பஞ்சம் தலைவிரித்தாட இடமளிக்கக் கூடாது

0 366

அர­சாங்­கத்தின் தவ­றான பொரு­ளா­தார முகா­மைத்­துவம் கார­ண­மாக நாடு பல்­வேறு சவால்­களை எதிர்­கொண்­டுள்­ளது. இதனால் நாட்டு மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். இலங்கை அடுத்த வரு­டத்தில் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலைமை ஏற்­ப­டு­மென மத்­திய வங்­கியின் முன்னாள் பிரதி தலைவர் கலா­நிதி டப்ள்யூ.ஏ.விஜே­வர்­தன எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

எரி­பொ­ருட்­களின் விலை­களின் அதி­க­ரிப்பு, உணவுப் பொருட்­களின் தட்­டுப்­பாடு, விலை­யேற்றம், சமையல் எரி­வா­யுவின் தட்­டுப்­பாடு மற்றும் விலை அதி­க­ரிப்­பினால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பாதிக்­கப்­பட்­டுள்­ளது. சமையல் எரி­வாயு தட்­டுப்­பாடு கார­ண­மாக நாட்டில் ஆயிரக் கணக்­கான சிறிய உண­வ­கங்கள் மூடப்­பட்­டுள்­ளன. இதனால் பலரின் வாழ்­வா­தா­ரங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. சந்­தையில் பால்­மா­வுக்­கான தட்­டுப்­பாடு தொடர்ந்தும் நில­வு­கி­றது.

இதே­வேளை எரி­பொ­ருட்­களின் விலை­யேற்­றத்தின் கார­ண­மாக உணவுப் பொருட்கள் உட்­பட அனைத்துப் பொருட்­க­ளி­னதும் விலைகள் மற்றும் முச்­சக்­க­ர­வண்டி பய­ணத்­துக்­காக கட்­டணம் முதல் தனியார் வைத்­தி­ய­சா­லை­களின் சேவைக்­கான கட்­ட­ணங்கள் வரை உச்ச நிலைக்குச் சென்­றுள்­ளன. அடுத்தவாரம் முதல் பஸ் போக்குவரத்து கட்டணமும் 17வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது.

சமையல் எரி­வா­யுவின் சிலிண்­டர்­களில் ஏற்­படும் வாயுக் கசி­வினால் நாடு­த­ழு­விய ரீதியில் நூற்­றுக்­க­ணக்­கான வெடிப்புச் சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. நூற்­றுக்­க­ணக்­கான மக்கள் இதனால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அர­சாங்­கமோ சம்­பந்­தப்­பட்ட நிறு­வ­னமோ இது­வரை நஷ்ட ஈடு வழங்­க­வில்லை. அநேகர் எரி­வாயு சிலிண்டர் கொள்­வ­னவைத் தவிர்த்து மண்­ணெண்ணைய் அல்­லது விறகு அடுப்­பு­களைப் பயன்­ப­டுத்தத் தொடங்­கி­யுள்­ளனர். எரி­பொருள் நிரப்பு நிலை­யங்­களில் மண்­ணெண்­ணைய்க்­காக மக்கள் நீண்ட கியூ­வ­ரி­சையில் காத்­தி­ருப்­பதை காண முடி­கி­றது.

அர­சாங்கம் பெரும்­போக விவ­சாய செய்­கைக்கு முன்­பாக இர­சா­யன உர பாவ­னைக்கு தடை­வி­தித்து சேதன பச­ளையை பயன்­ப­டுத்­து­மாறு உத்­த­ர­விட்­ட­தை­ய­டுத்து விவ­சா­யிகள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­னார்கள். விவ­சா­யத்­துக்கு உரம் வழங்­கு­மாறு அவர்கள் தொடர்­போ­ராட்­டங்­களை நடத்தி வரு­கி­றார்கள். அர­சாங்கம் மாற்­றுத்­திட்­ட­மொன்­றினை வகுக்­காது திடீ­ரென இர­சா­யன உரத்­துக்கு தடை­வி­தித்­த­மையே இதற்குக் காரணம். இதனால் நெல் உற்­பத்­தியும் பயிர்ச் செய்­கையும் பாதிப்­புக்­குள்­ளா­கின. இந்­நி­லையில் விவ­சா­யி­க­ளுக்கு சேதனப் பச­ளையை விநி­யோ­கிப்­ப­தாக அ­ரசாங்கம் உறு­தி­ய­ளித்து இந்­தி­யாவில் இருந்து திரவ நைட்­ரஜன் உரத்­தினை பிளாஸ்டிக் கொள்­க­லன்­களில் இறக்­கு­ம­தி­செய்து சில பகு­தி­க­ளுக்கு விநி­யோ­கித்­தது, இத்­திட்டம் வெற்­றி­ய­ளிக்­க­வில்லை. நெற்­ப­யிர்கள் இவ்­வு­ரத்­தினால் பயன்­பெ­ற­வில்லை. இதனால் பெரும்­பா­லான விவ­சா­யிகள் பெரும்­போக விவ­சாய செய்­கை­யி­லி­ருந்தும் தவிர்ந்­தி­ருந்­தனர்

போதி­ய­ளவு மரக்­க­றிகள் பயி­ரப்­ப­டாமை கார­ண­மாக மரக்­க­றியின் விலை வான­ளாவ உயர்ந்­துள்­ளது. எது இல்­லா­வி­டினும் மரக்­கறிச் சாப்­பாட்­டு­ட­னா­வது வயிற்றுப் பசியைப் போக்­கிய மக்கள் இன்று அதனைக் கூட கொள்­வ­னவு செய்ய முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ளனர்.

மறு­புறம் நாட்டில் நிலவும் டொலர் பற்­றாக்­குறை கார­ண­மாக அத்­தி­யா­வ­சிய உண­வுப்­பொ­ருட்கள் உட்­பட ஏனைய இறக்­கு­மதிப் பொருட்கள் தாங்­கிய 1500 க்கும் மேற்­பட்ட கொள்­க­லன்­களை துறை­மு­கத்­தி­லி­ருந்தும் வெறி­யேற்ற முடி­யாத நிலையில் அங்­கேயே தேங்கிக் கிடக்­கின்­றன.

கொரோனா அச்­சு­றுத்­த­லை­ய­டுத்து வெளி­நா­டு­களில் கட­மை­யாற்­றிய சுமார் 2 இலட்சம் இலங்­கை­யர்கள் நாடு திரும்­பி­யுள்­ளார்கள். இதனால் இலங்­கைக்கு கிடைக்கப் பெறும் வெளி­நாட்டுச் செலா­வ­ணி­யிலும் பாரிய சரிவு ஏற்­பட்­டுள்­ளது.

நாட்டை இந்த ஆபத்­தான நிலை­யி­லி­ருந்து மீட்­டெ­டுப்­பது ஆட்­சி­யா­ளர்­களின் பொறுப்­பாகும். இவ்­வி­வ­கா­ரத்தில் அரசு துரி­த­மாக செயற்­பட வேண்டும். துர­திஷ்­ட­வ­ச­மாக நாட்டின் பிர­தமர், நிதி­ய­மைச்சர், அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பலரும் வெளி­நா­டு­க­ளுக்குத் தேவை­யற்ற பய­ணங்­களை மேற்­கொள்­கின்­றனர். செல­வு­களைக் கட்­டுப்­ப­டுத்த வேண்­டிய இக் கால­கட்­டத்தில் இவ்­வா­றான பய­ணங்கள் தவிர்க்­கப்­பட வேண்டும்.

எதிர்­வரும் ஏப்­ரலில் நாட்டில் உணவுப் பஞ்­ச­மொன்று ஏற்­ப­டு­மென முன்னாள் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்வு கூறி­யுள்ளார். நாட்டை ஆபத்­தி­லி­ருந்து மீட்க சர்­வ­தேச நாணய நிதி­யத்தை நாடு­மாறும் இன்றேல் மாற்று தீர்­வொன்­றுக்குச் செல்­லு­மாறும் அவர் கோரி­யுள்ளார்.

இதே­வேளை நாட்டை மீட்­டெ­டுக்க புதிய தொலை­நோக்கு பார்வை கொண்ட புதிய ஆட்­சி­யொன்­றினை நிறுவ வேண்டும் என முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கூறி­யுள்ளார்.

அர­சாங்­கத்தை ஆளும் தரப்­பி­னரே விமர்­சிக்­கு­ம­ள­வுக்கு ஆட்சி பீடம் நகைப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளது. ‘இன்­றைய பிரச்­சி­னை­க­ளுக்கும், நெருக்­க­டி­க­ளுக்கும் ஜனா­தி­பதி அமைச்­ச­ரவை, நிதி­ய­மைச்சர் மற்றும் அரச அதி­கா­ரிகள் பொறுப்­புக்­கூ­ற­வேண்­டு­மென ஆளும் தரப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அநுர பிரி­ய­தர்­ஷன யாப்பா கூறி­யுள்ளார்.

“எமது ஆட்­சியின் முதல் இரண்டு வருடங்களைத் திட்டமிட்டபடி முன்னெடுக்க முடியாமல் போய்விட்டது. இதற்கு கொரோனா தொற்றுப் பரவலே காரணம். அடுத்த மூன்று வருடங்களிலும் நிச்சயமாக நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம். தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்” என சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டும். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாட அனுமதிக்கக் கூடாது. சுபீட்சமான எதிர்காலத்தை ஏற்படுத்தித் தருவேன் என்ற வாக்குறுதியோடு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மக்களைப் பட்டினிச்சாவுக்குள் தள்ளமாட்டார் என நம்புவோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.