பட்ஜட், 20ஐ ஆதரித்த முஸ்லிம் எம்.பி.க்கள்: எத்தனை நாள் தொடரும் இந்த ஏமாற்று நாடகம்?

0 312

றிப்தி அலி

ஜனா­தி­பதி கோட்­டா­பய ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான ஆளும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­னவின் 2022ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்­டத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேல­திக வாக்­கு­ளினால் கடந்த திங்­கட்­கி­ழமை (22) நிறை­வேற்­றப்­பட்­டது.

எதிர்­கால ஜனா­தி­பதி என்ற கன­வு­ட­னுள்ள நிதி அமைச்சர் பஸில் ராஜ­ப­க்ஷவின் கன்னி வரவு செலவுத் திட்­டத்தில் மக்­க­ளுக்கு எந்­த­வித நிவா­ர­ணமும் வழங்­கப்­ப­ட­வில்லை. எனினும் இந்த வரவு செலவுத் திட்­டத்­தினை மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்றி அர­சாங்­கத்தின் ஸ்திரத்­தன்­மை­யினை நாட்டு மக்­க­ளுக்கு மீண்­டு­மொன்று தடவை காண்­பிக்க வேண்­டி­யி­ருந்­தது.

பாரா­ளு­மன்­றத்தில் 145 ஆச­னங்­களை கொண்­டுள்ள ஆளும் ஸ்ரீ லங்கா பொது­ஜன பெர­மு­ன­வினால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகிய கட்­சி­களின் ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இதற்­காக ஆத­ர­வாக வாக்­க­ளிப்பர் என வாக்­கெ­டுப்­புக்கு முன்­னரே பலரும் ஆரூடம் கூறி­யி­ருந்­தனர். இதில் ஒரு சில எம்.பி.க்கள் தாம் ஆத­ர­வாக வாக்­க­ளிப்போம் என்­பதை முன்­கூட்­டியே பகி­ரங்­க­மான தெரி­வித்­தி­ருந்­தனர்.

கடந்த முறை 20ஆவது திருத்தச் சட்டம் வாக்­கெ­டுப்­புக்கு வந்த போதும் மேற்­படி 7 முஸ்லிம் எம்.பி.க்களும் அதற்கு ஆத­ர­வா­கவே வாக்­க­ளித்­தி­ருந்­தனர். இந்த செயற்­பாடு முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் பாரிய விமர்­ச­னத்தைத் தோற்­று­வித்­தி­ருந்­தது.
குறித்த ஏழு பேரும் தனி­யாக செயற்­பட்டு வரு­வ­துடன் எதிர்க்­கட்­சி­யி­லி­ருந்து கொண்டே அரச ஆத­ரவு அணி­யி­ன­ராக செயற்­ப­டு­கின்­றனர். இவர்கள் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­று­வ­தற்­கான நேரம் கூட ஆளும் கட்­சி­யி­னா­லேயே வழங்­கப்­ப­டு­கின்­றது.
இதற்கு மேல­தி­க­மாக சில பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு மாவட்ட அபி­ருத்தி குழுத் தலைவர் பத­வி­களும், சில­ருக்கு அர­சாங்க வாக­னங்­களும், எரி­பொருள் கொடுப்­ப­னவும் வேறு சில சலு­கை­களும் வழங்­கப்­ப­டு­கின்­றன.

இவ்­வாறு ஆளும் அர­சாங்­கத்­துடன் தேனி­லவு கொண்­டா­டிக்­கொண்­டி­ருக்கும் இந்த ஏழு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் 2022ஆம் ஆண்­டுக்­கான வரவு செலவுத் திட்ட வாக்­கெ­டுப்பில் எவ்­வாறு செயற்­ப­டு­வார்கள் என்­பது தொடர்பில் முழு நாடும் அதிகம் அவ­தா­னித்­துக்­கொண்­டி­ருந்­தது.

இவ்­வா­றான நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை (21) இடம்­பெற்ற இரண்டு முஸ்லிம் கட்­சி­க­ளி­னதும் உயர் பீட கூட்­டத்தில் நிதி அமைச்சர் பசில் ராஜ­ப­க்ஷவின் வரவு செலவுத் திட்­டத்­தினை எதிர்ப்­பது என தீர்­மா­னிக்­கப்­பட்­டது. அத்­துடன் கட்­சியின் தீர்­மா­னத்­தினை மீறி செயற்­ப­டு­வோ­ருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்­கைகள் எடுக்­கவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எனினும், கட்­சி­களின் தீர்­மா­னத்­தினை கருத்திற் கொள்­ளாது ஆறு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்­தனர். அதே­வேளை, திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எஸ். தௌபீக் வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­க­வில்லை. மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம், அ.இ.ம.கா. தலைவர் ரிசாத் பதி­யுதீன் ஆகிய இரு­வரும் வரவு செல­வுத்­திட்­டத்தை எதிர்த்து வாக்­க­ளித்­தனர்.
இவர்­களின் ஆத­ர­வி­னையும் சேர்த்து 153 வாக்­குகள் வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வாக கிடைத்­தன.

இடை­நி­றுத்தம்
இப் பின்­ன­ணி­யில்தான் கட்­சியின் தீர்­மா­னத்தை மீறி, வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் மூன்று பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இசாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம் மற்றும் முஷர்ரப் முது­நபீன் ஆகியோர் அக்­கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளனர்.

இதே­போன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸும் தமது கட்சித் தீர்­மா­னத்தை மீறி வரவு செல­வுத்­திட்­டத்­திற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்த எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம் மற்றும் நஸீர் அகமட் ஆகி­யோரை கட்­சியின் பத­வி­க­ளி­லி­ருந்து இடை­நி­றுத்­தி­யுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது. அதா­வது கட்­சியின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து இவர்கள் இடை­நி­றுத்­தப்­ப­ட­வில்லை. மாறாக கட்­சியில் வகித்து வந்த பத­வி­க­ளி­லி­ருந்தே இடை­நி­றுத்­தப்­பட்­டுள்­ளனர் என்­பது கவ­னிக்­கத்­தக்­க­தாகும்.

கடும் விமர்­ச­னங்கள்
இதே­வேளை, குறித்த ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் வரவு செலவுத் திட்­டத்­திற்கு ஆத­ர­வ­ளித்த செயற்­பாடும் சமூக ஊட­கங்­களில் கடு­மை­யான விமர்­ச­னத்­திற்கு உள்­ளா­கி­யி­ருந்­ததை அவ­தா­னிக்க முடிந்­தது.

தாம் ஆளும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்தன் பின்னர் முஸ்லிம் சமூ­கத்­திற்கு பல்­வேறு நன்­மைகள் கிடைத்­துள்­ள­தாக குறித்த எம்.பி.க்கள் தொடர்ச்­சி­யாக கூறி வரு­கின்­றனர். எனினும் அவ்­வாறு சமூகம் நன்­மை­ய­டைந்­த­தாக எங்கும் காண முடி­ய­வில்லை. மாறாக இவர்­களின் தனிப்­பட்ட நலன்­களே நிறை­வேற்­றிக்­கொள்­ளப்­பட்­டுள்­ளன.
மேற்­கு­றிப்­பிட்ட ஏழு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் ஆளும் அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்த பின்­னரே கொவிட் கார­ண­மாக உயி­ரி­ழப்போர் வலுக்­கட்­டா­ய­மாக எரிக்­கப்­பட்­டது நிறுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்து வரு­கின்­றனர். எனினும் பாகிஸ்தான் பிர­தமர் இம்ரான் கானின் தலை­யீட்­டினை அடுத்தே கட்­டாய தகனம் நிறுத்­தப்­பட்­டது என்­பதே யதார்த்­த­மாகும்.

ஓட்­ட­மா­வ­டியில் மாத்­தி­ரமே இப்­போது கொவிட் ஜனா­ஸாக்கள் அடக்கம் செய்­யப்­ப­டு­கின்­றன. இதனால் ஏனைய மாவட்­டங்­களில் வாழும் மக்கள் ஜனா­ஸாக்­களை அங்கு கொண்டு சென்று அடக்கம் செய்­வதில் பாரிய சிர­மங்­களைச் சந்­திக்­கின்­றனர். எனினும் இதற்குக் கூட தீர்வைப் பெற்றுக் கொடுக்க இந்த எம்.பி.க்களால் முடி­ய­வில்லை. அது மாத்­தி­ர­மல்­லாமல் நல்­ல­டக்­கத்­திற்­கான ஒதுக்­கப்­பட்ட காணியில் இடப்­பாற்­றாக்­குறை ஏற்­பட்­டுள்­ளது. இதற்கு தீர்­வாக வேறு இடத்தைப் பெற்றுக் கொடுப்­ப­தற்கும் இவர்­களால் முடி­ய­வில்லை.

அதே­வேளை, மாட­றுப்பு தடை, காதி நீதி­மன்ற ஒழிப்பு, புர்கா தடை, முஸ்லிம் திரு­மண மற்றும் விவா­க­ரத்து சட்ட விவ­காரம், ஞான­சார தேரர் தலை­மையில் ஒரே நாடு ஒரே சட்டம் செய­லணி போன்ற விட­யங்­களில் கூட தலை­யிட்டு தீர்வு பெற்றுக் கொடுக்க இவர்­க­ளுக்கு திரா­ணி­யில்­லாது போய்­விட்­டது.

தற்­போது இந்த தடை­களை அமுல்­ப­டுத்­து­வ­தற்­கான சட்ட மூலங்கள் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்­தினால் தயா­ரிக்­கப்­பட்டு வரு­கின்­றது. எனினும் குறித்த தீர்­மா­னங்­களை வாபஸ் பெறச் செய்­வ­தற்­கான எந்­த­வித பலமும் குறித்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளி­ட­மில்லை.

இதே­வேளை, கல்­முனை மாந­கரை பாது­காப்­ப­தென்றால் வரவு செலவுத் திட்­டத்­திற்கு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆத­ர­வ­ளிக்க வேண்டும் என கல்­முனை அனைத்து பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் வேண்­டு­கோ­ளொன்றை விடுத்­தி­ருந்­தது. இந்த வேண்­டு­கோளை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக வெளியிடும் விசேட ஊட­க­வி­ய­லாளர் மாநா­டொன்று கல்­முனை முஹை­யதீன் பெரிய ஜும்ஆ பள்­ளி­வாசல் காரி­யா­ல­யத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்ட அனை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹரீஸின் நேரடி அர­சியல் ஆத­ர­வா­ளர்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

அர­சாங்­கத்­துடன் தேனி­லவு கொண்­டாடும் குறித்த ஏழு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இணைந்து கல்­முனை விவ­கா­ரத்­திற்கு ஏன் இது­வரை தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­க­வில்லை. கடந்த நல்­லாட்சி அர­சாங்­கத்தில் உள்­ளு­ராட்சி, மாகாண சபை இரா­ஜாங்க அமைச்­ச­ராக ஹரீஸ் செயற்­பட்ட போதே இதற்கு நிரந்த தீர்­வினை பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­கலாம். எனினும் இதற்­காக அவர் ஒரு அடி­கூட எடுத்து வைக்­க­வில்லை.

வரவு செல­வுத்­திட்­டத்தை ஆத­ரிக்­கு­மாறு கோரி கல்­முனை அனைத்து பள்­ளி­வாசல் சம்­மே­ளனம் நடாத்­திய நாடகம் போன்ற மற்­று­மொரு நாட­கத்தை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் முஷர்­ரபும் அரங்­கேற்­றினார். முஷர்ரப் எம்.பி. பட்­ஜட்டை ஆத­ரிக்க வேண்டும் என சிலர் வீடி­யோக்­களில் தோன்றி அன்று காலை முகநூல் ஊடாக கோரிக்­கை­களை முன்வைத்தனர். எனினும் இது குறித்த எம்.பி.யின் ஏற்பாட்டில் நடந்த நாடகம் என்பது பின்னர் உறுதியானது.

இவ்­வாறு குறித்த 7 முஸ்லிம் எம்.பி.க்கள் மாத்­தி­ர­மன்றி அவர்­க­ளது கட்சித் தலை­வர்கள், உயர் பீடங்கள் கூட மக்­களை ஏமாற்றும் வகை­யி­லேயே தொடர் நாட­கங்­களை அரங்­கேற்றி வரு­கின்­றனர். 20 க்கு ஆத­ர­வ­ளித்­த­வர்­க­ளுக்கு கடும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எச்­ச­ரித்த மு.கா. தலைவர் ஹக்கீம், பின்னர் அவர்­களை மன்­னித்­து­விட்­ட­தாக மற்­று­மொரு பூச்­சாண்­டியை அரங்­கேற்­றினார். அதே­போன்­றுதான் 20 ஐ ஆத­ரித்த தனது கட்சி எம்.பி.க்களை ரிஷாத் பதி­யுதீன் அண்­மையில் தான் சென்ற இடங்­க­ளி­லெல்லாம் குறித்த எம்.பி.க்களை அர­வ­ணைத்து மகிழ்ந்தார்.

இப்­படி முஸ்லிம் கட்­சிகள் அனைத்­துமே சமூ­கத்தை ஏமாற்­று­வ­தையே குறி­யாகக் கொண்டு செயற்­ப­டு­கின்­றன. இதற்கு முற்றுப் புள்ளி வைப்பது யார் என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.