இராஜினாமா தீர்வாகுமா?

0 415

இலங்கை முஸ்­லிம்­களைப் பக­டைக்­காய்­க­ளாகப் பயன்­ப­டுத்தி தமது அர­சியல் தேவை­களை நிறை­வேற்றிக் கொள்­கின்ற தந்­தி­ரோ­பா­யத்­தையே ஜனா­தி­ப­தியும் அவர் சார்ந்த கட்­சி­யி­னரும் தொடர்ந்தும் கடைப்­பி­டித்து வரு­கின்­றனர் என்­ப­தையே அண்மைக் கால நிகழ்­வுகள் சுட்­டி­நிற்­கின்­றன.

எவ்­வாறு உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைப் பயன்­ப­டுத்­தியும் அதன் பின்னர் கட்­ட­விழ்க்­கப்­பட்ட இன­வாதப் பிர­சா­ரங்­க­ளையும் பயன்­ப­டுத்தி ஜனா­தி­பதித் தேர்­த­லிலும் பொதுத் தேர்­த­லிலும் வெற்றி பெற்­றார்­களோ அதே­போன்று தற்­போது நாட்டில் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரும் போராட்­டங்­க­ளி­லி­ருந்தும் மக்­க­ளி­னதும் ஊட­கங்­க­ளி­னதும் கவ­னத்தைத் திசை­தி­ருப்பும் நோக்கில் தினம் தினம் புதிய புதிய விவ­கா­ரங்கள் அவிழ்த்­து­வி­டப்­ப­டு­கின்­றன.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ எனும் ஜனா­தி­பதி செய­ல­ணியும் இந்தப் பின்­ன­ணி­லேயே நிறு­வப்­பட்­டுள்­ள­தாக பலரும் சந்­தே­கிக்­கின்­றனர். இந்த சட்ட விவ­காரம் குறித்து ஏலவே நீதி­ய­மைச்சர் உரிய சட்­டத்­துறை நிபு­ணர்கள் மூல­மாக நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், அதற்குப் புறம்­பாக பொருத்­த­மற்ற, சட்­டத்தை மதிக்­காத நபர் ஒரு­வரின் தலை­மையில் செய­லணி ஒன்றை நிறு­வி­யி­ருப்­ப­தா­னது ஜனா­தி­ப­தியின் உள்­நோக்­கத்தை தெளி­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளது.

இதற்­கப்பால் விரைவில் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தம், மாட­றுப்புத் தடை போன்ற சிங்­கள மக்­களின் கவ­னத்தை ஈர்க்­கின்ற அதே­நேரம் முஸ்­லிம்­களைப் பாதிக்­கின்ற பல்­வேறு சூடான விவ­கா­ரங்கள் களத்­துக்கு வர­வுள்­ளன. இவற்றின் மூல­மாக நாட்டில் மேலும் இன­வாதம் வளர்க்­கப்­பட்டு அதன் மூலம் எதிர்­வரும் தேர்­தல்­களில் வாக்­கு­களைச் சம்­பா­திக்­கலாம் என்­ப­தற்­கான திட்­டங்கள் எப்­போதோ தீட்­டப்­பட்­டு­விட்­டன.
துர­திஷ்­ட­வ­ச­மாக, உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலைத் தொடர்ந்து அர­சியல், சிவில் மற்றும் மார்க்க ரீதி­யாக எமது தலை­மைத்­து­வங்கள் பல­வீ­னப்­பட்­டுள்­ள­மை­யா­னது இவ்­வா­றான சவால்­களை துணிந்து எதிர்­கொள்ள முடி­யாத நிலைக்கு சமூ­கத்தைத் தள்­ளி­விட்­டுள்­ளது.
அமைச்­ச­ர­வையில் கூட ஒரே­யொரு முஸ்லிம் பிர­தி­நி­தியே உள்ளார். அவர் ஜனா­தி­ப­திக்கு மிக நெருக்­க­மா­ன­வ­ராக இருந்தும் கூட சமூக விவ­கா­ரங்கள் தொடர்பில் அவரால் எதையும் சாதிக்க முடி­யாத நிலையே உள்­ளது. தான் தேசியப் பட்­டியல் ஊடாக நிய­மிக்­கப்­பட்­டவர் என்ற வகையில் தன்னால் எல்லா விட­யங்­க­ளிலும் எதிர்த்து நிற்க முடி­யாது என்ற கார­ணத்தை நீதி­ய­மைச்சர் அலி சப்ரி அடிக்­கடி முன்­வைத்து வரு­கிறார். ஞான­சார தேரர் தலை­மை­யி­லான செய­லணி விட­யத்தில் கூட விட­யத்­துக்குப் பொறுப்­பான அமைச்சர் என்ற வகையில் ஜனா­தி­பதி தன்னை கலந்­தோ­லோ­சிக்­காமை தன்னை கவ­லைக்­குள்­ளாக்­கி­யுள்­ள­தாக அவர் குறிப்­பி­டு­கிறார். இதனால் தான் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­ய­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்­டுள்ளார்.

நீதி­ய­மைச்சர் இவ்­வாறு பத­வியை இரா­ஜி­னாமாச் செய்­வது ஒரு­போதும் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்­வினைத் தரப் போவ­தில்லை. முஸ்லிம் தனியார் சட்­டத்தை இல்­லா­தொ­ழிக்­காது அதில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டிய கடப்­பாடு அவ­ருக்கு உள்­ளது. ஓய்வு பெற்ற நீதி­ய­ரசர் சலீம் மர்சூப் தலை­மை­யி­லான குழுவின் அறிக்­கையில் உள்ள சிபா­ரி­சுகள் சட்­டத்­தி­ருத்­தங்­க­ளாக உள்­வாங்­கப்­பட வேண்டும். மாறாக தனியார் சட்டம் இல்­லா­தொ­ழிக்­கப்­படக் கூடாது.

தற்­போ­தைய செய­லணி பொருத்­த­மற்­றது எனின் அதனை அர­சாங்­கத்­திற்கும் அமைச்­ச­ர­வைக்கும் உள்­ளி­ருந்து எதிர்ப்­பதே சம­யோ­சி­த­மா­ன­தாகும். அமைச்சுப் பத­வியை இரா­ஜி­னாமாச் செய்த பிறகு அலி சப்­ரியின் கருத்­துக்கள் செவி­ம­டுக்­கப்­படும் என்­ப­தற்கு எந்­த­வித உத்­த­ர­வா­தமும் இல்லை.

அமைச்சர் அலி சப்­ரியின் அர­சியல் நிலைப்­பா­டுகள் தொடர்பில் பல்­வேறு விமர்­ச­னங்கள் உள்ள போதிலும் அவர் சமூ­கத்தின் நலன்­க­ளுக்கு எதி­ராக தீர்­மா­னங்­களை எடுக்­க­மாட்டார் என்ற நம்­பிக்­கையும் எமக்­குள்­ளது. அந்த வகையில் தற்­போது அவர் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டி­யா­னது மிகவும் நிதா­ன­மாக கையா­ளப்­பட வேண்­டி­ய­தாகும். இன­வாத சக்­தி­களை எதிர்க்­கிறோம் என்ற போர்­வையில் இருக்­கின்ற குறைந்­த­பட்ச அதி­கா­ரங்­க­ளையும் கைவி­டு­வது நல்­ல­தல்ல. நீதி­ய­மைச்சர் என்ற வகையில் அவர் முன்­னெ­டுத்­து­வரும் சட்­டத்­து­றை­சார்ந்த வேலைத்­திட்­டங்கள் முன்­னேற்­ற­க­ர­மா­ன­வை­யாக நோக்­கப்­ப­டு­கின்­றன. அவை மேலும் வினைத்திறனாக முன்னெடுக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி தன்னிச்சையான தீர்மானங்களை எடுக்கிறார் என்பதும் அவர் இராணுவ பாணியில் நாட்டை வழிநடாத்த முற்படுகிறார் என்பதும் அவரது அண்மைக்கால தீர்மானங்களில் இருந்து நன்கு புலனாகிறது. முஸ்லிம்களின் விவகாரத்தில் மாத்திரமன்றி நாட்டின் தேசிய விவகாரங்களிலும் ஜனாதிபதி தவறான பாதையில் செல்கிறார் என்பதை அவருக்கு மிக நெருக்கமானவர் என்றவகையில் உணர்த்த வேண்டிய கடப்பாடு அலி சப்ரிக்கு உள்ளது. அதனை அவர் சரிவரச் செய்வார் என நம்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.