பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் முஸ்லிம் இளைஞர்கள் கைது: முஸ்லிம் எம்.பி.க்கள் வாய்திறப்பதில்லை

குற்றம் செய்யாதவர்களை விடுவியுங்கள்: சாணக்கியன் எம்.பி.

0 661
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற
குற்றச்சாட்டின் கீழ் 300 இளைஞர்கள் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் ஏன் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் பலர் சிறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள்.

 

(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நூற்­றுக்­க­ணக்­கான முஸ்லிம் இளை­ஞர்கள் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சிறை வைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இவர்களில் பலர் சிறு குற்­றச்­செ­யல்கள் புரிந்­த­வர்கள். இவர்­கள்­பற்றி எந்­தவொரு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் பேசு­வ­தில்லை என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இராசமாணிக்கம் சாணக்­கியன் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற அமர்வில் “ஒரே நாடு ஒரே சட்டம்’’ நிய­மனம் தொடர்பில் நேற்றுமுன்தினம் உரை­யாற்­று­கையில் அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது: நாட்டின் தலைவர் இன்று ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்­பாக செய­ல­ணி­யொன்­றினை நிய­மித்­துள்ளார். ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்ற எண்­ணக்­க­ரு­வைப்­பற்றி கூறி­ய­போது அனை­வ­ருக்கும் சட்டம் சம­மாக அமுல்­ப­டுத்­தப்­ப­டு­மென்றே நாட்டு மக்கள் நிலைத்­தார்கள்.

ஏறாவூர் பொலிஸ் சம்­ப­மொன்­றினை நான் கண்டேன்.ஏறாவூர் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் தமிழ் இளைஞர் ஒரு­வரை தாக்­கி­யது பற்றி நான் அமைச்சர் சரத் வீரசேகரவிடம் முறையிட்டேன். உடனே அமைச்சர் அந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை பதவி விலக்கி விசா­ர­ணை­களை ஆரம்­பித்தார்.

இதே­போன்று மூன்­று­தி­னங்­க­ளுக்குப் பின்பு கேகா­லையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவர் தாக்­குதல் நடத்­தி­யி­ருந்தார். ஆனால் அவ­ருக்கு இட­மாற்றம் மாத்­தி­ரமே வழங்­கப்­பட்­டது பொது­வாக ஒரே நாடு ஒரே சட்டம் என்றால் அனை­வ­ருக்கும் சம­மாக சட்டம் அமுல்­ந­டத்­தப்­படும் என நாம் எதிர்­பார்த்தோம். இங்கு என்ன நடந்­தி­ருக்­கி­ற­தென்றால் பண­முள்­ள­வ­ருக்கு ஒரு சட்டம். பணம் இல்­லா­த­வ­ருக்கு ஒரு சட்டம். உயர்­ப­த­வி­யி­லுள்­ள­வ­ருக்கு ஒரு சட்டம். கீழ் பத­வி­யி­லுள்­ள­வ­ருக்கு ஒரு சட்டம். ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணிக்கு தலை­வ­ராக ஞான­சார தேரர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பிலோ அல்­லது செய­ல­ணிக்கு தமிழ் உறுப்­பினர் நிய­மிக்­கப்­ப­டாமை பற்­றியோ நாங்கள் குழப்­ப­ம­டை­ய­வில்லை. இந்­நாட்­டி­லுள்ள முஸ்­லிம்­களும், தமி­ழர்­களும் தேவை­யில்லை என்ற கொள்­கை­யையே அர­சாங்­கத்தின் கொள்­கை­யா­க­வுள்­ளது.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு என்ற வகையில் பிரி­வி­னை­யற்ற ஒரே நாட்­டினுள் அனை­வ­ரதும் அர­சியல் உரி­மை­களைப் பெற்­றுத்­தா­ருங்கள் என்றே நாம் கோரு­கிறோம். ஆனால் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற எண்­ணக்­க­ருவின் கீழ் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி செய­ல­ணிக்கு தமிழர் ஒரு­வ­ரை­யேனும் நிய­மிக்­கா­தது நியா­ய­மற்­றது. அதன் தலைவர் நாட்டின் சட்­டத்தை மீறிய குற்றம் புரிந்து சிறை சென்று ஜனா­தி­ப­தியின் பொது மன்­னிப்பின் கீழ் விடு­த­லை­யா­னவர்.

உயிர்த்த ஞாயிறு ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கை­யிலும் அவ­ருக்­கெ­தி­ராக நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு பரிந்­துரை செய்­யப்­பட்­டுள்­ளது. இவ­ரையே ஒரே நாடு ஒரே சட்டம் செய­ல­ணியின் தலை­வ­ராக ஜனா­தி­பதி நிய­மித்­துள்ளார். நாங்கள் ஒன்­றி­ணைந்து வாழும்­போது வேண்டாம் நீங்கள் போங்கள் என்று விரட்­டு­வது போன்­றுள்­ளது என்றே எம்மால் தெரி­விக்க முடி­கி­றது.

அர­சாங்­கத்­துக்கும் இவை தேவை­யாக உள்­ளது. எம்மை வேண்டாம் என்று அர­சாங்கம் கூறு­கி­றது என்­பதே எனது நிலைப்­பாடு. தொடர்ந்தும் எம்மை தள்­ளு­கி­றீர்கள். நாம் எங்கு போவது எங்­க­ளுக்குப் போவ­தற்கு இட­மில்லை.

இதேவேளை ஒரே நாடு ஒரே சட்­டத்தின் கீழ் சிங்­க­ளவர், தமிழர், கத்­தோ­லிக்கர், முஸ்­லிம்கள் ஒன்­றாக இருப்­பது என்­பது பகற்­க­னவு மாத்­தி­ரமே.
நான் ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்து அத­னை­விட வேறெ­தையும் எதிர்­பார்க்­க­வில்லை. நான் அவ­ருக்கு வாக்­க­ளிக்­க­வில்லை. பிர­சாரம் செய்­ய­வில்லை. ஜனா­தி­பதி இவ்­வாறு செய்வார் என நாம் அறிந்­தி­ருந்தோம் என்­றாலும் 69 இலட்சம் மக்கள் எதிர்­பார்ப்­புடன் ஜனா­தி­ப­திக்கு வாக்­க­ளித்­தார்கள்.

ஜனா­தி­பதி சிறு­பான்­மை­யி­னரின் உரி­மை­களை வழங்­க­மாட்டார் என நாம் அறிந்­தி­ருந்தோம். ஆனால் ஒன்­றினைக் கூற­வேண்டும்.மத்­திய வங்கி ஊழல் மற்றும் உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுப்பார் என எதிர்­பார்த்­தி­ருந்தோம். ஆனால் இன்­று­வரை என்ன நடந்­துள்­ளது. மத்­தி­ய­வங்­கியின் கொள்­ளையர்­களில் ஒரு­வரையாவது பிடித்­தார்­களா? மத்­திய வங்கி பற்றி இப்­போது பேசப்­ப­டு­கி­றதா?

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்­களை கழுத்­தைப்­பி­டித்து இழுப்­பார்­களா? என்­பது சந்­தே­க­மாக உள்­ளது. ஆயர் சிறில் காமி­னியை சி.ஐ.டிக்கு அழைக்கும் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டதைக் கண்டோம். இது மாறான செயற்­பா­டாகும்.
பயங்­க­ர­வாத தடை சட்­டத்­தின்கீழ் தமிழ் இளை­ஞர்கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள். முக நூலில் இட்ட பதி­வு­க­ளுக்­கா­கவே இவர்கள் கைது செய்­யப்­ப­டு­கி­றார்கள்.
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற குற்­றச்­சாட்டின் கீழ் 300 இளை­ஞர்கள் சிறையில் இருக்­கி­றார்கள்.

முஸ்லிம் இளை­ஞர்கள் ஏன் பயங்­க­ர­வாத தடை­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்கள் என்­பதை ஆராய்ந்தால் அவர்கள் சிறு குற்­றச்­செ­யலில் ஈடு­ப­ட்டவர்­களே. இது­பற்றி எந்­தவோர் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­வது பேசு­வ­தில்லை. நாங்கள் என்றால் தமிழ் இளை­ஞர்கள் பற்றி பேசு­கிறோம். யாரா­வது குற்றம் செய்­தி­ருந்தால் தண்­டனை வழங்குங்கள். இன்றேல் விடுதலை செய்யுங்கள்.

உங்களால் தமிழ், முஸ்லிம் இளைஞர்களை சிறையில் வைத்திருக்க முடியும். ஆனால் இன்று போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நாட்டில் தொடரும்போது ஆசிரியர்கள் பாதையில் இறங்கியுள்ளார்கள்.இந்நிலை தொடர்ந்தால் மக்கள் ராஜபக்ஷ குடும்பத்தையும் தாமரை மொட்டு கும்பலையும் கழுத்தைப்பிடித்து இழுத்து வெளியேற்றுவார்கள்.

20க்கு வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்கும் விரைவில் இதே நிலை­மையே ஏற்­படும் என்றும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சாணக்­கியன் தெரிவித்தார்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.