பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான தடுத்து வைப்புக்கள் உயரதிகாரிகளை சந்தித்தது மனித உரிமை ஆணைக்குழு

தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் பெயர்ப் பட்டியலையும் பெற்றுக் கொண்டது

0 466

(எம்.எப்.எம்.பஸீர்)
உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் உள்­ளிட்ட குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கைதிகள் தொடர்பில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு நேற்று விஷேட கலந்­து­ரை­யாடல் ஒன்­றினை முன்­னெ­டுத்­துள்­ளது.

சி.ஐ.டி. எனும் குற்றப் புல­னாய்வுத் திணைக்­களம், சி.ரி.ஐ.டி. எனப்­படும் பயங்­கர­வாத தடுப்பு மற்றும் விசா­ரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவு ஆகி­ய­வற்றின் பணிப்­பா­ளர்கள் பம்­ப­ல­பிட்­டியில் உள்ள இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் தலை­மை­­யகத்­துக்கு அழைக்­கப்­பட்டே இந்த கலந்­து­ரை­யாடல் நடாத்­தப்­பட்­டுள்­ளது.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்­கு­தல்­களை தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட பலர் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் தொடர்ந்தும் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும், மேலும் பலரும் பல விட­யங்கள் தொடர்பில் அச்­சட்­டத்தின் கீழ் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அச்­சட்­டத்தின் பிர­யோகம், தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­போரின் நலன்கள், சட்டப் பின்­னணி உள்­ளிட்ட விட­யங்கள் இதன்­போது ஆரா­யப்­பட்­ட­தாக அறிய முடி­கி­றது.

இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் தலைவர் ஓய்­வு­பெற்ற நீதி­பதி ரோஹினி மார­சிங்க தலை­மையில், ஆணைக் குழுவின் உறுப்­பி­னர்­க­ளான அனுஷ்யா சண்­மு­க­நாதன், விஜித்த நாண­யக்­கார, விசா­ரணைப் பிரிவின் பணிப்­பா­ளர்­க­ளான சுலாரி லிய­னகே, நிஹால் சந்­தி­ர­சிறி ஆகியோர் இந்த விளக்கம் கோரும் கலந்­து­ரை­யா­டலில் ஆணைக் குழு சார்பில் பங்­கேற்­றனர்.

அத்­துடன் ஆணைக் குழுவின் அறி­வித்­த­லுக்கு அமைய, சி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஹன் பிரே­ம­ரத்ன, சி.ரி.ஐ.டி. பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன டி அல்விஸ், பொலிஸ் சட்டப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் தர்­ஷன கால்­லகே ஆகியோர் ஆஜ­ரா­கினர்.

அவர்­க­ளுக்கு, தடுப்புக் காவலில் உள்ள கைதிகள் விட­யத்தில் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழு­வுக்கு தலை­யீடு செய்­வ­தற்­குள்ள சட்ட அனு­மதி மற்றும் பின்­ன­ணியை தெளி­வு­ப­டுத்­தி­யது. தடுப்பில் உள்­ளோரை எந்த நேரத்­திலும் இலங்கை மனித உரி­மைகள் ஆணைக் குழுவின் அதி­கா­ரிகள் சந்­திக்க முடியும் என்­ப­தையும் இதன்­போது ஆணைக் குழு தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. அத்­துடன் தற்­போதும் தடுப்புக் காவலில் வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களின் விப­ரங்கள், சட்டப் பின்­னணி தொடர்பில் தேவை­யான ஆவ­ணங்­க­ளையும் பெற்­றுக்­கொண்ட ஆணைக் குழு, தடுப்­பி­லுள்­ளோரின் நலன்கள் தொடர்­பிலும் விஷேட அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது.

இந் நிலையில் முன் வைக்­கப்­பட்ட ஆவ­ணங்­களை ஆரா­ய­வுள்ள ஆணைக் குழு, இதே விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யாட இன்று சி.சி.டி. எனும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்­பா­ள­ருக்கும் ஆஜ­ரா­கு­மாறு அறி­வித்தல் அனுப்­பி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து கைது செய்­யப்­பட்ட சுமார் 300 க்கும் அதி­க­மானோர் பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் எது­வித குற்­றச்­சாட்­டுக்­களும் இது­வரை சுமத்­தப்­ப­டாது தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து உள்­நாட்டு மற்றும் சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புகள் கேள்­வி­யெ­ழுப்­பி­யி­ருந்­தன. இந் நிலை­யி­லேயே இலங்கை மனித உரிமை ஆணைக்குழு இவ்விடயத்தில் தலையிட்டுள்ளதுடன் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் அடிப்படை உரிமைகள் குறித்து மேலதிக நடவடிக்கைகளை எடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு முக்கிய அங்கமாகவே இச் சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. -Vidivelli

Leave A Reply

Your email address will not be published.