உள்ளூராட்சி மன்றங்களில் தோற்கும் பட்ஜட் சொல்லும் செய்தி என்ன?

0 424

எஸ்.என்.எம்.சுஹைல்

பொது­ஜன பெர­மு­னவின் அதி­கா­ரத்­தி­லுள்ள ஜா எல நகர சபை மற்றும் லக்­கல பிர­தேச சபையின் வரவு செலவு திட்­டங்கள் தோல்­வி­ய­டைந்­துள்­ளன. இதனை அர­சாங்­கத்தின் வீழ்ச்­சிக்­கான ஆரம்பப் புள்­ளி­யாக சிலர் அடை­யா­ளப்­ப­டுத்­து­கின்­றனர்.
இது­போக, கிண்­ணியா நகர சபை, கிண்­ணியா பிர­தேச சபை மற்றும் மன்னார் பிர­தேச சபை ஆகி­ய­வற்றின் 2022 ஆம் ஆண்­டிற்­கான வரவு செல­வு­திட்­டங்­களும் தேல்­வி­ய­டைந்­துள்­ளன.

கிண்­ணியா நகர சபை ஐக்­கிய தேசியக் கட்­சியின் கட்­டுப்­பாட்­டிலும் கிண்­ணியா பிர­தேச சபை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வசமும் மன்னார் பிர­தேச சபை அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியின் அதி­கா­ரத்­திலும் இருந்­தன. அனைத்து சபை­க­ளிலும் கூட்­டாட்­சியே இடம்­பெற்­றன.

கிண்­ணியா நகர சபையில் ஐக்­கிய தேசியக் கட்­சியும் முஸ்லிம் காங்­கி­ரஸும் கூட்டுச் சேர்ந்து ஆட்­சி­ய­மைத்­தி­ருந்­தன. கிண்­ணியா பிர­தேச சபையில் முஸ்லிம் காங்­கிரஸ் அதி­கா­ரத்தைப் பெற ஐக்­கிய தேசியக் கட்சி ஒத்­து­ழைப்பு வழங்­கி­யது.

அத்­தோடு, மன்னார் பிர­தேச சபையை ஐக்­கிய தேசியக் கட்சி சார்பில் போட்­டி­யிட்ட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், தமிழர் விடு­தலைக் கூட்­டணி உள்­ளிட்ட கட்­சி­களின் ஆத­ர­வைப்­பெற்று அதி­கா­ரத்தை பெற்­றது.

இத­னி­டையே, கடந்த திங்­க­ளன்று மன்னார் பிர­தேச சபையின் 2022 ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

பிர­தேச சபையின் தவி­சாளர் (அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பினர்) எஸ்.எச்.எம். முஜாஹிர் தலை­மையில் முற்­பகல் அமர்வு ஆரம்­பிக்­கப்­பட்ட போது, வரவு செலவுத் திட்டம் சமர்ப்­பிக்­கப்­பட்­டது. அமர்வில் 21 உறுப்­பி­னர்­களும் கலந்­து­கொண்­டனர்.

வரவு செலவுத் திட்ட வாக்­கெ­டுப்பின் போது, தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் 07 உறுப்­பி­னர்­களும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸை சேர்ந்த 2 உறுப்­பி­னர்­களும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவை சேர்ந்த தலா ஒரு­வ­ரு­மாக மொத்தம் 11 உறுப்­பி­னர்கள் எதி­ராக வாக்­க­ளித்­தனர். ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிட்ட அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் கட்­சியைச் சார்ந்த 7 உறுப்­பி­னர்­களும் தமிழர் விடு­த­லைக்­கூட்­டணி உறுப்­பி­னரும் ஸ்ரீ லங்கா சுதந்­தி­ரக்­கட்சி உறுப்­பினர் ஒரு­வரும் ஈழ மக்கள் ஜன­நா­ய­கக்­கட்சி உறுப்­பினர் ஒருவர் அடங்­க­லாக 10 பேர் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

அதற்­க­மைய, ஒரு மேல­திக வாக்­கினால் மன்னார் பிர­தேச சபைக்­கான 2022 ஆம் ஆண்­டுக்­கு­ரிய வரவு செலவுத் திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இது இவ்­வா­றி­ருக்க, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் வச­முள்ள திரு­கோ­ண­மலை – கிண்­ணியா பிர­தேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.
கிண்­ணியா பிர­தேச சபையின் தவி­சாளர் கே.எம்.நிஹார் தலை­மையில் சபை அமர்வு கடந்த வெள்ளிக்­கி­ழமை நடை­பெற்­றது.

கிண்­ணியா பிர­தேச சபையில் 16 உறுப்­பி­னர்­களில் 15 பேர் மாத்­தி­ரமே அன்­றைய அமர்வில் கலந்­து­கொண்­டனர்.

2022 ஆம் ஆண்­டிற்­கான வரவு செலவுத் திட்­டத்­திற்­கான வாக்­கெ­டுப்பு கடந்த 24 ஆம் திகதி முற்­பகல் 9.30 க்கு ஆரம்­ப­மா­னது. இதன்­போது, வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக 7 உறுப்­பி­னர்கள் வாக்­க­ளித்­த­துடன், எதி­ராக 8 பேர் வாக்­க­ளித்­துள்­ளனர்.
அதற்­க­மைய, மேல­திக வாக்­கு­களால் 2022 ஆம் ஆண்­டிற்­கான கிண்­ணியா பிர­தேச சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­டுள்­ளது.

இத­னி­டையே, ஐக்­கிய தேசியக் கட்­சியின் கட்­டுப்­பாட்­டி­லுள்ள கிண்­ணியா நக­ர­சபை வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு 3 மேல­திக வாக்­கு­களால் நேற்­று­முன்­தினம் தோல்வி அடைந்­துள்­ளது.

இரண்­டா­வது வாசிப்­பிற்­கான அமர்வு நேற்­று­முன்­தினம் நகர பிதா எஸ்.எச்.எம்.நளீம் தலை­மையில் இடம்­பெற்­றது.

13 பேர் கொண்ட கிண்­ணியா நக­ர­ச­பையின் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக 5 பேரும் எதி­ராக 8 பேரும் வாக்­க­ளித்­தனர்.
முஸ்லிம் காங்­கி­ரஸின் ஒரு­வரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் இரு­வரும் ஐக்­கிய தேசியக் கட்­சியின் இரண்டு உறுப்­பி­னர்­களும் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­தனர்.

சுதந்­திரக் கட்­சியின் இரு­வரும் அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் இரு­வரும் முஸ்லிம் காங்­கி­ரஸின் உறுப்­பி­னர்கள் இரு­வரும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஒரு­வரும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி சார்­பாக ஒரு­வரும் வரவு செலவுத் திட்­டத்­திற்கு எதி­ராக வாக்­க­ளித்­தனர்.

கிண்­ணியா பிர­தேச சபை மற்றும் நகர சபை அதி­கா­ரங்கள் முஸ்லிம் காங்­கிரஸ், ஐக்­கிய தேசியக் கட்சி கூட்டில் இருக்­கி­றது. அதா­வது, பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான எம்.எஸ்.தௌபீக் மற்றும் இம்ரான் மஹ்ரூப் என்­போரின் அதி­காரத் தள­மாக இதனை பார்க்க முடியும். மு.கா.விலி­ருந்து எம்.எஸ்.தௌபீக் நீக்­கப்­பட்­டி­ருக்­கலாம், இம்ரான் மஹ்ரூப் ஐக்­கிய மக்கள் சக்­தி­யுடன் இணைந்­தி­ருக்­கலாம், என்­றாலும் அவர்­க­ளுக்­கி­டை­யே­யான அர­சியல் போட்­டி­யையே இங்கு நோக்க முடி­கி­றது.

இங்கு ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்கள் இம்­ரா­னுக்கு சாத­க­மாக செயற்­ப­டு­கின்­றார்­களா இல்­லையா என்­பது வேறு விடயம், ஆனால், முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பி­னர்­களும் இரண்­டாகப் பிரிந்து வரவு செலவு திட்­டத்­திற்கு ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­ற­மையை அவ­தா­னிக்க முடி­கின்­றது.

அக்­கட்­சி­களின் தலை­மைத்­துவம் என்ன செய்­கின்­றது? பிராந்­திய அர­சி­யலில் கட்சி என்ன தீர்­மா­னங்­களை எடுக்­கின்­றது என்ற கேள்­விகள் எழு­கின்­றன.

இவ்­வாறே, மன்னார் பிர­தேச சபை­யிலும் முஸ்லிம் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­ற­மையை பார்க்­கின்றோம். இது­த­விர மேலும் பல உள்­ளு­ராட்சி மன்­றங்­களின் வரவு செலவு திட்­டங்கள் நிறை­வேற்­றப்­பட்­டாலும் அதில் முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் உறுப்­பி­னர்கள் வெவ்­வே­றான நிலைப்­பாட்டை எடுத்­துள்­ளனர்.

இது இவ்­வா­றி­ருக்க, நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி உறுப்­பி­னர்­களும் ஆத­ர­வா­கவும் எதி­ரா­கவும் வாக்­க­ளித்­தி­ருக்­கின்­ற­மை­யையும் காண்­கிறோம்.
பாரா­ளு­மன்ற வரவு செலவு திட்­டத்­தின்­போது, மிகவும் ஒற்றுமையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களும் இணைந்து பொதுஜன முன்னணி அரசாங்கத்திற்கு முண்டியடித்துக்கொண்டு கட்சியின் தீர்மானத்தையும் மீறி ஆதரவு தெரிவித்தனர். ஆனால், பிரதேச சபையின் பட்ஜட்டுகளை தோல்வியுறச் செய்வதற்கு ஒரு கட்சியினரே இரண்டாக பிரிந்து செயற்பட்டுள்ளனர். இதன் மூலம் பாராளுமன்றில் ஒரு நாடகம் அரங்கேற பிரதேச மட்டத்தில் இன்னொரு அரசியல் கூத்து இடம்பெறுகின்றது. இது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். முஸ்லிம் கட்சிகளின் இவ்வாறான கொள் கைகளும் செயற்பாடும் மக்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.