இரண்டு வருட கால ஆட்சியின் சாதனைகள்

0 518

முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜ­பக்ச ஜனா­தி­ப­தி­யாகப் பத­வி­யேற்று சரி­யாக 2 வரு­டங்கள் பூர்த்­தி­யா­கின்­றன. ஆனால் இந்த 2 வருடப் பூர்த்­தியை கொண்­டா­டு­கின்ற நிலையில் அவ­ருக்கு வாக்­க­ளித்த மக்கள் இல்லை என்­ப­துதான் துர­திஷ்­ட­மா­னது. 69 இலட்சம் மக்­களின் வாக்­கு­க­ளுடன் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி, தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளது குறைந்­த­பட்ச அபி­லா­ஷை­களைக் கூட நிறை­வேற்றத் தவ­றி­விட்டார் என்­ப­தை­விட, ஒட்­டு­மொத்த நாட்டு மக்­க­ளி­னதும் அதி­ருப்­தியைச் சம்­பா­தித்­து­விட்டார் என்­பதே நிதர்­ச­ன­மாகும்.

நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள நெருக்­கடி முன்­னொரு போதும் எதிர்­கொண்­டி­ராத ஒன்­றாகும். இன்று வீதிக்கு இறங்­கினால் மக்கள் தமது அன்­றாடத் தேவை­க­ளுக்­காக வரி­சையில் நிற்க வேண்­டிய நிலை வந்­துள்­ளது. எரி­பொ­ரு­ளுக்­கா­கவும் எரி­வா­யு­வுக்­கா­கவும் மக்கள் வரி­சையில் நிற்­கி­றார்கள். சில வாரங்­க­ளுக்கு முன்னர் வரை பால்­மா­வுக்­காக வரி­சையில் நின்­றார்கள். குடி­வ­ரவு குடி­ய­கல்வு திணைக்­க­ளத்தில் கட­வுச்­சீட்­டுக்­காக மக்கள் கால்­க­டுக்கக் காத்து நிற்­கி­றார்கள். ஆட்சி மாற்­றத்தின் பின்னர் இலங்­கை­யி­லேயே வள­மான எதிர்­கா­லத்­துடன் வாழலாம் என கனவு கண்ட இளை­ஞர்கள் இன்று நாட்டை விட்டு வெளி­யே­று­வ­தையே முதன்மைத் தெரி­வாகக் கொண்­டுள்­ளார்கள்.

அந்­நியச் செலா­வணி கையி­ருப்பில் இல்லை. சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்தின் ஒரு பகுதி மூடப்­பட்­டுள்­ளது. கடன் சுமையில் நாடு சிக்கித் தவிக்­கி­றது. முன்­வைக்­கப்­பட்ட பட்­ஜெட்டில் மக்­க­ளுக்கு எந்­த­வித நிவா­ர­ணமும் இல்லை. சகல பொருட்­க­ளுக்கும் விலை அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் மக்­க­ளுக்கு வரு­மானம் கிடைப்­ப­தற்­கான வழிகள் அடைக்­கப்­பட்­டுள்­ளன. விவ­சா­யிகள் பாரிய நெருக்­க­டி­களை எதிர்­நோக்­கு­கி­றார்கள். மரக்­க­றி­களின் விலையும் அதி­க­ரித்­துள்­ளது. இரண்டு வரு­டங்கள் நிறைவில் ஜனா­தி­ப­தியும் அவ­ரது அர­சாங்­கமும் கொண்டு வந்­துள்ள மாற்­றங்­களே இவை.

“பொது ஜன பெர­மு­னவின் வெற்­றி­யை­ய­டுத்து நாடெங்கும் சுவர்­களின் சித்­திரம் வரைந்து தமது மகிழ்ச்­சியை வெளிப்­ப­டுத்­திய இளை­ஞர்கள், இன்று நாட்­டை­விட்டு வெளி­யே­று­வது கவ­லைக்­கு­ரி­யது. அவர்­க­ளது மனக்­கு­றைகள் தீர்க்­கப்­பட வேண்டும்” என பிர­தமர் மஹிந்த ராஜ­பக்ச அண்­மையில் இடம்­பெற்ற கட்­சியின் 5ஆவது வருட பூர்த்தி நிகழ்வில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார். இதுவே யதார்த்­த­மாகும். ஆனால் இந்த யதார்த்­தத்தைப் புரிந்து கொண்டு செயற்­ப­டு­வ­தாக அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களில் காண முடி­ய­வில்லை.

நாடு எதிர்­நோக்கும் இவ்­வா­றான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வை வழங்­கு­வது குறித்துச் சிந்­திப்­ப­தற்குப் பதி­லாக அர­சாங்கம் இன­வா­தத்தை ஊட்டி வளர்ப்­ப­திலும் பொலிஸ் மற்றும் இரா­ணுவ பலம் கொண்டு ஜன­நா­யக குரல்­களை நசுக்­கு­வ­தி­லுமே குறி­யாக இருக்­கி­றது.
பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய மக்கள் சக்தி, மக்கள் எதிர்­நோக்கும் சம­கால நெருக்­க­டி­களை முன்­வைத்து கொழும்பில் ஏற்­பாடு செய்த பாரிய ஆர்ப்­பாட்டம் நேற்று முன்­தினம் இடம்­பெற்­றது. எனினும் இதில் பங்­கேற்­ப­தற்­காக கொழும்­புக்கு வெளி­யி­லி­ருந்து வருகை தந்­த­வர்­களை பொலிஸ் பலம் கொண்டு தடுத்து நிறுத்­தி­யமை ஜன­நா­யக விரோத செயற்­பா­டாகும். ஆர்ப்­பாட்­டங்­களை தடுப்­ப­தற்­காக பொலிசார் நீதி­மன்ற அனு­ம­தியை கோரிய போதிலும், சுமார் 60க்கு மேற்­பட்ட நீதி­மன்­றங்கள் அக் கோரிக்­கையை நிரா­க­ரித்­தமை சற்று ஆறுதல் தரும் நிகழ்­வாகும். கொவிட் பரவல் காலத்தில் இவ்­வா­றா­ன­தொரு பாரிய ஆர்ப்­பாட்டம் இடம்­பெ­று­வது குறித்த விமர்­ச­னங்கள் இருந்­தாலும், மக்­களின் ஜன­நா­யக உரி­மையை அதி­கார பலம் கொண்டு அடக்க முனை­வதை ஒரு­போதும் அனு­ம­திக்க முடி­யாது.

இன்னும் சில வாரங்­களில் எரி­பொ­ரு­ளுக்கு தட்­டுப்­பாடு ஏற்­படும் என்ற அச்சம் மக்­களை ஆட்­கொண்­டுள்­ளது. இந்த இக்­கட்­டான கால­கட்­டத்தில் இலங்­கைக்கு கைகொ­டுப்­ப­தற்கு எந்­த­வொரு நாடும் தயா­ரில்லை என்­பதே யதார்த்­த­மாகும். கடந்த காலங்­களில் கைகொ­டுத்த அரபு நாடு­களும் இப்­போது இலங்­கைக்கு உத­வு­வதில் பின்­னிற்­கின்­றன. இதற்கு கடந்த காலங்­களில் இலங்கை முஸ்­லிம்கள் விட­யத்தில் இந்த அர­சாங்கம் நடந்து கொண்ட விதமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. “முஸ்லிம்களின் பெற்றோல் எங்களுக்குத் தேவையில்லை, சூரிய சக்தியில் வாகனங்களைச் செலுத்துவோம்” எனக் கூறி இனவாதத்தைக் கிளறிய தேரர்களை இன்று அரங்கில் காண முடியவில்லை.

இனவாதம் ஒருபோதும் கைகொடுக்காது என்பதனை இலங்கை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்த நெருக்கடியிலிருந்து நாம் அனைவரும் இலங்கையர்களாக ஒன்றுபட்டு மீண்டெழ வேண்டும். அதுவே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.