தமிழர்களுக்காக முஸ்லிம்கள் குரல் எழுப்புவது எப்போது?

காத்திருக்கிறோம் என்கிறார் சுமந்திரன்

0 314

நாங்கள் இஸ்­லா­மி­யர்­க­ளுக்­காக குரல் கொடுக்­கும்­போது அதற்­காக எங்­களைப் பாராட்­டு­கின்­றீர்கள், உங்கள் பாராட்­டு­க­ளுக்கு நன்றி. அதே­போன்று தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்­காக முஸ்­லிம்­களின் குரல் எப்­போது எழும் என்று நாம் காத்­தி­ருக்­கிறோம் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.ஏ. சுமந்­திரன் தெரி­வித்தார்.

கன­டா­வுக்கு விஜயம் செய்­துள்ள அவ­ருக்கு, கடந்த 24 ஆம் திகதி அங்கு வாழும் இலங்கை முஸ்­லிம்­களால் அளிக்­கப்­பட்ட வர­வேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா. சாணக்­கியன் உட்­பட பலர் கலந்து கொண்ட இந் நிகழ்வில் சாணக்­கியன் எம்.பி. தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,
பொத்­துவில் முதல் பொலி­கண்டி வரை­யி­லான பாத யாத்­தி­ரையின் போது ஒரு எல்­லை­யி­லி­ருந்து அடுத்த எல்­லை­வரை இஸ்­லா­மிய மக்கள் எம்­மோடு நடந்து வந்­தார்கள். அந்த எல்­லை­யுடன் நின்­று­விட்­டார்கள், அதற்குப் பின் அவர்கள் வர­வில்லை. முழு தூரமும் நீங்கள் எங்­க­ளுடன் வர வேண்டும். அந்த நடை பய­ணத்தில் மட்­டு­மல்ல எமது அர­சியல் பய­ணத்­திலும் முழு தூரமும் எங்­க­ளோடு நீங்கள் வர வேண்டும். அப்­போ­துதான் நாம் இரண்டு சமூ­கமும் இந்­நாட்­டிலே தலை­நி­மிர்ந்து வாழ முடியும்.

எங்­க­ளுக்கு வெவ்­வேறு அடை­யா­ளங்கள் இருக்­கின்­றன. அதில் எந்­த­வித மாற்றுக் கருத்தும் கிடை­யாது. முஸ்­லிம்கள் தனி­யான அடை­யா­ள­முள்ள மக்கள் என்­பதை நாங்கள் ஏற்­றுக்­கொள்­கிறோம். அதில் எந்­த­வித தயக்­கமோ சல­னமோ எங்­க­ளி­டத்தில் கிடை­யாது. ஆனால், இந்த நாட்­டிலே வாழும் எண்­ணிக்­கை­யி­லேயே சிறு­பான்­மை­யி­ன­ராக இருக்­கின்ற மொழி­யினால் ஒன்­று­பட்ட சமூ­கங்­க­ளான நாங்கள் ஒன்­றாக செயற்­ப­டா­விட்டால் எமக்கு விடிவு கிடைக்­காது. இதனை நாம் உணர்ந்­து­கொள்ள வேண்டும்.
எம்மை நாம் சிறு­பான்­மை­யினர் என்று கூறாது மக்கள் என்று கூற வேண்டும் என நான் காத்­தான்­கு­டியில் குறிப்­பி­ட்டி­ருந்தேன்.

சரி­யா­னது எதுவோ, நீதி­யா­னது எதுவோ, மக்­க­ளுக்கு நல்­லது எது­வென்று நாங்கள் நினைப்­பது எதுவோ அதை செய்­வதில் ஒரு­போதும் நாம் பின்­நிற்க மாட்டோம். அது அனைத்து மக்­க­ளுக்கும் நன்­மை­யா­ன­தாக இருக்க வேண்டும். சிங்­கள மக்­க­ளுக்கு தீமை­யான எதையும் நாங்கள் செய்ய மாட்டோம் என்­பதை நான் தெளி­வாக சொல்­கிறேன்.

அதே­போன்று, இஸ்­லா­மிய மக்­க­ளுக்கு தீமையை ஏற்­ப­டுத்தும் எதையும் நாங்கள் செய்ய மாட்டோம். எண்­ணிக்­கையில் சிறு­பான்­மை­யாக இருக்­கின்ற ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் தீங்­கி­ழைக்கும் எதையும் நாம் செய்ய மாட்டோம். நாங்­களும் சக பிர­ஜை­க­ளாக இலங்­கையில் வாழ வேண்டும். எங்­க­ளுக்கும் தீமை ஏற்­படக் கூடாது. எங்­களின் சமூகம் எதிர்­பார்க்கும் நீதி கிடைக்­க­வேண்டும்.

சம பிர­ஜை­க­ளாக வாழ்தல் என்றால் ஒரே நாடு ஒரே சட்டம் என்­ப­தல்ல. சம­பி­ர­ஜைத்­துவம் என்று சொல்­வது, எல்­லோரும் ஒரு மக்கள் என்­ப­தல்ல. இலங்­கையில் இரண்டு மூன்று அடை­யா­ளங்கள் இருக்­கலாம். ஆனால், அதற்­குள்ளே தனிப்­பட்ட அடை­யா­ளங்கள் இருப்­பது உறுதி செய்­யப்­பட வேண்டும். இதன்­போ­துதான், இலங்­கையர் என்­கின்ற அடை­யாளம் பெரு­மை­மிக்­க­தாக, பெறு­ம­தி­யாக, சிறப்­பா­ன­தாக அமையும். தனித்­துவ அடை­யா­ளங்­களை மறுத்து எல்­லோ­ரையும் ஒரே மாதி­ரி­யாக சித்­தி­ரிக்­கின்­ற­தா­னது ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தாகும்.

அடுத்த தேர்­தலில் இஸ்­லா­மி­யர்கள் சாணக்­கியன் எம்.பி.க்கு வாக்­க­ளிப்­பார்கள் என எதிர்­பார்க்­கலாம். அதேபோல், தமிழ் மக்­களும் முஸ்லிம் உறுப்­பி­னர்­க­ளுக்கு வாக்­க­ளிப்­பார்கள் என்றும் எதிர்­பார்க்­கிறோம். இதற்­கான சூழ்­நிலை வர­வேண்டும். தற்­போது, அந்த சூழல் வந்­தி­ருக்­கி­றது என்று நினைக்­கிறேன். இலங்கை தமி­ழ­ரசு கட்சி ஆரம்­பிக்­கப்­பட்ட காலத்தில், இஸ்­லா­மிய வேட்­பா­ளர்கள் எமது கட்சி ஊடாக தேர்­தலில் போட்­டி­யிட்டு வென்­ற­வர்கள். எமது கட்­சியில் அந்த பேதம் இருந்­த­தில்லை.

1977 ஆம் ஆண்டு அர­சியல் மேடை­களில் “அண்ணன் அமிர்­த­லிங்கம் தமி­ழீ­ழத்தை பெற்றுக் கொடுக்­கா­விட்டால், தம்பி அஷ்ரப் பெற்­றுக்­கொ­டுப்பான்” என்று எம்.எச்.எம்.அஷ்ரப் கூறியிருந்தார். அந்த அளவுக்கு எமது உறவு இருந்தது. துரதிஷ்டவசமாக ஆயுதப்போராட்ட காலங்களிலே பல தீமைகள் இரு சாராருக்கும் நிகழ்ந்திருக்கிறது. இப்போது ஆயுதப் போராட்டங்கள் இல்லை. அது முடிந்து 12 வருடங்களாகிவிட்டது. அந்த உறவை கொண்டுவருவதற்கு திரும்பவும் எமக்கு 12 வருடங்கள் தேவையா? அடுத்த வருடமே நாம் ஒன்றாக வேண்டும் என்றார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.