உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் நடாத்தப்பட்டு ஆயிரம் நாட்கள்

கொழும்பு மறை மாவட்ட பேராயர் தலைமையில் ராகமையில் நினைவு அஞ்சலி

0 357

(எம்.எம்.சில்­வெஸ்டர், ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்­குதல் நடாத்­தப்­பட்டு 1000 ஆவது நாள் நாளைய தினம் (14) ராகம- தேவத்தை தேசிய பெசி­லிக்­காவில் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.
அன்­றைய தினம், கொழும்பு மறை மாவட்ட பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் தலை­மையில் சகல மறை மாவட்ட ஆயர்கள் மற்றும் துணை ஆயர்­களின் பங்­கு­பற்­று­த­லுடன் விசேட ஜெப வழி­பாடு ஒப்­புக்­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக கொழும்பு பேராயர் இல்லம் ஊடகப் பிரிவு வெளி­யிட்­டுள்ள அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
இவ்­வி­டயம் குறித்து அதில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்கள் இடம்­பெற்று 1000 நாட்­க­ளா­கின்­றது. எனினும், பாதிக்­கப்­பட்­ட­வர்கள் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தான நீதி இது­வரை வழங்­கப்­ப­ட­வில்லை. இவ்­வி­டயம் தொடர்­பா­கவும் தற்­போது நாட்டில் மக்கள் எதிர்­கொள்­கின்ற சமூக, பொரு­ளா­தார நெருக்­க­டிகள் குறித்து கட­வு­ளிடம் வேண்­டிக்­கொள்­வ­தற்­கான தேசிய மட்­டத்­தி­லான விசேட ஜெப வழி­பா­டொன்றை நடத்த இலங்கை கத்­தோ­லிக்க ஆயர் பேரவை தீர்­மா­னித்­துள்­ளது.

2022 ஜன­வரி 14 ஆம் திகதி (நாளை) காலை 10 மணிக்கு ராகம- தேவத்தை தேசிய பெசி­லிக்­கா­வி­லுள்ள இலங்கை மாதா கெபி­யி­லி­ருந்து பெசி­லிக்கா வரை அருகில் ஆயர்கள், குரு­வா­ன­வர்கள், அருட் சகோ­த­ரர்கள் , அருட் சகோ­த­ரிகள் என மக்கள் அனை­வரும் ஜெப­மாலை மற்றும் ஜெபங்கள் உச்­ச­ரித்து பவனி செல்­வார்கள்.

அதன் பின்னர், தேவத்தை பெசி­லிக்­காவின் திறந்­த­வெ­ளியில் பேராயர் மெல்கம் கர்­தினால் ரஞ்சித் ஆண்­டகை உள்­ளிட்ட நாட்டின் சகல மறை­மா­வட்ட ஆயர்­களின் தலை­மையில் விசேட செப வழி­பாடு தமிழ் மற்றும் சிங்­கள மொழி­களில் ஒப்­புக்‍­கொ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­துடன், இந்த செப­வ­ழி­பாடு நண்­பகல் 12 மணி­ய­ளவில் நிறை­வ­டையும் எனவும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

நாளை காலை 10.00 மணிக்கு நடை­பெ­ற­வுள்ள இந்­நி­னைவு ஜெப நிகழ்­வு­களில் உயிர்த்த ஞாயிறு தற்­கொலை தாக்­கு­த­லினால் உயிர்­நீத்­த­வர்­களின் குடும்ப உற­வி­னர்கள் மற்றும் அத்­தாக்­கு­தலில் காயங்­க­ளுக்­குள்­ளாகி மாற்றுத் திற­னா­ளி­க­ளா­கி­யுள்­ள­வர்கள் கலந்து கொள்ள ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த நினைவு அஞ்­சலி நடை­பெறும் ராகம பெசி­லிகா ஆல­யத்தைச் சூழ பொலிஸ் பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

2019 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை குண்­டுத்­தாக்­கு­தலில் 3 காவல் துறை­யினர், 39 வெளி­நாட்­ட­வர்கள் உட்­பட 253 பேர் கொல்­லப்­பட்­டனர். மேலும் 500 க்கும் மேற்­பட்டோர் காயங்­க­ளுக்­குள்­ளா­கினர்.
கொழும்பு கொச்சிக்கடை, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் கிறிஸ்தவ ஆலயங்களிலும் சங்கிரிலா, சினமன் கிரேண்ட் மற்றும் கிங்ஸ்பெரி உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்களிலும் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.