மஜ்மா நகரின் இரட்டை நெருக்கடி!

0 489

முகத்­தஸா வாஹித்

கொவிட் 19 தொற்­றினால் உயி­ரிழந்­த­வர்­களை அடக்கம் செய்யும் ஓட்­ட­மா­வடி, மஜ்மா நக­ருக்கு அண்­மையில் விஜயம் செய்த ஊட­க­வி­ய­லாளர் முகத்­தஸா வாஹித் அங்கு வாழும் மக்கள் எதிர்­நோக்கும் காணிப் பிரச்­சினை தொடர்பில் நேற்­றைய டெய்லி மிரர் பத்­தி­ரி­கையில் எழு­தி­யுள்ள கட்­டு­ரையின் தமி­ழாக்கம்.

பெப்­ர­வரி 25 அன்று வெளி­யி­டப்­பட்ட 2216/38 ஆம் இலக்க வர்த்­த­மானி கொவிட் 19 தொற்­றினால் இறந்­த­வர்­களின் உடல்­களை கட்­டா­ய­மாக தகனம் செய்யும் கொள்­கையை இரத்துச் செய்­த­துடன் அடக்கம் செய்­யவும் அனு­ம­தித்­தது. மார்ச் 2021 இன் தொடக்­கத்தில், கொவிட்-19 தொற்­றினால் இறந்­த­வர்கள் ஓட்­ட­மா­வடி மஜ்மா நகரில் அடக்கம் செய்­யப்­பட்­டனர். அன்­றி­லி­ருந்து, கொவிட்-19 தொற்­றினால் இறந்த ஒவ்­வொ­ரு­வரும், மஜ்மா நக­ருக்கு கொண்டு செல்­லப்­ப­டு­கி­றார்கள், அங்கு சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. அப் பகு­தியில் வாழும் மக்கள் வாழ்­வா­தாரம், விவ­சாயம் மற்றும் குடி­யி­ருப்பு நோக்­கங்­க­ளுக்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட நிலங்­களை தாமாக முன்­வந்து சட­லங்­களை அடக்கம் செய்­வ­தற்­காக வழங்­கினர். தற்­போது மஜ்மா நகரில் 3200 க்கும் மேற்­பட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்­டுள்­ளன, மேலும் 300 உடல்­களை மட்­டுமே அடக்கம் செய்ய இங்கு இட­முள்­ளது என அப் பகுதி அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர். தொடர்ந்தும் இங்கு அடக்கம் செய்­வ­தாயின் இதற்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள காணியின் அளவு அதி­க­ரிக்­கப்­பட வேண்டும்.

“ஆரம்­பத்தில், தற்­போது சட­லங்கள் அடக்கம் செய்­யப்­படும் காணிக்கு அருகே உள்ள ஒரு பொது நிலத்­தையே நாங்கள் அதி­கா­ரி­க­ளுக்குக் காட்­டினோம், ஆனால் அதி­கா­ரிகள் கொவிட்-19 சட­லங்­களை அங்கு அடக்கம் செய்ய விரும்­ப­வில்லை, ஏனெனில் அது ஒரு சாய்வில் அமைந்­துள்­ளது, அதற்குப் பதி­லாக எம்.எஸ். ஜௌபர் என்­ப­வ­ருக்குச் சொந்­த­மான நிலத்­தையே தெரிவு செய்­த­னர்”­என்று மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்திச் சங்­கத்தின் தலைவர் ஏ.எல். சமீம் கூறினார். ஜௌபர் உட­ன­டி­யாக தனது 3 ஏக்கர் நிலத்தை கொவிட்-19 சட­லங்­களை அடக்கும் நோக்­கங்­க­ளுக்­காக வழங்க சம்­ம­தித்தார்.

ஜௌப­ருடன் மேலும் 13 காணி உரி­மை­யா­ளர்­களும் அரச தேவை­க­ளுக்­காக தமது காணி­களை விட்­டுக்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. அவர்­க­ளி­ட­மி­ருந்து 21.5 ஏக்கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குடி­யி­ருப்­பா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர். கொவிட்-19 மைய­வா­டிக்­காக 10 ஏக்கர் ஒதுக்­கப்­பட்­டது, மேலும் 11.5 ஏக்கர் அப் பகு­தியில் வாழும் மக்­க­ளுக்கு பொது மயானம் ஒன்று இல்­லா­ததால் பொது மயா­ன­மாக பயன்­ப­டுத்த ஒதுக்­கப்­பட்­டது. “எங்கள் நிலங்­களை விட்டுக் கொடுப்­பதில் நாங்கள் மகிழ்ச்­சி­ய­டை­கிறோம், ஆனால் எங்­க­ளுக்கு ஒரு மாற்று தீர்வு தேவை, ஏனென்றால் எங்கள் வாழ்­வா­தா­ரத்தை மேற்­கொள்­வ­தற்கும் வாழ்­வ­தற்கும் எங்­க­ளுக்கு நிலங்கள் தேவை” என்று ஜௌபர் கூறினார்.

“எனக்கு சொந்­த­மான ஒரே நிலம் அதுதான், நான் அங்கு எனது வீட்டைக் கட்­டினேன், ஆனால் அது பாது­காப்பு வல­யத்தில் இருந்­ததால் அதைக் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. மஜ்மா நகரில் கொவிட் மைய­வாடி அமைக்­கப்­பட்­டதால் இன்று எனது வீட்­டையும் நிலத்­தையும் இழந்­து­விட்டேன்” என்று ஹுசைன்
கவ­லை­யுடன் கூறினார்.

எச்.எம். ஹுசைன், போரினால் இடம்­பெ­யர்ந்து மஜ்மா நகரில் மீள்­கு­டி­யேறி ஒரு தசாப்­தத்­திற்கும் மேலாக இந்த நிலத்தில் வசித்து வந்தார், ஆனால் கொவிட்-19 மைய­வா­டியைச் சுற்­றி­யுள்ள பாது­காப்பு வல­யத்தில் அவ­ரது காணி இருந்­ததால் அதனை அவர் விட்­டுக்­கொ­டுக்க வேண்­டி­யி­ருந்­தது. ஹுசை­னுக்கு அவர் இழந்த நிலத்­திற்­காக இழப்­பீடு வழங்­கப்­ப­ட­வில்லை, தற்­போது அவ­ருக்கு குடி­யி­ருக்க இடமும் இல்லை.
“எனக்கு சொந்­த­மான ஒரே நிலம் அதுதான், நான் அங்கு எனது வீட்டைக் கட்­டினேன், ஆனால் அது பாது­காப்பு வல­யத்தில் இருந்­ததால் அதைக் கொடுக்க வேண்­டி­யி­ருந்­தது. மஜ்மா நகரில் கொவிட் மைய­வாடி அமைக்­கப்­பட்­டதால் இன்று எனது வீட்­டையும் நிலத்­தையும் இழந்­து­விட்டேன்” என்று ஹுசைன் கவ­லை­யுடன் கூறினார்.

சனத்­தொகை அடர்த்­தி­மிக்க பிர­தேசம்
விவ­சாய மற்றும் குடி­யி­ருப்பு நிலங்­களை இழப்­பது மாத்­திரம் இங்கு பிரச்­சினை இல்லை என்று சமீம் குறிப்­பி­டு­கிறார். ஓட்­ட­மா­வடி ஒரு சிறிய நிலப்­ப­ரப்பைக் கொண்­டுள்­ளது, இது மிக அதிக சனத்­தொகை அடர்த்­தியைக் கொண்­டுள்­ளது, இதன் விளை­வாக சுகா­தா­ர­மற்ற வாழ்க்கை நிலை­மை­களே இங்கு உள்­ளன. “மக்கள் வாழ்­வ­தற்கு குறை­வான நிலப்­ப­ரப்பு இருப்­பதால் நிலங்­களின் இழப்பு மக்கள் தொகை அடர்த்­தியை அதி­க­ரிக்கச் செய்­துள்­ளது” என்றும் சமீம் சுட்­டிக்­காட்­டினார்.

தற்­போ­தைய மக்­கள்­தொ­கைக்கே இப்­ப­கு­தியில் நிலப்­ப­ரப்பு குறை­வாக இருப்­பதால், எதிர்­கால சந்­த­தி­யினர் குறித்து இங்கு வாழும் மக்கள் கவ­லைப்­ப­டு­கின்­றனர். பிர­தேச செய­ல­கத்­தி­டமும் இம் மக்கள் காணி­களை கோரி­யி­ருந்­தனர். ஆனால் இந்த குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு வழங்க அரச காணி இல்லை என செய­லகம் தெரி­வித்­தி­ருந்­தது. 90 வீதமான குடி­யி­ருப்­பா­ளர்கள் போரினால் இடம்­பெ­யர்ந்து ஓட்­ட­மா­வ­டியில் மீள்­கு­டி­யேற்­றப்­பட்­ட­வர்கள் என்றும் இவர்­க­ளது காணி­க­ளுக்­கான அனு­ம­திப்­பத்­தி­ரங்கள் வழங்­கப்­ப­ட­வில்லை எனவும் சமீம் தெரி­வித்தார். “பல ஆண்­டு­க­ளாக நாங்கள் பல அரச அதி­கா­ரி­க­ளிடம் கதைத்தோம். ஆனால் எங்­க­ளுக்கு இன்னும் காணி அனு­ம­திப்­பத்­திரம் கிடைக்­க­வில்லை,” என்று அவர் கூறினார்.

அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அடக்கம் செய்யும் உரிமை
தமக்கு இவ்­வா­றான காணிப் பிரச்­சி­னைகள் உள்ள நிலையில் இங்கு வாழும் மக்கள் தங்கள் நிலங்­களை ஏன் கொடுத்­தார்கள் எனக் கேட்­ட­போது, கொவிட்-19 தொற்­றினால் மர­ணித்­த­வர்­களை அடக்கம் செய்யும் செயல்­முறை மேலும் தாம­த­மா­காமல் இருக்­கவே தான் உட­ன­டி­யாக நிலத்தை வழங்­கி­ய­தாக ஜௌபர் பதி­ல­ளித்தார்.

“நானும் ஒரு முஸ்­லிம்தான். நம் மதத்­திலும் பிற மதங்­க­ளிலும் இறந்­த­வர்­களை அடக்கம் செய்­வது எவ்­வ­ளவு முக்­கியம் என்­பதை நான் அறிவேன். நீண்ட தொடர்ச்­சி­யான முயற்­சியின் பின்னர், கொவிட் 19 தொற்­றுக்­குள்­ளான எங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான உரி­மையை இலங்­கை­யர்­க­ளா­கிய நாங்கள் பெற்­றுள்ளோம், மேலும் எந்­த­வொரு சக இலங்­கை­ய­ருக்கும் வேத­னையை ஏற்­ப­டுத்தும் வகையில், அடக்கம் செய்யும் உரி­மையை தாம­தப்­ப­டுத்த நான் விரும்­ப­வில்லை” என்றும் அவர் குறிப்­பிட்டார்.
ஓட்­ட­மா­வ­டியில் உள்ள மஜ்மா நகரை கொவிட்-19 இறந்­த­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­கான பிர­தே­ச­மாக அதி­கா­ரிகள் தெரிவு செய்­வ­தற்கு முன்னர், தலை­மன்னார் மற்றும் இர­ணை­தீவு பிர­தே­சங்­க­ளையே அதி­கா­ரிகள் தெரிவு செய்­தனர். எனினும் அங்கு வாழும் மக்­களால் இதற்கு எதிர்ப்புத் தெரி­விக்­கப்­பட்­டது. என­வேதான், மஜ்மா நகரில் வாழும் மக்கள் அடக்கம் செய்யும் செயல்­மு­றையை மேலும் தாம­தப்­ப­டுத்த விரும்­ப­வில்லை. இத­னால்தான் இருக்­கின்ற நிலப்­ப­ரப்பு தங்­க­ளது தேவை­க­ளுக்கு போது­மா­ன­தாக இல்­லா­விட்­டாலும் கூட அடக்கம் செய்­வ­தற்­கான நிலத்தை வழங்க ஒப்புக் கொண்­டனர் என்றும் அவர் மேலும் குறிப்­பிட்டார்.

“எங்கள் காணி­களை விட்டுக் கொடுப்­பதில் எமக்கு எந்தப் பிரச்­சி­னையும் இல்லை, ஆனால் நாங்கள் இழந்த காணி­க­ளுக்கு தீர்வு தர வேண்டும். எமக்கு வாழ, விவ­சாயம் செய்ய, வாழ்­வா­தா­ரங்­களை முன்­னெ­டுக்க நிலங்கள் தேவை. அத­னால்தான் இந்த நோக்­கங்­க­ளுக்­காக எங்­க­ளுக்கு நிலங்­களை வழங்­கு­மாறு நாங்கள் அர­சிடம் கோரு­கிறோம்,” என மஜ்மா நகர் கிராம அபி­வி­ருத்திச் சங்க தலைவர் சமீம் கூறினார்.

ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் அடக்கம் செய்­வ­தற்கு கோரிக்கை
ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் கொவிட்-19 மைய­வா­டிகள் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என இப் பகுதி மக்கள் கருத்து தெரி­வித்­தனர். கடந்த 8 மாதங்­க­ளாக கொவிட்-19 சட­லங்­களை அடக்கம் செய்யும் பணிகள் நடை­பெற்று வரு­வ­தா­கவும், அடக்கம் செய்யும் பணியை மேற்­கொண்டு வரு­ப­வர்கள் கூட கொவிட்-19 தொற்றால் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர்கள் கருத்து தெரி­வித்­தனர்.

“உல­கில், கொவிட்-19 இனால் இறந்­த­வர்­களை பொது மயா­னங்­க­ளி­லேயே அடக்கம் செய்­கி­றார்கள். ஆனால் இலங்­கையில் மட்­டுமே இதற்­கென குறிப்­பிட்ட ஒரு பகுதி உள்­ளது. ஒவ்­வொரு மாகா­ணத்­திலும் கொவிட்-19 இனால் இறந்­த­வர்­களை அந்த மாகா­ணத்­தி­லேயே அடக்கம் செய்ய இட­ம­ளித்தால் அது அனை­வ­ருக்கும் எளி­தாக இருக்கும்” என்றும் சமீம் குறிப்­பிட்டார்.

இறந்­த­வரின் குடும்­பத்­தினர் தமது அன்­புக்­கு­ரி­ய­வர்­களை அடக்கம் செய்­வ­தற்­காக நாட்டின் பல்­வேறு பகு­தி­களில் இருந்து ஓட்­ட­மா­வ­டிக்கு நீண்ட தூரம் பய­ணித்து வர­வேண்­டி­யுள்­ள­தையும் அவர் சுட்­டிக்­காட்­டினார். குடும்­பத்­தி­னரால் அடக்கம் செய்யும் நட­வ­டிக்­கை­களில் பங்­கெ­டுக்க முடி­யாது. சட­லத்தை பார்­வை­யிடக் கூட முடி­யாது. “குடும்பம் ஏற்­க­னவே துக்­கத்தில் உள்­ளது, அவர்கள் இங்கு ஒரு நீண்ட கடி­ன­மான பய­ணத்தை மேற்­கொள்ள வேண்டும். அடக்கம் செய்­யப்­பட்ட இடம் குடும்பம் வசிக்கும் இடத்­திற்கு அருகில் இருந்தால், அவர்கள் தங்கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களின் அடக்­கஸ்­த­லங்­களை மீண்டும் பார்­வை­யி­டலாம். அது வெகு தொலைவில் இருக்­கும்­போது, மீண்டும் அங்கு சென்று பார்ப்­பது கூட கடி­ன­மா­னது,” என்று அவர் தெரி­வித்தார். மேலும், மஜ்மா நகரில் இதற்­கென ஒதுக்­கப்­பட்ட இடத்தில் மேலும் 300 சட­லங்­களை மட்­டுமே அடக்கம் செய்ய இட­முள்­ளது. என்றும், அந்தப் பகு­தியை மேலும் விரி­வு­ப­டுத்­தினால் அதி­க­மான குடி­யி­ருப்­பா­ளர்கள் தங்கள் நிலங்­களை இழக்க நேரிடும். சனத்தொகை அடர்த்தி மேலும் அதி­க­ரிக்கும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

மஜ்மா நகரில் முஸ்­லிம்கள் மாத்­தி­ர­மன்றி பல்­வேறு மதங்­களைச் சேர்ந்­த­வர்கள் அடக்கம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக சமீம் மற்றும் ஜௌபர் ஆகியோர் கூறினர். உள்ளூர் மக்கள் மற்றும் இரா­ணு­வத்தின் உத­வி­யுடன் சட­லங்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. அவர்கள் சட­லங்­க­ளுக்குத் தேவை­யான கிரி­யை­களை மேற்­கொள்­வார்கள். அடக்கம் செய்யும் இடத்­திற்குள் பொது­மக்கள் நுழைய முடி­யாது எனவும், பிர­தேச சபை­யினால் வழங்­கப்­படும் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் மட்­டுமே அந்த இடத்­திற்குச் செல்ல முடியும் எனவும் அவர்கள் தெரி­வித்­தனர்.

அர­சியல் நிலை­வரம்
இப்­பி­ர­தே­சத்தைச் சேர்ந்த சில அர­சி­யல்­வா­திகள் தமது வாக்கு வங்­கியை பலப்­ப­டுத்­து­வ­தற்­காக கொவிட் ஜனா­ஸாக்­களை அடக்கம் செய்யும் சூழலைப் பயன்­ப­டுத்திக் கொள்­வ­தாக அப்­ப­குதி மக்கள் கூறு­கின்­றனர். “அர­சி­யல்­வா­திகள் மஜ்மா நகரில் மாத்­தி­ரமே கொவிட் 19 ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்ய விரும்­பு­கி­றார்கள், இதனால் அவர்கள் கொவிட்-19 ஜனாஸா அடக்கத்தை தாமே முன்னெடுத்ததாக கூறி அதிக வாக்குகளைப் பெற முடியும்” என்று சமீம் தெரிவித்தார். கொவிட் -19 தொற்றினால் இறந்தவர்களை அடக்கம் செய்வதை உறுதி செய்வதிலும், அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குவதிலும் தாங்களே முக்கிய பங்காற்றியதாக குறிப்பிட்ட சில அரசியல்வாதிகள் இதற்கு முன்னரே உரிமைகோரியுள்ளதையும் செய்திகளில் காண முடிகிறது.

“இதனை மக்கள் தாமாகவே முன்வந்து செய்கின்றனர். அரசியல்வாதிகள் எவரும் எதுவுமே செய்யவில்லை. அனைத்து இலங்கையர்களுக்கும் அடக்கம் செய்வதற்கான அவர்களின் கண்ணியமான உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காகவே நாங்கள் எங்கள் நிலங்களை விட்டுக் கொடுத்தோம், ஆனால் இப்போது நாங்கள் காணிகளை இழந்துள்ளோம். எங்களிடம் மேலும் நிலம் இருந்திருந்தால் இன்னும் அதிகமான நிலங்களைக் கொடுத்திருப்போம், ஆனால் இதற்கு மேலும் கொடுப்பதற்கு எங்களிடம் காணிகள் இல்லை”என்றும் ஜௌபர் கூறினார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.