அஹ்னாபுக்கு எதிராக குற்ற பகிர்வுப் பத்திரம்

அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்தி வைப்பு

0 363

(எம்.எப்.எம்.பஸீர்)
‘நவ­ரசம்’ என்ற கவிதைத் தொகுப்பு புத்­த­கத்தை எழு­தி­ய­மைக்­காக கைது செய்­யப்­பட்­டுள்ள அஹ்னாப் ஜஸீம் எனும் இளம் கவிஞர், கொழும்பு விளக்­க­ம­றியல் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

புத்­தளம் மேல் நீதி­மன்றில் சட்ட மா அதி­பரால், பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழ் தண்­ட­னைக்­கு­ரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக கூறி இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில், இந்த குற்றப் பகிர்வுப் பத்­திரம் மீதான விசா­ர­ணைகள், முதற் தட­வை­யாக எதிர்­வரும் 15 ஆம் திகதி திங்­க­ளன்று புத்­தளம் மேல் நீதி­மன்றில் விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.

இத­னி­டையே அஹ்­னாபின் கைதும் தடுப்புக் காவலும் சட்ட விரோ­த­மா­னது எனக் கூறி உயர் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள எஸ்.சி.எப்.ஆர். ஏ 114/ 21 எனும் அடிப்­படை உரிமை மீறல் மனு எதிர்­வரும் டிசம்பர் 8 ஆம் திக­தி­வரை ஒத்தி வைக்­கப்­பட்­டுள்­ளது. கடந்த 5ஆம் திகதி இந்த மனு உயர் நீதி­மன்றில் நீதி­ய­ரசர் எஸ். துரை­ராஜா தலை­மை­யி­லான நீதி­ய­ர­சர்கள் குழாம் முன்­னி­லையில் பரி­சீ­லிக்­கப்­பட்ட போதே, மேல­திக பரி­சீ­ல­னைகள் இவ்­வாறு ஒத்தி வைக்­கப்­பட்­டன. இதன்­போது மனு மீதான பரி­சீ­லி­னை­களில் இருந்து நீதி­ய­ரசர் ஜனக் டி சில்வா வில­கி­ய­துடன், உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் குறித்த ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழுவில் அங்கம் வகித்­த­மையை அவர் கார­ண­மாக குறிப்­பிட்டார்.

இதன்­போதே முதற் தட­வை­யாக, அஹ்னாப் ஜஸீ­முக்கு எதி­ராக குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள விட­யத்தை, மனுவில் பிர­தி­வா­தி­க­ளுக்­காக ஆஜ­ராகும் மேல­திக சொலி­சிட்டர் ஜெனரால் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நரின் புள்ளே அறி­வித்­தி­ருந்தார்.
கடந்த 5 ஆம் திகதி அடிப்­படை உரிமை மீறல் மனு பரி­சீ­லிக்­கப்­பட்ட போது, அன்­றைய தினம் மன்றில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சஞ்­சய வில்சன் ஜய­சே­க­ர­வுடன் ஆஜ­ரான ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஏ.ஏ.எம். இல்­லியாஸ், மூன்றாம் பிர­தி­வாதி ( ரி.ஐ.டி. பணிப்­பாளர்) தாக்கல் செய்­துள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆட்சேபனைகளுக்கு எதிரான பதில் வாதங்களை சமர்ப்பித்தார்.

இந் நிலையிலேயே மனு மீதான மேலதிக பரிசீலனைகள் டிசம்பர் 8 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.