தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கிடையே பொது விடயங்களில் இணக்கப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன்

0 314

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
சிறு­பான்மை மக்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்வு காணும் விட­யத்தில் தமிழ் பேசும் கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான பேச்­சு­வார்த்­தையில் தமிழ்,முஸ்லிம் கட்­சி­க­ளுக்­கி­டையில் பொது­வான பிரச்­சி­னை­க­ளிலே இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

தீர்வு விட­யத்தில் ஒவ்வோர் கட்­சிக்கும் சமூகம் சார்ந்த நிலைப்­பாடு இருக்­கி­றது. எந்­தவோர் சமூ­கமும் பாதிக்­கப்­ப­டாத வகையில் தீர்வு காணப்­ப­ட­வேண்டும் என்­பதால் தொடர்ந்தும் பேச்­சு­வார்த்தை நடை­பெ­று­கி­றது. அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் இது தொடர்­பான எந்த ஆவ­ணத்­திலும் கைச்­சாத்­தி­ட­வில்லை என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

13 ஆவது திருத்த சட்டம் உட்­பட இந்­திய, இலங்கை ஒப்­பந்­தத்­தினை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்­பதை இலங்கை அர­சாங்­கத்­திடம் வலி­யு­றுத்­து­மாறு இந்­திய பிர­தமர் நரேந்­திர மோடியைக் கோரும்­கூட்டு ஆவ­ண­மொன்­றினை தயா­ரிப்­ப­தற்­கான தமிழ் பேசும் கட்­சி­களின் பேச்­சு­வார்த்தை தொடர்பில் வின­வி­ய­போதே ரிசாத் பதி­யுதீன் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரி­விக்­கையில் தமிழ், முஸ்லிம் மக்­க­ளி­னது காணிப்­பி­ரச்­சினை, காணா­மற்­போனோர் பிரச்­சினை, நீண்­ட­காலம் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ளோர் விவ­காரம், பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்டோர் விவ­காரம், ஒரே நாடு ஒரே சட்டம் விவ­காரம் மாகாண சபைத் தேர்­தலை உரிய காலத்தில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை, மாகாண சபை­க­ளுக்கு உரிய அதி­கா­ரங்கள் வழங்­கப்­ப­ட­வேண்டும் என்ற கோரிக்கை, தமிழ் முஸ்லிம் பகு­தி­களில் சிங்­கள குடி­யேற்றம், வன இலா­காவின் கெடு­பி­டிகள் போன்ற விவ­கா­ரங்­களில் தமிழ் பேசும் கட்­சி­க­ளுக்­கி­டையே உடன்­பாடு எட்­டப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான பொது விவ­கா­ரங்­களில் எங்­க­ளுக்­கி­டையில் மாற்­றுக்­க­ருத்து இல்லை. ஆனால் தீர்வு விட­யத்தில் ஒவ்வோர் கட்­சிக்கும் தனித்­த­னி­யான நிலைப்­பாடு இருக்­கி­றது. அதனால் எந்த சமூ­கமும் பாதிப்­புக்­குள்­ளா­காத வகையில் தீர்­வினை வடி­வ­மைப்­ப­தற்­காக தொடர்ந்தும் பேச்சு வார்த்தை நடத்தி வரு­கிறோம் என்றார்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு குளோபல் டவர்ஸ் ஹோட்டலில் நடைபெற்ற பேச்சு வார்த்தையின்போது இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கையொப்பமிடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.