ஹிஜாஸுக்கு பிணையளிப்பது குறித்து நவ. 19இல் தீர்மானம்

விசாரணை ஜனவரியில்

0 396

(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்­த­ஞா­யிறு தின தொடர்  தற்­கொலை தாக்­கு­தல்கள் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கைது செய்­யப்­பட்டு சி.ஐ.டி.யில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்து பின்னர் தற்­போது விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு பிணை­ய­ளிப்­பதா இல்­லையா என்­பது தொடர்­பி­லான தீர்ப்பு எதிர்­வரும் நவம்பர் 19 ஆம் திகதி அறி­விக்­க­ப்படும் என புத்­தளம் மேல் நீதி­மன்றம் நேற்று அறி­வித்­தது. நேற்று இந்த  தீர்­மானம்  அறி­விக்­கப்­ப­ட­வி­ருந்த நிலையில், வழக்கு விசா­ரணை ஆரம்­பத்­தி­லேயே, அடுத்த தவ­ணையில் தீர்­மா­னத்தை அறி­விப்­ப­தாக நீதி­பதி அறி­வித்தார்.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ருக்கு எதி­ராக  சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டிய குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் புத்­தளம் மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள  குற்றப் பகிர்வுப் பத்­திரம்  மீதான வழக்கு விசா­ரணை நேற்று  மீளவும் விசா­ர­ணைக்கு வந்­தது.

இவ்­வ­ழக்கை விசா­ரிக்­க­வென விஷே­ட­மாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள சிலாபம் மேல் நீதி­மன்றின் நீதி­பதி குமாரி அபே­ரத்ன, புத்­தளம் மேல் நீதி­மன்­றுக்கு வருகை தந்த நிலையில், அவர் முன்­னி­லை­யி­லேயே இவ்­வ­ழக்கு விசா­ர­ணைக்கு வந்­தது.

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ், புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையின் அதிபர் மெள­லவி சலீம் கான் மொஹம்மட் சகீல்  ஆகி­யோரே இவ்­வ­ழக்கின்  பிர­தி­வா­தி­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்ள நிலையில், அவர்கள்  நேற்றும் மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வில்லை. கொரோனா தொற்று நிலை­மையை கருத்தில் கொண்டு அவர்கள் இவ்­வாறு ஆஜர் செய்­யப்பட்­டி­ருக்­க­வில்லை.

எனினும்  ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­க­ளான நளின் இந்­ர­திஸ்ஸ, பர்மான் காசிம் ஆகி­யோ­ருடன் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி அசித் சிறி­வர்­தன, சட்­டத்­த­ரணி ஹபீல் பாரிஸ் உள்­ளிட்ட குழு­வினர் ஆஜ­ரா­கினர்.

மெள­லவி சலீம் கான் மொஹம்மட் சகீல் சார்பில் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ர­ள­வுடன் சட்­டத்­த­ரணி நதீஹா அப்பாஸ் உள்­ளிட்டோர் ஆஜ­ரா­கினர்.

வழக்கு பரி­சீ­ல­னைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட போது முதலில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்ஸ, பிர­தி­வாதி  ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்­காக வாதங்­களை முன் வைத்தார்.

‘நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­களை உறுதி செய்­வ­தற்­காக, பிர­தி­வா­திக்கு தன்­பக்க நியா­யங்­களை முன் வைக்க தேவை­யான சான்­று­களை வழக்குத் தொடுநர் தரப்­பி­ட­மி­ருந்து நாம் எதிர்ப்­பார்க்­கிறோம். அவ்­வாரு எமக்கு அவ­சி­ய­மான சான்று ஆவ­ணங்­களை நாம் பட்­டி­ய­லிட்டு கைய­ளித்­தி­ருந்த நிலையில், அவற்றில் சில கிடைக்கப் பெற்­றுள்­ளன. மேலும் பல கிடைக்­க­வில்லை.

குற்றப் பத்­தி­ரி­கையில் குறிப்­பி­டப்பட்­டி­ருந்த சான்றுப் பட்­டி­யலில் அடங்­கி­யி­ருந்த புகைப்­படத் தொகுப்பின் பிர­தி­யையும் எமக்கு கைய­ளிக்­கு­மாறு கோரு­கின்றோம். அதே நேரம், சாட்சி கட்­டளை சட்­டத்தின் கீழ் முன் வைக்­கப்பட்­டுள்ள இலத்­தி­ர­ணியல் பொருட்­கலை பரி­சீ­லிக்க  இடம், நேரம், திக­தியை எமக்கு தறு­மாரும் நாம் கோரு­கின்றோம்.’ என தெரி­வித்தார். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.