஜெய்­லா­னியில் பள்­ளி­வா­ச­லாக இயங்­கி­வரும் தகரக் கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு அதன் நிர்­வாக சபை­யிடம் மகஜர் ஒன்றின் மூலம் கோரிக்கை விடுத்­தி­ருக்­கிறேன். ஆனால் பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ, வக்பு சபையோ இது­வரை எவ்­வித நட­வ­டிக்­கையும் மேற்­கொள்­ள­வில்லை. விரைவில் அது அகற்­றப்­ப­டா­விட்டால் பலாத்­கா­ர­மாக அகற்­று­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்” என நெல்­லி­கல சர்­வ­தேச பெளத்த நிலை­யத்தின் ஸ்தாப­க­ரான வத்­து­ர­கும்­புரே தம்­ம­ர­தன தேரர் தெரி­வித்தார்.
ஜெய்­லானி பள்­ளி­வாசல் பிர­தே­சத்தை அண்­மித்து பாரிய அளவில் பெளத்த தாது கோபுரம் உட்­பட தர்ம மண்­டபம்,வீதிக்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி பணிகள் என்­பன கூர­கல விஹாரை வளா­கத்தில் இடம் பெற்று வரும் நிலையில் அப்­ப­கு­தி­யி­லுள்ள தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வா­சலின் நிலைமை தொடர்பில் வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில், கூர­கல பிர­தேசம் பெளத்­தர்­களின் புனித பிர­தேசம் மாத்­தி­ர­மல்ல தொல்­பொருள் பிர­தே­ச­மாகும். இப்­ப­கு­தி­யிலே தகர கொட்­டிலில் பள்­ளி­வாசல் அமைந்­துள்­ளது. இக்­கொட்­டிலை அகற்­றிக்­கொள்­ளு­மாறு பள்­ளி­வாசல் நிர்­வா­கத்தை மகஜர் மூலம் கோரி­யி­ருக்­கிறேன். ஆனால் அவர்கள் அமை­தி­யாக இருக்­கி­றார்கள். எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை. அங்­குள்ள ஸியா­ரத்தை வைத்­து­விட்டு பள்­ளி­வா­ச­லாக இயங்கும் தகர கொட்­டிலை அகற்றும் படி வேண்­டி­யி­ருக்­கிறேன்.

முஸ்­லிம்கள் தொழுகை நடத்­து­வ­தற்கு என்னால் ஒரு மண்­டபம் வேறாக அமைத்துக் கொடுக்க முடியும். கூர­கல பிர­தேசம் சிவ­னொ­லி­பா­த­ மலை போன்று அனைத்து மக்­களும் வந்து தங்கள் மத­வ­ழி­பா­டு­களை நடத்தும் வகையில் அமை­ய­வேண்டும்.
பள்­ளி­வாசல் நிர்­வா­கமோ அல்­லது வக்பு சபையோ இது தொடர்பில் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கா­விட்டால் பள்­ளி­வாசல் அங்­கி­ருந்து அகற்­றப்­படும். பள்­ளி­வா­சலின் புதிய நிர்­வா­கத்­துக்குள் பிரச்­சினை நில­வு­வ­தாக அறி­கிறேன் என்றார்.

நிர்­வாக சபை உறுப்­பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜவுபர் இது தொடர்பில் கருத்துத் தெரி­விக்­கையில், வக்பு சபையே அதற்­கான தீர்­மா­னத்தை மேற்­கொள்ள வேண்டும்.இது தொடர்பில் தாம் நட­வ­டிக்கை முன்­னெ­டுப்­ப­தாக வக்­பு­சபை எம்­மிடம் தெரி­வித்­துள்­ளது.
தப்தர் ஜெய்­லானி பள்­ளி­வாசல் மற்றும் ஸியாரம் சுமார் 800 வரு­ட­கால வர­லாறு கொண்­ட­வை­யாகும். நாட்டின் பல பாகங்­க­ளி­லி­ருந்தும் முஸ்லிம்கள் இங்கு விஜயம் மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது. கடந்த 16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கூரகல புனித பிரதேச நிர்மாணப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார். எதிர்வரும் வெசாக் அரச தேசிய நிகழ்வு கூரகலயில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.