17 நாட்களாக வெள்ளநீருக்குள் தத்தளிக்கும் ஆலங்குடா!

490 குடும்பங்கள் நிர்க்கதி; தொடர்ந்தும் இடம்­பெ­யர்ந்­தி­ருக்­கும்­ நிலை

0 244

முஹம்மட் ரிபாக் 

தொடர்ச்­சி­யாக பெய்த கடும் மழை­யினால், புத்­த­ளத்தில் பல பகு­தி­களில் ஏற்­பட்ட வெள்­ளநீர் வழிந்­தோ­டி­யுள்­ள­துடன், மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் கொஞ்சம் கொஞ்­ச­மாக வழ­மைக்குத் திரும்ப ஆரம்­பித்­துள்­ளது. எனினும் கற்­பிட்டி பிர­தேச செய­லாளர் பிரி­வுக்­குட்­பட்ட ஆலங்­குடா கிராம சேவகர் பிரிவில் உள்ள பல கிரா­மங்­களில் இன்றும் வெள்­ளநீர் தேங்கிக் கிடப்­பதை காண முடி­கின்­றது.

கடும் மழை கார­ண­மாக, புத்­தளம் மாவட்­டத்தில் என்­று­மில்­லா­த­வாறு கடும் வெள்ளம் ஏற்­பட்­டது. இவ்­வாறு பல பகு­தி­க­ளிலும் தேங்கிக் கிடந்த வெள்­ளநீர் வழிந்­தோ­டி­யுள்ள போதிலும் ஆலங்­குடா கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ஆலங்­குடா பி முகாம், அல் ஹிஜ்ரா, ஜின்­னா­புரம், அல் அஸாம், அல் மனார், அல் ஜின்னா, மசூர் நகர், மர­வன்­சேனை கொலனி ஆகிய பிர­தே­சங்­களில் இன்றும் வெள்­ளநீர் தேங்­கிய நிலையில் காணப்­ப­டு­கி­றது. இதனால், சுமார் 490 குடும்­பங்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளதுடன், அம்­மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளது.

வெள்­ளத்­தினால் பாதிக்­கப்­பட்ட குடும்­பங்கள் இன்று வரை பொது மண்­ட­பங்­க­ளிலும், தங்­க­ளது உற­வி­னர்­களின் வீடு­களி லும் தங்­கி­யுள்­ளனர். இவ்­வாறு தங்­கி­யுள்ள மக்­க­ளுக்கு பொது அமைப்­புக்­களின் நிதிப் பங்­க­ளிப்பில் சமைத்த உண­வுகள் வழங்­கப்­பட்டு வரு­வ­துடன், பிர­தேச செய­ல­கத்­தினால் நாளாந்த உணவு தேவைக்­காக நிதி­களும் வழங்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

கடந்த 8 ஆம் திகதி பெய்த கடும் மழை­யினால் புத்­தளம் மாவட்டம் வெள்­ளத்­தினால் மூழ்­கி­யி­ருந்­தது. எனினும், ஓரிரு நாட்­களின் பின்னர் இவ்­வாறு வெள்­ளத்­தினால் மூழ்­கிய பகு­தி­களில் வெள்ளம் வழிந்­தோ­டி­ய­துடன், மக்­களின் இயல்பு வாழ்க்­கையும் கட்டம் கட்­ட­மாக வழ­மைக்குத் திரும்­பி­யது.

எனினும், வெள்ளம் ஏற்­பட்டு இரண்டு வார காலம் நிறை­வ­டைந்த நிலை­யிலும் ஆலங்­குடா பகு­தியில் இன்­று­வரை இவ்­வாறு வெள்­ளநீர் தேங்­கி­யி­ருப்­பது பெரும் வேத­னை­ய­ளிப்­ப­தாக பிர­தேச மக்கள் கவலை தெரி­விக்­கின்­றனர்.

அத்­துடன், வெள்­ளத்­தினால் மூழ்­கி­யுள்ள தமது வீடு­களை அப்­ப­டியே விட்­டு­விட்டு, உற­வி­னர்­களின் வீடு­களில் தாங்கள் தங்­கி­யுள்ள போதிலும் தமது வீடுகள், வாக­னங்கள், உள்­ளிட்ட சொத்­துக்­க­ளுக்கு எவ்­வி­த­மான பாது­காப்பும் இல்லை எனவும், சில வீடு­களில் திருட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் மக்கள் கூறு­கின்­றனர்.
ஆலங்­குடா கிராம சேவகர் பிரிவில் வெள்­ளத்தால் மூழ்­கிய பகு­தி­களை புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிந்­தக மாயா­துன்ன கடந்த வாரம் நேர­டி­யாக விஜயம் செய்து பார்­வை­யிட்­டுள்ளார்.

அத்­துடன், புத்­தளம் மாவட்ட செய­லா­ள­ரையும், கற்­பிட்டி பிர­தேச செய­லா­ள­ரையும் , புத்­தளம் மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலைய அதி­கா­ரி­க­ளையும் அழைத்து வந்து ஆலங்­குடா பகு­தியில் தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை உட­ன­டி­யாக வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஆலோ­ச­னையும் வழங்­கி­யுள்ளார்.
எனினும், தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை வெளி­யேற்­று­வ­தற்கு இன்­று­வரை எவ்­வித காத்­தி­ர­மான நட­வ­டிக்­கை­களும் இது­வரை எடுக்­கப்­ப­ட­வில்லை என ஆலங்­குடா ஒற்­றுமை கிராம அபி­வி­ருத்தி அமைப்பின் தலைவர் மீரா சாஹிப் ரனீஸ் கூறு­கின்றார்.

“பாதிக்­கப்­பட்ட பகு­தி­களை பார்­வை­யிட வருகை தரும் அதி­கா­ரி­களும், அர­சி­யல்­வா­தி­களும் மக்கள் முன் வாக்­கு­று­தி­களை வழங்­கி­விட்டுச் சென்று விடு­கின்­றனர்., அதன் பின்னர் வெள்­ள­நீரை வெளி­யேற்றும் பணிகள் யாவும் கிடப்­பி­லேயே காணப்­ப­டு­கின்­றன” என்றார்.

இதே­வேளை, வடக்­கி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்­லிம்கள் மேற்­படி கிரா­மங்­களில் வாழ்­வ­தா­கவும், ஒரு சில உள்ளூர் அர­சி­யல்­வா­திகள் தங்­க­ளது சுய­நல அர­சி­ய­லுக்­காக தனிப்­பட்ட முறையில் அழுத்­தங்­களை பிர­யோ­கித்து, ஆலங்­குடா பகு­தியில் தேங்கி காணப்­படும் வெள்­ள­நீரை வெளி­யேற்றும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­து­வ­தா­கவும் பாதிக்­கப்­பட்ட மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.

அத்­துடன், தேர்தல் காலங்­களில் இந்த மக்­களின் வாக்­கு­களைப் பெற்ற உள்ளூர் பிர­தேச சபை மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் இந்த பகு­தி­களை திரும்பிக் கூட பார்க்­காமை , பார்த்தும் அலட்­சியப் போக்­குடன் செயற்­ப­டு­வதும் தமக்கு வேத­னை­ய­ளிப்­ப­தா­கவும் மக்கள் குறிப்­பி­டு­கின்­றனர்.

முறை­யான வடி­கா­ல­மைப்பு வச­திகள் இன்­மையே இவ்­வாறு வெள்­ளநீர் தேங்கி நிற்­ப­தற்கு கார­ண­மாகும் எனத் தெரி­விக்­கின்ற பாதிக்­கப்­பட்ட மக்கள், தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை வெளி­யேற்­று­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்­கின்­றனர்.

ஆலங்­கு­டாவின் நில அமைப்­புதான் இவ்­வாறு வெள்­ளநீர் தேங்கி நிற்­ப­தற்கு கார­ணமே தவிர, அதி­கா­ரி­களின் அலட்­சியப் போக்கு கார­ண­மல்ல என ஆலங்­குடா கிராம உத்­தி­யோ­கத்தர் முஹம்­மது சனீர் கூறு­கின்றார்.

“மாவட்ட செய­லாளர், கற்­பிட்டி பிர­தேச செய­லாளர் மற்றும் புத்­தளம் மாவட்ட செய­லக தொழி­நுட்ப பிரிவின் உத்­தி­யோ­கத்­தர்கள் ஆலங்­குடா பகு­திக்கு கள விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்து, தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை வெளி­யேற்ற நட­வ­டிக்­கை­களை தொடர்ந்தும் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இரண்டு பக்­கமும் மேட்டு நிலம் கணப்­ப­டு­வ­துடன், ஆலங்­குடா கிராமம் நடுவில் உள்­ளது. என­வேதான் வெள்­ள­நீரை வெளி­யேற்­று­வதில் தாமதம் ஏற்­ப­டு­கி­றது.

எவ்­வா­றா­யினும் தொழி­நுட்ப உத்­தி­யோ­கத்­தர்­களின் ஆலோ­ச­னையின் படி ஆலங்­கு­டாவில் தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை வெளி­யேற்ற தென்­மேற்குப் பகு­தி­யான இளந்­தை­யடி பகு­தியில் பெக்கோ இயந்­திரம் மூலம் பாரிய வடி­கான்கள் தோண்­டப்­பட்டு, நீரை கட­லுக்குள் அனுப்பும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன” என்றார் கிராம உத்­தி­யோ­கத்தார்.

எனினும் எதிர்­பார்த்த அளவு நீரின் ஓட்ட வேகம் இல்­லா­ததன் கார­ண­மாக ஆலங்­குடா பகு­தியில் இன்­னமும் 4 அடிக்கு மேல் வெள்­ளநீர் தேங்கி காணப்­ப­டு­கி­றது என்றும் அவர் மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

அத்­துடன், தேங்கி நிற்கும் வெள்­ள­நீரை 10 இஞ்சி அள­வு­கொண்ட மோட்டர் மூலம் வெளி­யேற்ற மற்­று­மொரு நட­வ­டிக்­கையும் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது. எனினும், குறித்த மோட்­டாருக்கு தேவை­யான பட்­டை கள் கிடைக்­கா­மை­யினால் அந்த முயற்­சி­களும் கிடப்­பில்தான் இருக்­கி­றது.

அந்த மோட்­டா­ருக்கு தேவை­யான பட்­டைகள் புத்­த­ளத்தில் கொள்­வ­னவு செய்ய முடி­யாது. மட்­டு­மன்றி, அதற்­கான செல­வு­களும் அதி­க­மாகும். எனவே இது­தொ­டர்­பா­கவும் உயர்­மட்ட கலந்­து­ரை­யா­டல்கள் இடம்­பெற்று வரு­கி­றது.

இதே­வேளை, வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது உற­வி­னர்கள் வீடு­களில் தங்­கி­யுள்­ளனர். அவர்­க­ளுக்கு சமைத்த உண­வுகள் வழங்­கு­வதில் சிரமம் காணப்­ப­டு­வதல் உண­வுக்கு பதி­லாக பணம் வழங்­கப்­ப­டு­கி­றது. குடும்­பத்தில் நபர் ஒரு­வ­ருக்கு நாளொன்­றுக்கு 250 ரூபா வீதம் வழங்கப்படுகிறது.

தொடர்ச்­சி­யாக 17 நாட்­க­ளுக்கும் மேலாக வெள்ள நீர் ஊருக்குள் இருப்­ப­தா­னது பல்­வே­று­வ­கை­யான பிரச்­சி­னை­களை தோற்­று­விக்­கலாம். மக்கள் வசிக்கும் இருப்­பி­டங்கள் நீரில் ஊறி உடைய வாய்ப்பிருக்கிறது. அத்தோடு, தொற்று நோய்கள் பரவும் அபாயமும் காணப்படுகின்றது.

வெள்ள அனர்த்தம் கார­ண­மாக இரண்­டரை வாரங்கள் இன்­னுமோர் இடத்தில் இடம்­பெ­யர்ந்து வாழ்­வதால் பெரும் கஷ்­டங்கள் மக்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்­றன. அத்­தோடு, சமூகப் பிரச்­சி­னை­களும் உரு­வா­கின்­றன. இவ்­வி­டயம் குறித்து கூடுதல் அவ­தானம் செலுத்தி தீர்வை பெற்­றுக்­கொ­டுப்­பது புத்­தளம் மாவட்ட செய­லகம், கற்­பிட்டி பிர­தேச செய­லாகம், புத்­தளம் மாவட்ட அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் என்­ப­வற்றின் கட­மை­யல்­லவா. அத்­தோடு, இது விட­ய­மாக அழுத்தம் கொடுத்து மக்கள் பிரச்­சி­னையை தீர்த்­து­வைக்கும் பொறுப்பு பிர­தேச சபை உறுப்­பி­னர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்­பி­னர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பாகும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.