படகுப் பாதை கவிழ்ந்ததில் உயிர் தப்பியவர்களின் அனுபவங்கள்

0 465

அல்லாஹ் அல்லாஹ் என கத்­தினேன்

ஸ்கூல் பேக் தான் என்னை மிதக்க வைத்­தது;
சம்­ப­வத்தின் உயிர்­தப்­பிய 9 வயது மாணவி அனீக்கா

நாங்க எல்­லாரும் பாதை­யில போயிட்­டி­ருந்தம். அப்­பதான் அது கெழிஞ்சி விழுந்­தது. எனக்கு சரி­யான பயம் வந்­துட்டு. அல்லாஹ் அல்லாஹ் என்டு சத்­தமா கத்­தினன். நான் போட்­டி­ருந்த ஸ்கூல் பேக் என்ன தண்­ணிக்­குள்ள போக விடாம என்ன உசத்தி விட்­டது. அதா­லதான் நான் மிதந்தன். கைய அடிச்சி அடிச்சி நீந்­தினன். கொஞ்ச நேரத்­துல போட்ல வந்து என்ன காப்­பாத்­தி­னாங்க. எனக்கு பக்­கத்­துல இருந்த இரண்டு பிள்­ளை­களும் மௌத்­தா­கிட்­டாங்க. எனக்கு முன்­னுக்கு இருந்த டீச்­சரும் மௌத்­தா­கிட்­டாங்க. அவங்க நல்ல டீச்சர். எங்­கட ஏரி­யா­வு­லதான் அவங்­கட வீடு இருக்கு. என்ட கையில சின்ன காயம் இருக்கு. நான் ஹொஸ்­பிட்டல் போகல. உடன வாப்பா வந்து என்ன வீட்­டுக்கு கூட்டி வந்­தாங்க என கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி படகுப் பாதை விபத்தில் உயிர்­தப்­பிய 9 வயது சிறுமி பாத்­திமா அனீக்கா விடி­வௌ்­ளிக்குத் தெரி­வித்தார்.
கிண்­ணியா அல் அஸ்கர் கனிஷ்ட வித்­தி­யா­ல­யத்தில் கல்வி பயிலும் இவர் வழக்­க­மாக தனது தந்­தை­யுடன் மோட்டார் சைக்­கி­ளில்தான் பாட­சா­லைக்குச் செல்வார். எனினும் அன்­றைய தினம் மோட்டார் சைக்­கிளில் வீதி வழி­யாகச் செல்ல அதிக நேரம் எடுக்கும் என்­பதால் அனீக்­காவின் தந்தை ரனீஸ், தனது மகளை குறித்த படகுப் பாதையில் ஏற்றி பாட­சா­லைக்கு அனுப்­பினார். இது குறித்து அனீக்­காவின் தந்தை ரனீஸ் விடி­வெள்ளிக்கு கூறு­கையில்,

அன்று நான் மகளை பாதையில் ஏற்­றி­விட்டு, பாதை ஆற்றில் அரை­வாசி தூரத்தை கடந்த பின்னர் நான் வீட்­டுக்கு வந்­து­விட்டேன். பின்­னர்தான் இந்த விபத்து பற்றிக் கேள்­விப்­பட்டேன்.

நாங்கள் கட­லுக்கு அருகில் வசிப்­பதால் எனது மக­ளுக்கு நீச்சல் தெரியும். அவர் கைகளை அடித்து அடித்து நீந்­தி­யுள்ளார். அவர் தனது தோள்­களில் அணிந்­தி­ருந்த பாட­சாலைப் பை நீர் புகா­தது. அதனால் அப் பை, மகளை நீருக்குள் மூழ்க விட­வில்லை. பாதை கரையை அடைய சிறிது நேரம் இருந்­ததால் எல்­லோரும் பாதையின் முன்­பக்­க­மாகச் சென்­றுள்ளார்கள். இதனால் ஒரு பக்கம் பாரம் கூடி, பாதை கவிழ்ந்­துள்­ளது.
மகள் நீந்திக் கொண்­டி­ருந்த போது மீன­வர்கள் உட­ன­டி­யாக படகில் வந்து இவ­ரைத்தான் முதலில் காப்­பாற்­றி­யுள்­ளனர். இவ­ரோடு சேர்த்து மேலும் 7 பிள்­ளை­களைக் காப்­பாற்­றி­யுள்­ளனர்.
பிள்­ளைகள் பாட­சாலை செல்லும் நேரத்தில் அதிக வாகன நெரிசல் இருப்­பதால் கடந்த இரு வாரங்­க­ளாக நான் பிள்­ளையை இந்தப் பாதை­யில்தான் அனுப்­புவேன். இப் பாதையில் 5 முதல் 10 நிமி­டங்­க­ளி­லேயே ஆற்றைக் கடந்து விடலாம். பாதை தரை­யி­றங்கும் இடத்திலேயே பாடசாலையும் உள்ளது. இதனால்தான் எல்லோரும் இப் பாதையை பயன்படுத்துவார்கள் என்றும் அனீக்காவின் தந்தை ரனீஸ் மேலும் குறிப்பிட்டார்.

 

நாங்கள் நீருக்குள் விழ எங்கள் மீது பாதை கவிழ்ந்து விழுந்தது

நீந்திக் கரை சேர்ந்து கூக்குரலிட்ட
பின்னரே காப்பாற்றுவதற்கு மக்கள் வந்தனர்;
சம்பவத்தில் மகனுடன் உயிர் தப்பிய ஆசிரியரின் திகில் அனுபவம்

பாதை கரையை அடைய 10 மீற்றர் தூரமே இருந்­தது. அப்­போ­துதான் பாதை ஒரு பக்­க­மாக சரிந்­தது. பின்னர் அதி­லி­ருந்த நாங்கள் நீருக்குள் வீழ்ந்தோம். பாரத்தை தாங்க முடி­யா­ததால் பாதை தலை­ கீ­ழாகப் புரண்டு எங்கள் மேல் கவிழ்ந்­தது என கிண்­ணியா, குறிஞ்­சாக்­கேணி படகுப் பாதை விபத்தில் உயிர்­தப்­பிய ஆசி­ரியர் எம்.எம். ரமீஸ் விடி­வெள்ளிக்குத் தெரி­வித்தார்.

பெரிய கிண்­ணியா ஆண்கள் வித்­தி­யா­ல­யத்தில் ஆசி­ரி­ய­ராக கட­மை­யாற்றும் ஆசி­ரியர் ரமீஸ், தனது மக­னுடன் பாட­சா­லைக்குச் செல்லும் நோக்கில் குறித்த படகுப் பாதையில் பய­ணித்த போதே இந்த அனர்த்­தத்­துக்கு முகங்­கொ­டுத்­துள்ளார்.

இவ­ருடன் பய­ணித்த மகன், வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று நேற்று மாலை வீடு திரும்­பி­யுள்ளார். இந் நிலையில் சம்­பவம் தொடர்பில் ஆசி­ரியர் எம்.எம். ரமீஸ் விடி­வெள்ளிக்கு தொடர்ந்தும் விப­ரிக்­கையில்,

அன்று காலை 7.30 மணி­ய­ளவில் வழக்­கம்போல் நானும் எனது மகனும் பாட­சாலை செல்­வ­தற்­காக இப் பாதையில் எனது மோட்டார் சைக்­கி­ளுடன் பய­ணித்தோம். 3 மோட்டார் சைக்­கிள்­க­ளுடன் 10க்கும் மேற்­பட்ட மாண­வர்கள் அடங்­க­லாக 25 பேர் வரை அப்­போது பய­ணித்தோம். பாதை பய­ணித்து கரையை அடை­வ­தற்கு சுமார் 10 மீற்றர் தூரம் இருக்­கையில், ஒரு பக்­க­மாக சரியத் தொடங்­கி­யது.

பாதை உடைந்து கவி­ழ­வில்லை. மாறாக பய­ணித்­த­வர்­களின் எண்­ணிக்கை அதிகம் என்­பதால் சம நிலை இல்­லா­த­தா­லேயே சரிந்­தது. இவ்­வாறு ஒரு பக்­க­மாக சரி­யவும் எல்­லோரும் மறு­பக்­க­மாக நகர்ந்­தனர். அப்­போ­துதான் பாதை தலை­கீ­ழாகப் புரண்­டது.
பாதையில் பய­ணித்த நாம் தண்­ணீ­ருக்குள் கீழே விழ எமக்கு மேல் பாதை வீழ்ந்­தது. பாதை கவிழ்ந்த இடம் ஆழ­மான பகு­தி­யாகும். சுமார் 12 முதல் 15 அடி வரை அப் பகுதி ஆழ­மா­னது என நினைக்­கிறேன்.

ஆட்­க­ளுக்கு மேல் பாதை விழுந்­ததால் உட­ன­டி­யாக எங்­களால் நீருக்கு மேலே வர முடி­யாமல் போனது. இருந்­தாலும் நான் எனது மகனைப் பிடித்துக் கொண்டு கரையை நோக்கி நீந்­தினேன். இன்­னு­மொரு பாட­சாலை மாணவன் எனது காலைப் பிடித்துக் கொண்டே கரையை நோக்கி வந்தார்.

பாதை கவிழ்ந்த நேரத்தில் கரையில் 2 பேர் மாத்­தி­ரமே நின்­றி­ருந்­தனர். இதனால் நீரில் மூழ்­கி­ய­வர்­களைக் காப்­பாற்­று­வ­தற்கு உத­விக்கு யாராலும் வர முடி­ய­வில்லை. நாம் கரைக்கு வந்து கூக்­கு­ர­லிட்டோம். சுமார் 15 நிமி­டங்­களின் பின்­னரே மக்கள் அங்கு கூடினர். எனினும் அந்த இடத்தில் உட­ன­டி­யாக எல்­லோ­ரையும் காப்­பாற்றக் கூடிய சூழல் இருக்­க­வில்லை. நீரோட்டம் வேக­மா­க­வி­ருந்­தது.

இந்தப் பாதை சேவையை ஆரம்­பித்து 2 மாதங்­கள்தான் இருக்கும் என நினைக்­கிறேன். இந்த சேவையை நடாத்­தி­ய­வரின் நோக்கம் நல்­லது. இதனால் நாம் பய­ன­டைந்தோம். எனினும் இதற்கு அனு­மதி வழங்­கி­ய­வர்கள் இதனை பாது­காப்­பான முறையில் முன்­னெ­டுப்­ப­தற்­கான வழி­காட்­டல்­களை வழங்­கி­யி­ருக்க வேண்டும். அதி­கா­ரிகள் இதனை கண்­கா­ணித்­தி­ருக்க வேண்டும். அர­சி­யல்­வா­திகள், அதி­கா­ரி­களின் கவ­ன­யீனம், அக்­க­றை­யின்­மைதான் இந்த விபத்­துக்குக் காரணம். இத­னுடன் சம்­பந்­தப்­பட்ட அனை­வரும் அல்­லாஹ்­விடம் பதில் கூறியே ஆக வேண்டும் என்றார்.
(படங்கள் : குமணன்)\- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.