பேராசிரியர் கலாநிதி அல்லாமா ம.மு. உவைஸ் நூற்றாண்டு விழா

0 2,802

கலாநிதி எம்.ஏ.எஸ்.எப். ஸாதியா
தலைவர், மொழித்துறை, இலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

பேரா­சி­ரியர் கலா­நிதி அல்­லாமா ம.மு. உவைஸ் நூற்­றாண்டு விழா தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழக உப­வேந்தர் பேரா­சி­ரியர் றமீஸ் அபூ­பக்கர் தலை­மையில்18.01.2022 செவ்­வாய்க்­கி­ழமை மாலை 2.30 மணிக்கு பண்­டா­ர­நா­யக்கா ஞாப­கார்த்த சர்­வ­தேச மாநாட்டு மண்டபத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதனை முன்­னிட்டு இக் கட்­டுரை பிர­சு­ர­மா­கி­றது.

தமிழ் மொழிக்கு இருக்­கிற உன்­ன­த­மான பண்­பு­களில் ஒன்று அது பல்­வேறு சம­யங்­களின் இலக்­கி­யங்­க­ளையும் தன்­ன­கத்தே கொண்­ட­தாகும். பௌத்த, கிறி­ஸ்­தவ, சைவ, இஸ்­லா­மிய இலக்­கி­யங்கள் இம்­மொ­ழி­யிலே வந்­தி­ருக்­கின்­றன. இவ்­வ­கையில் இஸ்­லா­மிய சமயம் சார்ந்த தமிழில் வந்த இலக்­கி­யங்­களை மீள் கண்­டு­பி­டிப்புச் செய்து அதற்­கென்ற தனிப்­பா­ரம்­ப­ரி­யத்தை உரு­வாக்­கிய பெருமை பேரா­சி­ரியர் அல்­லாமா ம.மு.உவைஸ் அவர்­களைச் சாரும்.

இவர் தென்­னி­லங்­கையைச் சேர்ந்­தவர். பெரும்­பாலும் வடக்கு, கிழக்­கிலே இருந்து தமிழ்ப்­ப­ணி­யாற்­று­வதைவிட தென்­னி­லங்கைப் பாரம்­ப­ரி­யத்­தி­லி­ருந்து வந்து தமிழ்ப்­பணி ஆற்­று­வது என்­பது இன்­னொரு வகையில் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாகும். பாணந்­துறை ஹேன­முல்­லையைச் சேர்ந்த உவைஸ் பாரம்­ப­ரிய இஸ்­லா­மியக் குடும்­பத்தில் பிறந்­தவர். அவ­ரது தந்­தையார் மஹ்­மூது லெப்பை. தாயார் செய்­னம்பு நாச்­சியார். இவர் பிறந்த ஹேன­முல்­லையை ‘ஊர்­மனை’ என்றும் அழைப்பர். இவர் வாழ்ந்த வீட்­டுக்கு ‘மர்கஸ்’ என்று பெயர்.

கிரா­மத்துப் பாட­சா­லை­யி­லேயே உவைஸ் தனது ஆரம்பக் கல்­வியைப் பயின்றார். அவ­ரது தந்­தையார் வியா­பா­ரத்தில் ஈடு­பாடு காட்­டி­னாலும் சமயப் பணி­க­ளிலும் ஈடு­பட்டார். உவைஸ் அர­சினால் நடத்­தப்­பட்ட கனிஷ்ட பாட­சாலை தரா­தரப் பரீட்­சையில் தோற்றி சித்தி எய்­தினார். அது அக்­கா­லத்து வீர­கே­சரிப் பத்­தி­ரி­கையில் வெளி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. அவ­ரு­டைய சக முஸ்லிம் மாண­வர்­களும் தமிழ் மாண­வனும் அப்­ப­ரீட்­சையில் சித்தி அடை­ய­வில்லை. மேலும் பல பிரச்­சி­னை­களால் உவைஸ் தொடர்ந்து கற்­கக்­கூ­டிய வாய்ப்பு நழுவப் பார்த்­தது. உயர் கல்வி கற்­ப­தற்­கான பாட­சாலை வச­தி­களும் அங்கு இருக்­க­வில்லை. ஆனால் உவைஸின் தந்­தை­யா­ருக்கு மகனைப் படிப்­பிக்க வேண­்டு­மென்று ஆசை இருந்­தது. கொழும்­புக்கு படிப்­பிக்க அனுப்­பு­வ­தற்கு அவ­ரிடம் வசதி இருக்­க­வில்லை.

மிக சிர­மத்­துக்கு மத்­தியில் சரிக்­கா­லி­முல்­லையில் உள்ள ஆங்­கில மொழிப் பாட­சா­லை­யான த­க்ஷலா வித்­தி­யா­ல­யத்தில் சேர்க்­கப்­பட்டார். அந்தக் கட்­டணம் செலுத்தும் பாட­சா­லையில் பல சவால்­க­ளுக்கு மத்­தியில் கல்­வியைத் தொடர்ந்து சிரேஷ்ட தரா­தரப் பரீட்­சை­யிலும் சித்­தி­ய­டைந்தார். பாட­சா­லையில் தமிழை ஒரு பாட­மாகக் கற்­காத உவைஸ் பல்­க­லைக்­க­ழக புகு­முகப் பரீட்­சைக்­காக தமிழை சுய­மாகக் கற்க வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்டார். இரண்­டா­வது முறையே பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்ட அவர் அங்கு தமி­ழையும் சிங்­க­ளத்­தையும் பொரு­ளி­ய­லையும் கற்றார்.

இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் தமிழ்த்­துறைத் தலை­வ­ராக இருந்த தமிழ்ப் பேரா­சி­ரியர் சுவாமி விபு­லா­நந்­தரின் வழி­கா­ட்டலில் தனது கலை­மாணிப் படிப்பைப் பூர்த்தி செய்தார். அக்­கா­ல­கட்­டத்தில் தமிழ் கலை­மாணி பயின்ற ஒரே மாணவர் உவைஸ் ஆவார். அப்­போது உவைஸின் பொரு­ளா­தார சூழ்­நி­லைமை கார­ண­மாக அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸின் கல்விச் சகாய நிதி­யோடு அவர் தனது பல்­க­லைக்­க­ழகக் கல்­வியைத் தொடர்ந்தார். பின்னர் உதவி விரி­வு­ரை­யா­ள­ராக இலங்கைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கட­மை­யாற்­றினார். அக்­கா­ல­கட்­டத்­திலே அவர் இஸ்­லா­மிய தமிழ் இலக்­கியம் பற்றித் தேடத் தொடங்­கினார். அத­னையே தனது முது­மாணிக் கற்­கைக்கும் தேர்வு செய்தார். அவ­ரது இப்­ப­ணிக்கு தூண்­டு­கோ­லாக பேரா­சி­ரியர் வித்­தி­யா­னந்தன், பேரா­சி­ரியர் கண­ப­திப்­பிள்ளை ஆகியோர் விளங்­கினர்.

‘முஸ்­லிம்கள் தமி­ழுக்­காற்­றிய தொண்டு’ என்ற தலைப்பில் உவைஸ் தனது முது­மாணிப் பட்­டத்தை மேற்­கொண்டார். பகு­தி­நேர விரி­வு­ரை­யா­ள­ராகக் கட­மை­யாற்­றிய அவர் 1953இல் இலங்கைப் பல்­க­லைக்­க­ழகம் பேரா­த­னைக்கு மாற்­றப்­பட்­டதும் கொழும்பு ஸாஹிராக் கல்­லூ­ரியின் ஆசி­ரி­ய­ராக சேர்ந்து கொண்டார். அக்­கா­லத்தில் மொழி­பெ­யர்ப்­பா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றினார். பின்னர் வித்­தி­யோ­தய பல்­க­லைக்­க­ழகம் ஆரம்­பிக்­கப்­பட்­டதும் அதன் ‘தற்­கால கீழைத்­தேய மொழித் துறையின் தலை­வ­ராக கட­மை­யாற்­றினார். இக்­கா­ல­கட்­டத்தில் இலங்கை வானொ­லி­யிலும் பத்­தி­ரி­கை­க­ளிலும் இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கியம் குறித்து பேசியும் எழு­தியும் வந்தார். இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கிய மாநா­டு­களில் பங்­கு­பற்­றினார். இலங்கை வானொ­லியில் அவர் உரை­யாற்­றி­யவை பின்னர் ‘வழியும் மொழியும்’, ‘உமறுப் புலவர் ஓர் ஆலிமா’ ஆகிய நூல்­க­ளாக வெளி­வந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

தமி­ழிலும் ஆங்­கி­லத்­திலும் பாண்­டித்­தியம் பெற்ற உவைஸ் சிங்­கள – தமிழ் இலக்­கி­யங்­களை மொழி­பெ­யர்ப்­பதில் ஈடு­பாடு காட்­டினார். மாட்டின் விக்­கி­ர­ம­சிங்­கவின் ‘கம்­பெ­ர­லிய’ என்ற சிங்­கள நாவலை தமிழில் ‘கிராமப் பிறழ்வு’ என மொழி­பெ­யர்த்து வெளி­யிட்டார். 1964இல் அதனை சாகித்ய மண்­ட­லய வெளி­யிட்­டது. உத்­தி­யோக மொழித் திணைக்­க­ளத்தின் மூலம் பல தமிழ் -சிங்­கள நூல்­களை மொழி­பெ­யர்த்து வழங்­கினார்.

கலா­நிதி ஐ.ஏ.எஸ்.வீர­வர்­தன (பொரு­ளி­யல்­துறை முது­நிலை விரி­வு­ரை­யாளர்) எழு­திய ‘இலங்­கையின் பொரு­ளா­தார முறை’ என்ற நூலை சிங்­க­ளத்­தி­லி­ருந்து மொழி­பெ­யர்த்தார். சி.என்.தேவ­ராஜன் எழு­திய தமிழ் நூல் ஒன்றை ‘வாணிஜ அங்க கணி­தய’ என சிங்­க­ளத்தில் மொழி­பெ­யர்த்து வெளி­யிட்டார். பேரா­சி­ரியர் எப்.ஆர்.ஜய­சூ­ரி­யவின் ‘ஆர்­திக விக்­கி­ர­கய’ என்ற நூலையும் ‘பொரு­ளியல் பாகு­பாடு’ என்ற பெயரில் மொழி­பெ­யர்த்தார். இதே­போல ஆங்­கி­லத்தில் இருந்தும் தமிழில் இருந்தும் இஸ்­லா­மிய நூல்கள் பல­வற்றை சிங்­க­ளத்­திற்கு மொழி­பெ­யர்த்தார்.

உவைஸ் இஸ்­லா­மியத் தமிழ் இலக்­கிய மாநா­டு­களில் கலந்து கொள்­வ­தோடு மட்­டு­மல்­லாது கொழும்பில் அதன் நான்­கா­வது மாநாட்டை மிகப் பிரம்­மாண்­ட­மாக நடாத்தி முடித்தார். அப்­போது அவர் முஸ்லிம் தமிழ்க் காப்­பி­யங்கள் என்ற ஆய்­வேட்டைச் சமர்ப்­பித்து பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தில் கலா­நிதிப் பட்­டத்­தையும் பெற்­றுக்­கொண்டார்.

இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கி­யத்­திற்­காக அவர் ஆற்­றிய தொண்டு அவரை கடல் கடந்த பல்­க­லைக்­க­ழகம் ஒன்றில் பேரா­சி­ரி­ய­ராக அழைத்துச் சென்­றது. மதுரைக் காம­ராசர் பல்­க­லைக்­க­ழகம் இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கி­யத்­திற்­கென்று இருக்கை அமைத்து அதன் முதன்மைத் தமிழ் பேரா­சி­ரி­ய­ராக பேரா­சி­ரியர் உவைஸ் அவர்­களை இருத்­தி­யது. இந்­நி­கழ்வு 1979 ஒக்­டோபர் 15இல் இடம்­பெற்­றது. இதன்­பின்னர் இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கி­யமே அவர் மூச்­சா­னது. தொடர்ந்து அப்­ப­ணியில் ஈடு­பட்டார். குறிப்­பாக தமிழ் இலக்­கி­யத்தில் வழங்கும் அரபுச் சொற்­க­ளுக்­கென ‘அர­புத்­தமிழ் அக­ராதி’ ஒன்றை வெளி­யிட்டார். இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கிய வர­லாற்­றினைக் கூறும் ஆறு தொகு­தி­களை வெளி­யிட முனைந்தார். இப்­ப­ணி­களை மதுரை காம­ராசர் பல்­க­லைக்­க­ழக பதிப்­புத்­துறை மேற்­கொண்­டது. இப்­ப­ணி­களில் பேரா­சி­ரியர் பீ.எம்.அஜ்­மல்கான் அவ­ருக்கு உத­வி­யாக இருந்தார்.

கி.பி.1700 வரை­யி­லான இஸ்­லா­மியத் தமி­ழி­லக்­கிய வர­லாறு, காப்­பிய வர­லாறு, சிற்­றி­லக்­கிய வர­லாறு, இஸ்­லா­மிய ஞான இலக்­கி­யங்கள், அரபுத் தமிழ் இலக்­கியம், பழங்­கால வச­ன­ந­டையும் தற்­காலக் கவி­தையும் முத­லி­யன முறையே ஆறு தொகு­தி­க­ளாக வர திட்­ட­மி­டப்­பட்­டது. இதில் அவர் வாழும் போதே நான்கு தொகு­திகள் வெளி­வந்­தன.

இத்­தகு வியத்­தகு பணி­களை ஆற்­றிய உவைஸ் அவர்­களை 1992இல் இலங்கை அரசு தேசிய வீரர் தினத்தில் தேசிய விருது வழங்கி கௌர­வித்­தது. அவர் இலங்கை நாட்­டுக்கும் மொழிக்கும் கலா­சா­ரத்­துக்கும் சமூ­கத்­துக்கும் அரிய பணி­களை ஆற்­றினார். முஸ்­லிம்­களின் ஆற்றல் மிக்க இலக்­கியப் பணி­களை – முஸ்­லிம்­களின் பண்­பாட்டில் எழுந்த இலக்­கியப் பணி­களை தமி­ழுக்குக் கொண்டு வந்து சேர்த்தார். தமி­ழி­னதும் சிங்­க­ளத்­தி­னதும் அறி­வுத்­து­றையை இரு மொழி­க­ளுக்கும் பெயர்ப்புச் செய்­வதில் அக்­கறை செலுத்­தினார். எல்லா சமூ­கத்­துக்கும் பய­னுள்ள மனி­த­ராக அவர் வாழ்ந்தார்.

பேரா­சி­ரி­யரின் குடும்ப வாழ்வு மிக்க மகிழ்ச்­சி­க­ர­மா­னது. அவர் பேரு­வளை சீனன்­கோட்டை செல்­வந்தக் குடும்­பத்தைச் சேர்ந்த சித்தி பாத்­து­மாவை மண­மு­டித்து ஐந்து பிள்­ளை­களை பேறாகப் பெற்றார். அதில் பாத்­திமா நிலுபர் என்ற பெண்­ணையும் முஹம்­மது அஹ்ஸன், முஹம்­மது அஜ்மல் இஷ்­ப­ஹானி, முஹம்­மது அஹ்கம் சப்ரி, முஹம்­மது அர்ஷத் யுஸ்ரி ஆகிய ஆண்­ பிள்­ளை­க­ளையும் பெற்றார். முறையே இரண்­டா­வது பிள்­ளையே பெண் பிள்­ளை­யாகும். அவ­ரது பிள்­ளைகள் கொழும்பின் தலை­சி­றந்த கல்­லூ­ரி­களில் கல்வி கற்­றனர். ஆனால் அவர்கள் கல்­வித்­து­றை­யினைத் தொட­ராது வியா­பாரத் துறையில் பிர­சித்தம் பெற்று இன்று பொரு­ளா­தா­ரத்தில் மிக உயர்ந்தும் செல்­வாக்கு மிக்­க­வர்­க­ளா­கவும் திகழ்­கின்­றனர். ‘அவர் இனிய பண்பும் இரக்க சுபா­வமும் விட்டுக் கொடுக்கும் மனப்­பான்­மையும் மார்க்­கப்­பற்றும் மிக்­கவர்’ என அவ­ரது நண்பர் பேரா­சி­ரியர் தில்­லை­நாதன் குறிப்­பி­டுவார். அத்­த­கைய மகானின் இழப்பு கல்விச் சமூ­கத்­துக்கு மாத்­தி­ர­மன்றி மானி­டத்தை நேசிக்கும் அனை­வ­ருக்கும் பேரி­ழப்­பா­கவே அமைந்­தது.

அவ­ரது மரி­யா­தையை உணர்ந்த அவ­ரது பிள்­ளைகள் அவரை என்றும் கௌர­வப்­ப­டுத்தி வரு­கின்­றனர். அவர் மறைந்­த­வுடன் ‘மர்கஸில்’ இருந்த அவரது இஸ்லாமியத் தமிழிலக்கிய நூலகத்தை அப்போதைய அமைச்சர் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் துணையோடு தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். 2017இல் தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையோடு இணைந்து அவர் நினைவாக வரலாற்றுச் சிறப்புமிக்க கருத்தரங்கமொன்றை ஒழுங்கு செய்தனர். இன்று அவரது நூற்றாண்டு நிறைவை அதே பல்கலைக்கழகத்தோடு இணைந்து கொண்டாடுகின்றனர். அந்நிகழ்வில் அவரை கௌரவிக்கும் முகமாக இந்நாட்டின் பிரதம மந்திரி கலந்து கொள்வதோடு அவரது நினைவு முத்திரை ஒன்றையும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

‘கல்விக்கு உதவி செய்தவர் உலகில் மறைந்து விடுவதில்லை’ என்பதற்கு பேராசிரியர் உவைஸ் அவர்கள் மிகப்பெரும் உதாரணம். இஸ்லாமியத் தமிழிலக்கியம் இருக்கும் வரை உவைஸ் என்றும் நம்மோடு வாழ்வார். பல்பண்பாடும் பல்மொழியும் இணைந்த உறவுகள் வாழும் வரை உவைஸ் அதற்கு நமக்கு வழிகாட்டியாவார். பேராசிரியர் அல்லாமா ம.மு.உவைஸ் நாமம் என்றும் வாழ்க!- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.