அஹ்னாபுக்கு பிணை

0 303

ஆனாலும் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார்; இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக பிணை பெறும் சாத்தியம்

(புத்தளத்திலிருந்து எம்.எப்.எம்.பஸீர்)
‘நவ­ரசம்” என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்டு, பின்னர் அடிப்­ப­டை­வா­தத்தை போதனை செய்­த­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவி­ஞரை பிணையில் விடு­விக்க புத்­தளம் மேல் நீதி­மன்றம் நேற்று உத்­த­ர­விட்­டது. புத்­தளம் மேல் நீதி­மன்ற நீதி­பதி நயோமி விக்­ர­ம­சிங்க இதற்­கான உத்­த­ரவை நேற்று பிறப்­பித்தார்.

கடந்த 8 ஆம் திகதி உயர் நீதி­மன்றில் சட்ட மா அதிபர் சார்பில் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்ளே முன் வைத்த விட­யங்கள், நேற்று அஹ்­னா­புக்­காக ஆஜ­ரா­கிய சட்­டத்­த­ர­ணி­களால் புத்­தளம் மேல் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜ­ரா­கிய சிரேஷ்ட அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக, அஹ்­னா­புக்கு பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் இணக்கம் தெரி­வித்­துள்­ள­தாக மன்­றுக்கு அறி­வித்தார். இத­னை­ய­டுத்தே அவ­ருக்கு பிணை­ய­ளிக்க நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டது.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக அஹ்னாப் ஜஸீம் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.
இந்த குற்றப் பத்­திரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று (15) இரண்­டா­வது தட­வை­யாக விசா­ர­ணைக்கு வந்­தது. இதன்­போது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்ள கவிஞர், ஆசி­ரியர் அஹ்னாப் ஜஸீ­முக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ராம­லிங்கம் ரஞ்­சனின் தலை­மையில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­கர, சட்­டத்­த­ர­ணி­க­ளன நுஹ்மான், ஸ்வஸ்­திகா அரு­லிங்கம், தேவ­பாலன், ஏ. சஜான், ஹுஸ்னி ராஜிஹ் உள்­ளிட்­ட­வர்கள் ஆஜ­ரா­கினர்.

வழக்குத் தொடுநர் சட்ட மா அதி­ப­ருக்­காக அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவின் கீழ் அரச சட்­ட­வா­தி­க­ளான சஜின் பண்­டார மற்றும் நிஷாரா ஜய­ரத்ன ஆகி­யோரை உள்­ள­டக்­கிய குழு பிர­சன்­ன­மா­னது.

கடந்த நவம்பர் 15 ஆம் திகதி குற்றப் பத்­தி­ரிகை கைய­ளிக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், நேற்று (15) சட்­டத்­த­ரணி ராம­லிங்கம் ரஞ்சன் பிணை கோரி வாதங்­களை முன் வைத்தார்.

அஹ்­னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்­ட­வி­ரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள நிலையில், கடந்த 8 ஆம் திகதி அம்­மனு உயர் நீதி­மன்றில் பரி­சீ­லிக்­கப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்டார்.

இதன்­போது மனு­தாரர் (இம்­ம­னுவின் பிர­தி­வாதி அஹ்னாப்) சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி கனக ஈஸ்­வரன் ஆஜ­ரா­ன­தா­கவும், பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ரா­கிய மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் நரின் புள்ளே, அஹ்­னா­புக்கு இன்­றைய தினம் (நேற்று 15) பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் மேல் நீதி­மன்றில் எதிர்ப்பு முன் வைக்­க­மாட்டார் என தெரி­வித்­த­தாக கூறினார். உயர் நீதி­மன்றில் அன்­றைய தினம் என்ன நடந்­தது என்­பதை விளக்கும் நீதி­மன்ற பதி­வி­னையும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ராம­லிங்கம் ரஞ்சன் மன்­றுக்கு சமர்ப்­பித்தார்.

இதனை வழக்குத் தொடுநர் சார்பில் ஆஜ­ரான அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­ல­கவும் ஏற்­றுக்­கொண்­ட­துடன், இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் ஜஸீ­முக்கு பிணை­ய­ளிக்க சட்ட மா அதிபர் அனைத்து விட­யங்­க­ளையும் ஒப்­பீடு செய்து ஆராய்ந்து இணக்கம் தெரி­விப்­ப­தாக குறிப்­பிட்டார்.

இத­னை­ய­டுத்து நேற்று (15) மு.ப. 10. 45 அளவில் அஹ்­னா­புக்கு பிணை­ய­ளிப்­ப­தாக புத்­தளம் மேல் நீதி­மன்றின் நீதி­பதி நயோமி விக்­ர­ம­சிங்க அறி­வித்தார்.
5 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான 3 சரீரப் பிணை­களில் அவரை விடு­விப்­ப­தாக அறி­வித்த நீதி­பதி, அம்­மூ­வரும் புத்­தளம் மேல் நீதி­மன்ற அதி­கார எல்­லைக்குள் வசிப்­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் என நிபந்­தனை விதித்தார். அத்­துடன் அஹ்னாப் ஜஸீம் ஒவ்­வொரு மாதமும் முதல், இறுதி ஞாயிற்றுக் கிழ­மை­களில் மு.ப.9.00 மணிக்கும் நண்­பகல் 12.00 மணிக்கும் இடையே, புத்­தளம் – பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவில் கையெ­ழுத்­திட வேண்டும் என மற்­றொரு பிணை நிபந்­த­னை­யையும் நீதி­பதி பிறப்­பித்தார்.
வெளி­நாட்டுப் பய­ணத்தை தடை செய்த நீதி­மன்றம், அஹ்­னா­புக்கு கடவுச் சீட்டு ஒன்று இது­வரை இல்லை என்ற விடயம் மன்­றுக்கு முன் வைக்­கப்­பட்­டதை அடுத்து, அவ­ரது தேசிய அடை­யாள அட்டை இலக்­கத்தை மையப்­ப­டுத்தி அவ­ருக்கு கடவுச் சீட்டு விநி­யோ­கிப்­பதை தடுத்து குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­கள கட்­டுப்­பாட்­டா­ள­ருக்கு உத்­த­ர­விட்­டது. அத்­துடன் கடவுச் சீட்டு இல்லை என்­ப­தை­அ­டுத்த வழக்குத் தவ­ணையின் போது சத்­தியக் கட­தாசி மூலம் மன்­றுக்கு அறி­விக்­கவும் உத்­த­ர­விட்டார்..

இத­னை­விட, குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளதைப் போல, அடிப்­ப­டை­வாத கருத்­துக்­களை மீள போதனை செய்ய முயன்­றாலோ அதனை ஒத்த குற்றச் செய­லொன்­றினைச் செய்­தாலோ பிணை ரத்து செய்­யப்­படும் என நீதி­பதி எச்­ச­ரித்தார்.
இத­னை­விட, அஹ்னாப் ஜஸீம் தற்­போது மன்னார், சிலா­வத்­துறை – பண்­டா­ரிக்­கு­ளத்தில் நிரந்­தர வதி­வா­ள­ராக வசிக்கும் நிலையில் அம்­மு­க­வ­ரியை நீதி­மன்­றுக்கு அறி­விக்­காமல் மாற்றக் கூடாது எனவும் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து இவ்­வ­ழக்கை மிக விரைவில் விசா­ர­ணைக்கு எடுக்­கவும், ஒவ்­வொரு நாளும் விசா­ர­ணைக்கு எடுப்­ப­தா­யினும் அதற்கு சட்ட மா அதிபர் திணைக்­களம் தயா­ராக இருப்­ப­தா­கவும் அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக மன்­றுக்கு தெரி­வித்தார்.
எனினும் வழக்கு விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்க சில ஆவ­ணங்கள் இன்னும் பிர­தி­வா­தி­யான அஹ்னாப் தரப்­புக்கு கிடைக்­காமை தொடர்பில் அவ­ரது சட்­டத்­த­ர­ணியால் மன்­றுக்கு சுட்­டிக்­காட்­டப்­பட்­டது.
கிடைக்­காத ஆவ­ணங்கள் தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்­துக்கு எழுத்து மூலம் அறி­வித்து அதனை பெற்­றுக்­கொள்ள முடியும் என இதன்­போது அரச சட்­ட­வாதி உதார கரு­ணா­தி­லக உத்­த­ர­வாதம் அளித்தார்.

இந் நிலையில், கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்றம் ( நீதி­மன்ற அறை – 8 ) வழக்குக் கோவையை புத்­தளம் மேல் நீதி­மன்­றுக்கு அனுப்பி வைக்க நீதி­மன்ற உத்­த­ரவு பெறப்­பட்­ட­துடன், வழக்கு விசா­ர­ணைக்­கான திக­தியை தீர்­மா­னிக்­கவும், ஆவ­ணங்கள், பிணை நிபந்­தனை சான்­று­களை முழு­மைப்­ப­டுத்­தவும் வழக்கு எதிர்­வரும் 2022 ஜன­வரி 6 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது.

வழக்கு விசா­ர­ணைகள் மு.ப. 11.40 மணி­ய­ளவில் நிறை­வ­டைந்த போதும், பி.ப. 4.00 மணி வரை அஹ்னாப் நீதி­மன்­றி­லேயே சிறைக்­கா­வ­லர்­களின் பொறுப்பில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்தார். புத்­தளம் மேல் நீதி­மன்றில் காணப்­பட்ட இணக்­கத்­துக்கு அமைய, 3 சரீரப் பிணை­யா­ளர்­களும் கையெ­ழுத்­திட்டும் கூட அவர் விடு­விக்­கப்­ப­ட­வில்லை.

கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்கில் அஹ்னாப் ஜஸீம் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அங்கு பிணை­ய­ளிக்­கப்­படும் வரை தம்மால் அவரை விடு­விக்க முடி­யாது என சிறைச்­சாலை அதி­கா­ரிகள் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர்.
கொழும்பு மேல­திக நீதிவான் நீதி­மன்றில் உள்ள வழக்­குக்கு அமை­யவே புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­ட­தாக இதன்­போது அஹ்­னாபின் சட்­டத்­த­ர­ணிகள் விளக்­கி­யுள்ள போதும், குறித்த காரணியை மையப்படுத்தி அஹ்னாப் ஜஸீம் புத்தளம் மேல் நீதிமன்றில் பிணை அளிக்கப்பட்டும் கொழும்பு விளக்கமறியல் சிறைக்கு மாலை 4.10 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று (16) பெரும்பாலும், கொழும்பு 8 ஆம் இலக்க மேலதிக நீதிவான் நீதிமன்றில் நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு பிணை குறித்த விடயத்துக்கு தீர்வு காணப்படவுள்ளதாக அறிய முடிகிறது.

கடந்த 2020 மே 16 ஆம் திகதி இரவு 8 மணியளவில், சிலாவத்துறை, பண்டாரவெளியில் அமைந்துள்ள வீட்டில் வைத்து அஹ்னாப் ஜஸீம் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அது முதல் தடுப்புக் காவலிலும், விளக்கமறியலிலும் அவர் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.