சவூதிக்கான இலங்கை தூதுவராக அம்சா நாளை கடமையேற்பார்

0 415

(எம்.எஸ்.எம்.நூர்தீன்)

சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ள பி.எம்.அம்சா நாளை வெள்­ளிக்­கி­ழமை தனது தூதுவர் கட­மை­களை பொறுப்­பேற்­ப­தற்­காக சவூதி அரே­பியா நோக்கி பய­ண­மா­க­வுள்ளார்.

பல்­வேறு நாடு­களின் தூது­வ­ரா­கவும் பிரதி தூது­வ­ரா­கவும் செய­லா­ள­ரா­கவும் இரா­ஜ­தந்­தி­ரி­யா­கவும் கட­மை­யாற்­றிய பி.எம்.அம்சா சவூதி அரே­பி­யா­வுக்­கான இலங்கை தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

காத்­தான்­கு­டியைச் சேர்ந்த பி.எம்.எம்.அம்சா தனது ஆரம்­பக்­கல்­வியை காத்­தான்­குடி மெத்தைப் பள்ளி வித்­தி­யா­ல­யத்­திலும் உயர் கல்­வியை காத்­தான்­குடி மத்­திய மகா வித்­தி­யா­லய தேசியப் பாட­சா­லை­யிலும் கற்றார்.

யாழ்ப்­பாணம் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பட்­டப்­ப­டிப்பை நிறைவு செய்­த­துடன், 1988 ஆம் ஆண்டு செப்­டம்பர் முதலாம் திகதி கல்வி நிரு­வாக சேவையை முடித்து ஒரு கல்வி நிரு­வாக சேவை உத்­தி­யோ­கத்­த­ராக தெரிவு செய்­யப்­பட்டார். அத்­தோடு, லண்டன் மற்றும் அமெ­ரிக்­கா­வி­லுள்ள பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளுக்கு சென்று அங்கு உயர் கற்­கை­நெ­றி­களை மேற் கொண்டார்.

1994 ஆம் ஆண்டு இலங்கை வெளி­வி­கார அமைச்சின் உதவிப் பணிப்­பா­ள­ராக தெரிவு செய்­யப்­பட்டார் அங்கு கட­மை­யாற்­றிய பின்னர் 1995 முதல் 1999 ஆம் ஆண்டு வரை எகிப்த் நாட்டில் மூன்­றா­வது செய­லா­ள­ரா­கவும் அதற்கு பிறகு இரண்­டா­வது செய­லா­ள­ரா­கவும் கட­மை­யாற்­றி­ய­துடன் இலங்கை திரும்­பிய இவர் வெளி­வி­வ­கார அமைச்சின் பிரதிப் பணிப்­பா­ள­ராக கட­மை­யாற்­றினார்

2003 ஆம் ஆண்டு வரை சிங்­கப்பூர் நாட்டில் முதல் செய­லா­ள­ரா­கவும் கவுன்­சி­ல­ரா­கவும் கட­மை­யாற்­றி­யுள்ளார். பின்னர் இலங்கை திரும்­பிய இவர் இரண்­டரை வரு­டங்கள் 2004 ஆம் ஆண்­டி­லி­ருந்து 2006 ஜுன் மாதம் வரை வெளி­வி­வ­கார அமைச்சில் கட­மை­யாற்­றினார்.

2006ம் ஆண்டு ஜுலை மாதத்­தி­லி­ருந்து இந்­தி­யாவின் சென்­னைக்கு பிரதி உயர்ஸ்­தா­னி­க­ராக நிய­மிக்­கப்­பட்டு அங்கு சென்று பணி புரிந்தார். இதை நிறைவு செய்த பின்னர் 2009 ஆம் ஆண்டு இலண்­ட­னுக்கும் பேர்லின் நாட்­டுக்கும் பிரதி தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார்.

இதை­ய­டுத்து ஐரோப்­பிய ஒன்­றி­யத்­துக்கும் பெல்­ஜி­யத்­துக்கும் தூது­வ­ராக நிய­மிக்­கப்­பட்டார். இங்கு இரண்டு வரு­டங்கள் கட­மை­யாற்­றி­யதன் பின்னர் இலங்கை வந்து பொரு­ளா­தா­ரத்­துக்கு பொறுப்­பான பணிப்­பா­ள­ராக கடமை புரிந்தார். அதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜன­வரி மாத்­தி­லி­ருந்து 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரைக்கும் துருக்கி நாட்டு தூது­வ­ராக கட­மை­யாற்­றினார். இந்தக் காலப்­ப­கு­தியில் உக்ரைன், டார்­ஜி­யா­வுக்­கு­மான தூதுவராகவும் கடமையாற்றி இலங்கை திரும்பிய இவர் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து பொருளாதார பிரிவுக்கான மேலதிக செயலாளராக கடமையாற்றி வந்தார். இந்த நிலையில் தற்போது இவர் சவூதி அரேபியாவுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.